ஈரான் வான்வெளி அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள்..! -டிரம்ப்
Brother - Sister Exclusive : `ரஜினி சார் தான் படத்தோட கதையை சொன்னார்!' - சஞ்சய் பார்கவ் & காயத்ரி
`வள்ளி' திரைப்படத்தின் மூலம் வில்லனாக மக்களிடையே பிரபலமானவர் நடிகர் சஞ்சய் பார்கவ். இவருக்கு ஷில்பா, காயத்ரி என இரு சகோதரிகள். `மெட்டிஒலி' தொடரின் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் காயத்ரி. தற்போது காயத்ரியும், சஞ்சய் பார்கவும் தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கின்றனர். பிஸியாக இருந்தவர்களை ஷூட்டிங் இடைவேளையில் நம் அலுவலகத்தில் சந்தித்தோம்.
"நான்கு தலைமுறையா கலைக்குடும்பத்தைச் சேர்ந்தவங்க நாங்க! எங்க முத்தாத்தா, தாத்தா சித்தார் வாசிப்பாங்க. எங்க தாத்தா சினிமா இண்டஸ்ட்ரியில் இருந்தவர். லதா மங்கேஷ்கர்ல இருந்து எஸ்பிபி சார் வரைக்கும் இருந்த அத்தனை பாடகர்களுக்கும் சித்தார் வாசிச்சிருக்கார். எங்க அம்மா பரதநாட்டிய கலைஞர். அம்மா தான் எங்க குரு!" என்ற சஞ்சய் பார்கவை தொடர்ந்து பேசினார் காயத்ரி.
" அம்மா எங்களை டான்ஸ் கத்துக்கோங்கன்னு சொல்லி ஃபோர்ஸ்லாம் பண்ணல. ஆனா, நாங்க மூணு பேரும் அதைப் பார்த்தே தான் வளர்ந்தோம். எப்பவும் அண்ணா என்ன பண்றாரோ அதுதான் நானும் என் அக்காவும் பண்ணுவோம். அண்ணா படிச்ச ஸ்கூல், காலேஜ் தான் என் அக்கா படிச்சா, நானும் படிச்சேன். அண்ணாவுக்கு பரத நாட்டியம்ல ஆர்வம் வரவும் அவரும் கத்துக்கிட்டார். நாங்களும் கத்துக்கிட்டோம். எனக்கு அம்மாவே குருவா இருந்தது கொஞ்சம் டார்ச்சர் ஆகத்தான் இருந்தது. இப்ப புரியுது நாம ஒழுங்கா ஆடினா தான் மத்த பசங்களை கரெக்ட் பண்ண முடியும்னு ஆனா அப்ப அது டார்ச்சர் ஆகத்தான் இருந்தது!" என சிரிக்கவும் சஞ்சய் தொடர்ந்தார்.

"காயத்ரியை ரேவதி மேம் பார்த்துட்டு, `நடிப்பாளா?'ன்னு கேட்டாங்க. எங்களால உடனே ஓகே சொல்ல முடியல. ஏன்னா அப்ப இவ பிளஸ் டு லீவ்ல வந்திருந்தா. நான் மட்டும் தான் நடிச்சிட்டிருந்தேன். சின்னப் பசங்க இருக்காங்க. அதுல ஒரு ரோல் இருக்குன்னு சொன்னாங்க. அரவிந்த் சாமின்னு சொன்னதும் ஓகே சொல்லிட்டா. அப்படித்தான் `பாசமலர்கள்' படம் வந்தது. நான் ரொம்பவே ப்ரொடக்டிவ் பிரதர். ஷூட்ல அவ என்ன பண்ற? எப்படி இருக்கா?னு யோசிச்சிட்டே இருப்பேன் !" என்றவர் முடிக்கும் முன் கன்டின்யூ பண்ணினார் காயத்ரி.
" அந்தப் பட ஷூட் லீவு நாளில் தான் எடுத்தாங்க. கொஞ்ச நாளில் படம் முடிஞ்சது. ஆனா, அந்தப் படத்தோட மெமரீஸ் இப்ப வரைக்குமே இருக்கு. அஜித் சாருக்கு அந்த டைம்ல ஆசை ரிலீஸ் ஆகல. அவர் `ராஜாவின் பார்வையிலே' பண்றப்ப கூட ஆசை ரிலீஸ் ஆகல! நெக்ஸ்ட் இயர் பாருன்னு என்கிட்ட சொன்னார். அவ்ளோ ஹார்ட் ஒர்க்கிங் பர்சன். அந்தப் படத்துல சின்ன ரோல் தான். ஆனா, அந்த ரோலுக்குக் கூட அவ்ளோ ஹார்ட் ஒர்க் பண்ணினார். அதனால தான் இப்ப இந்த இடம் அவருக்கு கிடைச்சிருக்கு!" எனப் புன்னகைக்கவும் சஞ்சய் பார்கவிடம் `வள்ளி' அனுபவம் குறித்துப் பேசினோம்.

" தமிழ்ப் படம் எனக்கு கிடைச்சதுக்கு ரகுராம் மாஸ்டருக்குத்தான் நன்றி சொல்லணும். கிளாசிக்கல் டான்சர் தெரிஞ்ச பையன் வேணும்னு ரகுராம் மாஸ்டர் சொல்லி தான் `தங்கக்கொலுசு' படம் பண்ணினேன். அந்தப் படம் ரிலீஸ் ஆக கொஞ்சம் டைம் ஆச்சு. அப்ப இந்தப் பையன் கிளாசிக்கல் டான்ஸ் பண்ணுவான்னு சொல்லித்தான் என்னை ரஜினி சாரை மீட் பண்ண கூட்டிட்டுப் போனாங்க. நானும் என் அப்பாவும் தான் அவரை சந்திச்சோம். என் புரொடக்ஷன்ல பண்ற படம்னு சொல்லி ஒரு வாரத்துல சொல்றதா சொல்லி அனுப்பினாங்க. ஒரு வாரத்துக்குப் பிறகு ஷூட்டிங் வரச் சொன்னாங்க. எனக்கு அந்தப் பட கதை கூடத் தெரியாது. ராகவேந்திரா மண்டபத்தில் ஒரு மீட்டிங் நடந்தது. அந்த மீட்டிங்ல தமிழ் இண்டஸ்ட்ரியிலுள்ள பெரிய பெரிய ஆர்ட்டிஸ்ட் எல்லாம் இருந்தாங்க. அப்ப எனக்கு அவங்க யாரையுமே தெரியல. ரஜினி சார் சொல்லித்தான் அந்தப் படத்துல நான் வில்லன் அப்படிங்கிறதே தெரியும். அவர் தான் என்கிட்ட கதை சொன்னார்!" என்றார்.
இருவரும் இன்னும் பல விஷயங்களை நம்மிடையே பகிர்ந்து கொண்டனர். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!