செய்திகள் :

BJP: நன்கொடை பெறுவதில் பாஜக முதலிடம்; ஒரே ஆண்டில் ரூ.4,340 கோடி; மற்ற கட்சிகள் பெற்றது எவ்வளவு?

post image

தேர்தல் நன்கொடை பத்திரங்களை பா.ஜ.க கூட்டணி அரசு அறிவித்த பிறகு பா.ஜ.க-விற்கு கிடைக்கும் நன்கொடை பல மடங்கு அதிகரித்தது. பா.ஜ.க-விற்குக் கிடைத்த நன்கொடையில் சொற்ப அளவு மட்டுமே காங்கிரஸ் கிடைத்துள்ளது. கடந்த 2023-24 ஆம் ஆண்டுக்கு ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் எவ்வளவு நன்கொடை கிடைத்திருக்கிறது என்பது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெறப்பட்டுள்ளது.

அத்தகவலில் நன்கொடையில் வழக்கம்போல் பா.ஜ.கவே முன்னிலையில் இருக்கிறது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கொடுத்துள்ள தகவலில் பா.ஜ.க 4,340.47 கோடி ரூபாயை நன்கொடையாகப் பெற்றுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 83.85 சதவீதம் அதிகமாகும். இதில் பா.ஜ.க 50.96 சதவீதம் அதாவது 2,211.96 கோடியை மட்டுமே செலவு செய்துள்ளது.

தேர்தல் பிரசாரம்

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,225.12 கோடி நன்கொடையாகக் கிடைத்திருக்கிறது. இது முந்தைய ஆண்டை விட 171 சதவீதம் அதிகமாகும். காங்கிரஸ் தான் நன்கொடையாக வாங்கிய தொகையில் ரூ.1025.25 கோடியைச் செலவு செய்துவிட்டது. இரு கட்சிகளும் பெற்ற நன்கொடையில் பெரும்பாலான பகுதி தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்திருக்கிறது. தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு 4507.56 கோடியை நன்கொடையாகப் பெற்றுள்ளன. இதில் தேசியக் கட்சிகள் 55.99 சதவீதம் நன்கொடை நிதியைப் பெற்றுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ரூ. 167 கோடியை நன்கொடையாகப் பெற்றுள்ளது.

ஆம் ஆத்மி கட்சி ரூ. 22 கோடியை நன்கொடையாகப் பெற்று, ரூ. 34 கோடியைச் செலவு செய்திருக்கிறது. ஆம் ஆத்மி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் முந்தைய ஆண்டு பெற்ற நன்கொடையை விட 2023-24ம் ஆண்டில் பெற்ற தொகை குறைவாகும். சுப்ரீம் கோர்ட் தேர்தல் பத்திர திட்டத்தைத் தற்போது ரத்து செய்துவிட்டது. அரசியல் கட்சிகளை மிரட்டி பா.ஜ.க தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து தேர்தல் பத்திரங்களுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அம்மனுக்களை விசாரித்துத் தேர்தல் பத்திரங்களை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது.

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

"என்னைச் சாதாரணமாக நினைக்காதீர்; உத்தவ் அரசையே கவிழ்த்தவன்..." - முற்றும் ஷிண்டே - பட்னாவிஸ் மோதல்!

மகாராஷ்டிராவில் கடந்த நவம்பர் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதல்வர் பதவியிலிருந்து விலக ஏக்நாத் ஷிண்டே மறுத்தார். ஆனால் பா.ஜ.க அவரைக் கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியிலிருந்து விலகச் செய்த... மேலும் பார்க்க

CBSE: மாநில அரசின் அதிகாரம் பறிப்பு? சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் விதிமுறையில் மாற்றம்

மாநில அரசின் அனுமதியில்லாமல் சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்கலாம் என்று மத்திய இடை நிலைக் கல்வி வாரியம் அறிவித்திருக்கிறது.தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை தொடர்பாக, மத்திய மற்றும் தமிழ்நாடு அரசுக்கு இடையே பிர... மேலும் பார்க்க

Veena Reddy: USAID நிதியை நிறுத்திய ட்ரம்ப்... பாஜக எம்.பி குறிப்பிட்ட வீணா ரெட்டி; யார் இவர்?

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா USAID மூலம் நிதியுதவி செய்து வருகிறது. அதில் இந்தியாவும் ஒன்று. 1950 களில் இந்தியாவின் வாக்களிப்போர் சதவிகிதம் சொல்லிக்கொள்ளுமளவு இல்லை. அதனால், இந்தியாவி... மேலும் பார்க்க

20 ஆண்டுகள்... ரூ.47 லட்சம் சொத்து வரி பாக்கி; நூதன முறையில் வரி வசூல் செய்த தஞ்சாவூர் மாநகராட்சி!

தஞ்சாவூர் சீனிவாசன் பிள்ளை சாலையில் தனியார் வணிக வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் 80 கடைகள் உள்ளன. வணிக வளாக நிர்வாகத்தினர் தஞ்சாவூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை செலுத்தாமல் இருந்துள்ளன... மேலும் பார்க்க

அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்ட விவகாரம்; ஒருவர் கைது... சிறையிலடைத்த போலீஸ்!

கடந்த ஆண்டு ஃபெஞ்சல் புயல் காரணமாகப் பெய்த கனமழையால் விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான வெள்ள பாதிப்புகளுக்குள்ளாகின. இதில், விழுப்புரம் மாவட்டத்தின் திருவெண்ணெய்நல்லூர் பகுதியில்... மேலும் பார்க்க

``20 ஆண்டுகளுக்கு முன்பே அரசியலுக்கு வந்திருந்தால்..." - மநீம 8-வது ஆண்டில் மனம் திறந்த கமல்ஹாசன்

தமிழக அரசியல் வரலாற்றில் இருபெரும் ஆளுமைகளான கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் மறைவுக்குப் பின்னர், 2018 பிப்ரவரி 21-ம் தேதி `மக்கள் நீதி மய்யம்' என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார் நடிகர் கமல்ஹாசன். மாற்ற... மேலும் பார்க்க