Empuraan: ``மலையாள சினிமாவில் மட்டும் சிறப்பான படங்கள் வருவதாக சொல்வதை மறுக்கிறேன்'' - ப்ரித்விராஜ்
ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்திருக்கும் திரைப்படம் `எல்2: எம்புரான்'. இம்மாதம் 27-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இத்திரைப்படம்தான் ஐமேக்ஸ் திரையரங்குகளில் வெளியாகும் முதல் மலையாள திரைப்படம். இப்படத்தின் ஐமேக்ஸ் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்றைய தினம் மும்பையில் நடந்திருக்கிறது.

இந்த நிகழ்வில் பேசிய மோகன்லால், `` மோகன்லாலும் மம்முட்டியும்தான் மலையாள சினிமாவின் முன் மாதிரியாக இருந்து வருகிறார்கள். மஞ்சு வாரியர் ஒரு லெஜென்ட்!'' எனப் படத்தின் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இவர்கள் இருவரும் குறித்தும் பேசினார். இவரை தொடர்ந்து மோகன் லால் பேசுகையில், `` எனக்கு இதற்கு மேல் இப்படத்தைப் பற்றி என்ன சொல்வதென தெரியவில்லை. எம்புரான் ஒரு திரைப்படம் மட்டுமல்ல. எங்களின் இரத்தத்தையும், வியர்வையையும் இப்படத்திற்கு கொடுத்திருக்கிறோம். எம்புரான் படத்தில் ஒரு மேஜிக் இருக்கிறது." எனக் கூறியிருந்தார்.
இதனை தாண்டி சமீபத்திய பேட்டி ஒன்றில் மலையாள சினிமா பற்றி ப்ரித்விராஜ் பேசிய விஷயமொன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர், `` மலையாள சினிமா நல்ல பயணத்தில் சென்றுக் கொண்டிருப்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். நாங்கள் சிறந்த திரைப்படங்களையும், நல்ல கன்டென்ட்களையும் தொடர்ந்து பல வருடங்களாக கொடுத்து வருகிறோம்.

இந்த பயணம் என்றும் முடியாது என நான் நினைக்கிறேன். இந்த பயணம் என்றும் தொடரும். ஆனால், மலையாள சினிமாதுறை மட்டும்தான் சிறப்பான சினிமாக்கள் எடுத்து வருவதாக சொல்லும் விஷயத்தை நான் மறுக்கிறேன். அனைத்து துறைகளிலும் நல்ல சினிமாக்கள் தொடர்ந்து வருகின்றன." என்றார்.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks