நாடு கடத்தப்பட்ட ஒரு மாதத்திற்குள் மீண்டும் தில்லி திரும்பிய வங்கதேச திருநங்கை க...
'மனைவியோடு தொடர்பிலிருந்த சகோதரர்; கொலை செய்ய வெளிநாட்டில் இருந்து வந்த கணவர்' - அதிர்ச்சி சம்பவம்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள புள்ளான்விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரப்பன். இவருக்கு முருகேசன், பாஸ்கரன் என்ற இரு மகன்கள் உள்ளனர். முருகேசனுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் முருகேசன் மாலத்தீவில் பணிபுரிந்து வந்தார். இதற்கிடையில், முருகேசனின் சகோதரர் பாஸ்கரன் சாதி மறுப்புத் திருமணம் செய்த நிலையில் அவருக்கு 5 வயதில் ஒரு மகனும் உள்ளார். சாதி மறுப்புத் திருமணம் செய்ததை பாஸ்கரனின் பெற்றோர் ஏற்காததால் அவரது மனைவி அவரைப் பிரிந்து அவரது பிறந்த வீட்டுக்கு சென்றுவிட்டார்.
திருமணம் மீறிய உறவு?
இதனால், தனது மகனுடன் பாஸ்கரன் தனது பெற்றோர் வீட்டின் மேல் தளத்தில் வசித்து வந்துள்ளார். அதே வீட்டில் கீழ் பகுதியில் மாமனார், மாமியாருடன் வசித்து வந்த முருகேசனின் மனைவி தான் பாஸ்கரனின் மகனையும் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், பாஸ்கரனுக்கும், அவரது அண்ணிக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. நாளடைவில் இதுகுறித்து தெரிந்து பாஸ்கரனின் பெற்றோர் பாஸ்கரனை கண்டித்ததில், பாஸ்கரன் அவரது பெற்றோரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
கொலை... விபத்து நாடகம்!
இது தொடர்பாக, மூத்த மகன் முருகேசனுக்குத் தகவல் தெரிந்து, அவரது மனைவியிடம் விசாரித்த போது பாஸ்கரன் தான் தன்னை வலுக்கட்டாயமாக கொடுமைப்படுத்தி உறவில் வைத்திருப்பதாகக் கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த முருகேசன், தனது மனைவி மற்றும் குழந்தைகளை அவரது பெற்றோர் வீட்டுக்கு போக சொல்லியுள்ளார். இதனையடுத்து, வெளிநாட்டில் இருந்து யாருக்கும் தெரியாமல் இரவு நேரத்தில் வீட்டிற்கு வந்த முருகேசன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பாஸ்கரனை கொலை செய்திருக்கிறார்.

அதோடு, தனது தாய் மற்றும் தந்தை உதவியோடு அவரது சடலத்தை தூக்கிச் சென்று அவரது வீட்டின் அருகே இருக்கக் கூடிய சாலையில் விபத்தில் முருகேசன் இறந்தது போல் ஏற்பாடு செட்டப் செய்துஅங்கேயே அவரது உடலை போட்டார். அதன்பிறகு, வீட்டில் இருந்த ரத்தக் கறைகளை எல்லாம் பெற்றோரை கழுவ சொல்லி விட்டு, மீண்டும் வெளியூருக்குச் சென்று விட்டு, தம்பியின் மரணத்திற்கு வெளிநாட்டில் இருந்து வருவது போல மறுநாள் இரவு வீடு திரும்பி உள்ளார்.
பாஸ்கரனின் இறப்பு குறித்து சந்தேக மரணம் என முதலில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் குடும்பத்தினரை விசாரித்ததில் உண்மைகள் தெரிய வந்தது. இதனால், பாஸ்கரனின் தந்தை வீரப்பன், தாய் வசந்தா, அண்ணன் முருகேசன் மற்றும் அண்ணி ஆகியோரை வடகாடு காவல் நிலைய போலீஸார் காது செய்தனர். மனைவியோடு திருமணம் மீறிய உறவில் இருந்த தனது சகோதரரை வெளிநாட்டில் இருந்து வந்து இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.