செய்திகள் :

``FIR போட்டு ஜெயில்ல வேணாலும் அடைங்க!'' - தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் உண்ணாவிரதம்; மீண்டும் கைது

post image

சென்னை சென்ட்ரல் அல்லிக்குளம் அருகே இன்று காலை முதல் பணி நிரந்தரம் வேண்டியும் தனியார்மயத்தை எதிர்த்தும் 13 தூய்மைப் பணியாளர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கியிருந்தனர்.

அவர்களை பெரியமேடு காவல்துறையினர் இப்போது கைது செய்திருக்கின்றனர்.

கொருக்குப்பேட்டை
கொருக்குப்பேட்டை

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே, மண்டலங்கள் 5, 6 யைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் தனியார்மயத்தை எதிர்த்தும் பணி நிரந்தரம் வேண்டியும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் போராடியவர்களை ஆகஸ்ட் 13ஆம் தேதி நள்ளிரவில் காவல்துறையினர் கைது செய்தனர். ஆகஸ்ட் 14ஆம் தேதி மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

தனியார்மயத்துக்கு எதிராக, தூய்மைப் பணியாளர்கள் சார்பில் உழைப்போர் உரிமை இயக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணையில் உள்ளது.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 4ஆம் தேதியன்று சிந்தாதிரிப்பேட்டையின் மே தினப் பூங்காவில் அடுத்த கட்ட போராட்டத்தை பற்றி ஆலோசிக்க சுமார் 300 பெண் தூய்மைப் பணியாளர்கள் கூடினர்.

அங்கு கூடிய தூய்மைப் பணியாளர்களையும் காவல்துறையினர் கூண்டோடு கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.

சமூகநலக்கூடத்தில் அடைக்கப்பட்டிருந்த தூய்மைப் பணியாளர்கள்
சமூகநலக்கூடத்தில் அடைக்கப்பட்டிருந்த தூய்மைப் பணியாளர்கள்

இதைத்தொடர்ந்து, நேற்று சென்னை கொருக்குப்பேட்டை, இந்திரா நகரில் 13 பெண் தூய்மைப் பணியாளர்கள் தங்கள் வீட்டருகேயே பணி நிரந்தரம் வேண்டி உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

உடனடியாக அந்தப் பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, அந்தப் பெண்களையும், அவர்களுக்கு ஆதரவாக நின்ற தூய்மைப் பணியாளர்களையும் கைது செய்து சமூக நலக்கூடத்தில் வைத்திருந்தனர். நேற்று இரவு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இன்று காலையில் சென்னை சென்ட்ரல் அல்லிக்குளம் அருகே 13 பெண் தூய்மைப் பணியாளர்கள் ஒன்றாக அமர்ந்து உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கினர்.

விஷயம் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பெரியமேடு காவல்துறையினர், போராட்டத்தை தொடங்கிய 1 மணி நேரத்திலேயே அவர்களை கைது செய்து, புரசைவாக்கத்திலுள்ள சமூக நலக்கூடத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அல்லிக்குளம் அருகே போராடிய தூய்மைப் பணியாளர்கள்
அல்லிக்குளம் அருகே போராடிய தூய்மைப் பணியாளர்கள்

“முதலமைச்சர், எங்களுக்கு எதாச்சு நல்லது பண்ணணும்னு நினைச்சா, எங்க வேலையை திரும்ப கொடுங்க. 2 மாதமாக நாங்க எல்லாம் ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருக்கோம். இல்லன்னா எங்க மேல வழக்குப்பதிவு செஞ்சு ஜெயில் அடைங்க” என கைதான பெண் தூய்மைப் பணியாளர்கள் செய்தியாளர்களிடம் கூறினர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

`உங்கள் பிரச்னையை மட்டும் பார்க்கக் கூடாது..!' - கேள்வி கேட்ட விவசாயி; கடுப்பான எடப்பாடி பழனிசாமி!

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார். நேற்று அவர் கோவை மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர் மற்றும் கிணத்துக்கடவு தொக... மேலும் பார்க்க

ராஜினாமா மனநிலையில் நயினார் நாகேந்திரன்?

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்துவிட்டு வந்ததில் தொடங்கி, 'தேசிய ஜனநாயகக் கூட்டணியிலுள்ள கூட்டணிக் கட்சிகளை நயினார் நாகேந்திரன் சரியாக அரவணைக்கவில்லை' என்று... மேலும் பார்க்க

``இந்தியா, சீனா மீது 100% வரி விதிக்க வேண்டும்" - ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய ட்ரம்ப்!

ரஷ்யாவின் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர, இந்தியா மற்றும் சீனா மீது 100% இறக்குமதி வரி விதிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஃபைனான்சியல் டைம்ஸ் வெ... மேலும் பார்க்க

Israel: கத்தார் மீது வான்வழித் தாக்குதல்; ஹமாஸை குறிவைத்ததாகக் குற்றச்சாட்டு; அமெரிக்கா கண்டனம்!

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே தொடர்ந்து வரும் போரில் செப்டம்பர் 8, 2025 அன்று, ஜெருசலமின் வடக்கு புறநகர்ப் பகுதியில் உள்ள ரமோட் சந்திப்பு (Ramot Junction) என்ற இடத்தில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் இரண்டு பேர் ... மேலும் பார்க்க

ராஜினாமாவுக்குப் பிறகு ஜெகதீப் தன்கர் வெளியிட்ட முதல் அறிக்கை: சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு என்ன செய்தி?

இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வரலாற்றில் யாரும் பெற்றிடாத அதிக வாக்குகளுடன் வெற்றி பெற்றவர் ஜெகதீப் தன்கர்.2022-ல் நடைபெற்ற தேர்தலில், பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட ஜெகதீ... மேலும் பார்க்க