செய்திகள் :

DMDK: 2026-ல் 'மக்கள் உரிமை மீட்பு மாநாடு' - பிரேமலதா தலைமையில் தேர்தலுக்கு தயாராகும் தேமுதிக!

post image

2026ம் ஆண்டு தேர்தல் வரவிருக்கும் நிலையில் கட்சிகள் தங்கள் கட்டமைப்பை புனரமைக்கவும் வலுப்படுத்தவும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில் தங்களது கட்சியின் மாநில மாநாட்டை அறிவித்துள்ளது தேமுதிக.

கேப்டன் என அனைவராலும் அன்போடு போற்றப்பட்ட நடிகரும் தேதிமுக கட்சியின் நிறுவனருமான விஜயகாந்த் 2023ம் ஆண்டு மரணமடைந்தார். அவரது இறப்புக்குப் பிறகு அந்தக் கட்சி சந்திக்கும் முதல் சட்டமன்ற தேர்தல் இதுவாகும்.

Vijayakanth | விஜயகாந்த்
Vijayakanth | விஜயகாந்த்

கடந்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் தேமுதிக அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

வருகின்ற 2026 ஜனவரி மாதம் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 நடைபெறும் என தேமுதிக அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், "தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் "மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0" வரும் 09.01.2026 ஆம் தேதி மாலை 02.45 மணியளவில் நடைபெறும்.

கழக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கொடியேற்றி, கலை நிகழ்ச்சியுடன் மாநாட்டை துவக்கி வைக்கிறார்.

தேமுதிக அறிக்கை
தேமுதிக அறிக்கை

இந்த மாநாட்டை சிறப்பாக நடத்திட தலைமை கழகம், மாநிலம், மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர், வார்டு, வட்டம், ஊராட்சி, கிளை கழகம், மகளிர் அணியினர் மற்றும் கழக தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொண்டு மாநாட்டை வெற்றியடைய செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்." எனத் தெரிவித்துள்ளனர்.

"தமிழ்நாடு முழுவதுமுள்ள CPIM அலுவலகங்களில் காதல் திருமணங்கள் நடத்திக் கொள்ளலாம்" - பெ.சண்முகம்

தமிழ்நாட்டில் சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று ஆளும் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை தொட... மேலும் பார்க்க

TVK: "விஜய், விஜயகாந்த் இடத்தை பூர்த்தி செய்வார்..." - தாடி பாலாஜி பேசியது என்ன?

இன்று மறைந்த நடிகரும் அரசியல் தலைவருமான விஜயகாந்த் பிறந்தநாள். அவருக்கு பல்வேறு தலைவர்கள் அரசியல், சமூக ஆளுமைகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் ஆதரவாளரான தாடி... மேலும் பார்க்க

கோவை: ``மது, பாலியல் சீண்டலில் அரசு பள்ளி ஆசிரியர்கள்" - நயினார் நாகேந்திரனின் குற்றச்சாட்டு

கோவையின் கிணத்துக்கடவு அரசு பள்ளியில் ஆசிரியர்களு மது அருந்தி வருவதாகவும் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாகவும் தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக அ... மேலும் பார்க்க

`விண்வெளிக்கு முதலில் சென்றது அனுமன் தான்' - 5 முறை எம்.பி அனுராக் தாக்கூர் பேச்சு

விண்வெளிக்கு முதலில் யார் சென்றது என்பது குறித்து பாஜக எம்.பி அனுராக் தாகூர் பேசியிருப்பது தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு இமாசல பிரதேசத்தில் உள்ள பி.எம் ஶ்ரீ பள்... மேலும் பார்க்க

``பாஜகவினரின் அறிவு செயல்பாடு நாளுக்கு நாள் அபாரமாகிறது'' - அனுராக் தாக்கூர் குறித்து சு.வெங்கடேசன்

தேசிய விண்வெளி தினத்தன்று இமாச்சலப் பிரதேசத்தின் உனாவில் உள்ள ஸ்ரீ ஜவஹர் நவோதயா வித்யாலயாவில் மாணவர்களுடன் பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் உரையாற்றி இருக்கிறார்.அப்போது, 'விண்வெளிக்குச் சென்ற முதல் நபர்... மேலும் பார்க்க