செய்திகள் :

Doctor Vikatan: அதிக புரோட்டீன் உணவுகள் ஹார்ட் அட்டாக்கை ஏற்படுத்துமா?

post image

Doctor Vikatan: என்னுடைய நண்பனுக்கு 38 வயதாகிறது. உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க விரும்புவான். சமீபகாலமாக அவன் உணவில் அதிக அளவில் புரோட்டீன் சேர்த்துக்கொள்கிறான். ஒருநாளைக்கு 5-6 முட்டைகள்,  சிக்கன், புரோட்டீன் பவுடர் என சாப்பிடுகிறான். கேட்டால் புரோட்டீன் உணவுகள்தான் தசைகளை வலுவோடு வைத்திருக்கும், தசைகளின் அடர்த்தி குறையாமல் பார்த்துக்கொள்ளும் என்கிறான். புரோட்டீன் அதிகம் சாப்பிட்டால் ஹார்ட் அட்டாக் வரும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இது உண்மையா.... என் நண்பன் செய்வது சரியா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்  

மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்

ஆரோக்கியமான உடல் கட்டமைப்புக்கும் செயல்பாட்டுக்கும் புரதச்சத்து என்பது மிகமிக முக்கியம். ஆனால், 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்பதைப் போல புரதச்சத்தும் அளவு தாண்டும்போது ஆபத்தானது. நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான். அளவுக்கதிக புரோட்டீன் உணவுகள் உங்கள் இதயநலனை பாதிக்கலாம், ஹார்ட் அட்டாக் ரிஸ்க்கை கொடுக்கலாம்.

அளவுக்கதிக புரோட்டீன் உடலுக்குள் போகும்போது இதயநோய்கள் வருவதற்கான ஆபத்து அதிகரிப்பதாக நிறைய ஆய்வுகள் வந்திருக்கின்றன. புரத உணவுகளில் உள்ள லூசின் (Leucine) என்ற அமினோ அமிலம், குறிப்பிட்ட அளவைத் தாண்டும்போது, ஹார்ட் அட்டாக் வருவதற்கான ரிஸ்க் அதிகரிக்கும். குறிப்பாக, அசைவ உணவுகளில் இருந்து உடலுக்குச் சேரும் புரதச்சத்தில் இந்த ஆபத்து இருக்கிறது. அதாவது ஒரு வேளைக்கு 25 கிராமுக்கும் அதிகமாக அசைவ புரதம் எடுக்கும்போது இந்த ரிஸ்க் இன்னும் அதிகம்.

இதய தமனிகளின் சுவர்களில் கொழுப்பு, கொலஸ்ட்ரால் மற்றும் பிற பொருள்கள் படிவதால் ஏற்படும் ஒரு நிலையை  அதிரோஸ்கிளிரோசிஸ் (Atherosclerosis) என்று சொல்கிறோம்.  இது இதய நோய், பக்கவாதம் மற்றும் பிற தீவிர உடல்நல சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

புரத உணவுகளில் உள்ள லூசின் (Leucine) என்ற அமினோ அமிலம், குறிப்பிட்ட அளவைத் தாண்டும்போது, ஹார்ட் அட்டாக் வருவதற்கான ரிஸ்க் அதிகரிக்கும்.

எனவே, உடல் எடைக்கேற்ற அளவு புரதச்சத்து எடுத்துக்கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும்.  அசைவ உணவுகளில் இருந்து கிடைக்கும் புரதச்சத்தைவிட, சைவ உணவுகளின் மூலம் கிடைக்கும் புரதம்தான் சிறந்தது, பாதுகாப்பானது. ஒருவேளை உணவில் 25 கிராமுக்கும் அதிகமாக புரோட்டீன் எடுத்துக்கொள்ள வேண்டாம்.

இவற்றை எல்லாம் உங்கள் நண்பருக்கு எடுத்துச் சொல்லுங்கள். அவரது உடல் எடை, உயரம், வாழ்க்கைமுறை போன்றவற்றுக்கு எவ்வளவு புரதம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு பின்பற்றச் சொல்லுங்கள். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

`முன்னிறுத்தப்பட்ட இந்தி; புறக்கணிக்கப்பட்ட கன்னட மொழி' - வைரலாகும் பெங்களூர் RSS நிகழ்ச்சி

கர்நாடக மாநிலம் பெங்களூரில் கடந்த வெள்ளிக்கிழமை அகில பாரதிய பிரதிநிதி சபா (ABPS) கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே கல... மேலும் பார்க்க

Parliament: பதாகைகளை ஏந்தி எதிக்கட்சிகள் கடும் அமளி; மக்களவை ஒத்திவைப்பு!

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வார விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் தொடங்கியது. மக்களவையிலும் - மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. மக்களவையில், தொகுதி மறு சீர... மேலும் பார்க்க

மதுரை: ``இந்த நிமிடம் வரை திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்'' - த.வா.க வேல்முருகன் சொல்வது என்ன?

நாம் தமிழர் கட்சியில் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்து கடந்த ஆண்டு வெளியேறிய வெற்றிக்குமரன் தன்னுடைய அமைப்பை தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைக்கும் நிகழ்ச்சி மதுரையில் நடந்தது.அதில் கலந்துகொள்ள வந்திருந்... மேலும் பார்க்க

Kerala BJP: கேரள பாஜக தலைவராகும் ராஜீவ் சந்திரசேகர்; கர்நாடகா டு கேரள அரசியல் என்ட்ரி! - யார் இவர்?

கேரள மாநில பா.ஜ.க தலைவராக இருக்கும் கே.சுரேந்திரனின் பதவிக்காலம் நிறைவடைவதை முன்னிட்டு புதிய தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. மாநில தலைவர் பதவிக்காக மாநில நிர்வாகிகள் எம்.டி.ரமேஷ், ஷோபா சு... மேலும் பார்க்க

``டிரம்ப் கொடுத்த நெருக்கடி'' - பதவியேற்றதும் நாடாளுமன்றத்தை கலைப்பது ஏன்? கனடா பிரதமர் விளக்கம்!

ஜஸ்டின் ட்ரூடோவிற்கு பின், கனடா பிரதமராக மார்க் கார்னே பதவியேற்று கிட்டதட்ட 10 நாள்கள் தான் ஆகியுள்ளது. அதற்குள், அவர் அடுத்த மாதம் (ஏப்ரல்) 28-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளார்.கன... மேலும் பார்க்க

Nitish Kumar: நிதிஷ் குமார் இஃப்தார் விருந்தை முஸ்லிம் அமைப்புகள் புறக்கணித்தது ஏன்?

வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2024-ஐ ஆதரித்ததற்காக, பீகார் முதல்வரும் ஜேடியு தலைவருமான நிதிஷ் குமார் நடத்திய இப்தர் நிகழ்வை முக்கிய முஸ்லிம் அமைப்புகள் புறக்கணித்திருக்கின்றன. மத்திய பா.ஜ.க அரசு கடந்த ஆ... மேலும் பார்க்க