செய்திகள் :

Google Review: விடுதி குறையை ஆன்லைனில் சுட்டிக் காட்டிய மாணவர் மீது தாக்குதல்; நடந்தது என்ன?

post image

கர்நாடக மாநிலம் மங்களூரில், ஆன்லைனில் எதிர்மறையான விமர்சனம் எழுதியதற்காக 18 வயது பொறியியல் மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலபுரகியைச் சேர்ந்த விகாஸ் என்ற மாணவர், கடந்த ஆறு மாதங்களாக மங்களூரில் உள்ள ஒரு பணம் செலுத்தும் விருந்தினர் (PG) விடுதியில் தங்கியிருந்தார்.

Hostel
Hostel

அங்கு மோசமான சுகாதாரம், அசுத்தமான கழிப்பறைகள் மற்றும் உணவில் பூச்சிகள் இருப்பது போன்ற குறைகளைக் சுட்டிக் காட்டி கூகிளில் அந்த விடுதிக்கு ஒரு நட்சத்திர மதிப்பீடு வழங்கியிருக்கிறார். இது குறித்து PG விடுதியின் உரிமையாளர் சந்தோஷ் விகாஸை தொடர்புகொண்டு மதிப்பாய்வை நீக்கும்படி கோரியதாக கூறப்படுகிறது.

விகாஸ் மறுத்துவிட்டதால், சந்தோஷ் மற்றும் அவருடன் இருந்த நான்கு பேர் விகாஸை மிரட்டி தாக்கி மதிப்பாய்வை வலுக்கட்டாயமாக நீக்கச் செய்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த சம்பவம் மார்ச் 17-ம் தேதி இரவு கத்ரி காவல் நிலைய எல்லைக்குள் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Hostel Png
Hostel Png

விகாஸ் அளித்த புகாரின் பேரில் PG உரிமையாளர் சந்தோஷ் மற்றும் அவரது நான்கு கூட்டாளிகளுக்கு எதிராக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், இதற்கான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

`கொலை செய்துவிட்டேன், சொல்லிவிடுங்கள்...' - மனைவியைக் கொன்று சூட்கேஸில் உடலை அடைத்த இன்ஜினீயர்

இந்தியாவில் பெங்களூரு சாஃப்ட்வேர் தலைநகரமாக விளங்குகிறது. இதனால் நாடு முழுவதும் இருந்து சாப்ட்வேர் இன்ஜினீயர்கள் பெங்களூரு வந்து வேலை செய்கின்றனர். கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு மும்பையை சேர்ந்த ராக... மேலும் பார்க்க

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் சிக்கிய 70 வயது பாடகர்... ரூ.1.2 கோடியைப் பறித்த சைபர் கிரிமினல்கள்!

நாடு முழுவதும் அப்பாவி மக்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து அவர்களிடமிருந்து பணத்தை பறிக்கும் சம்பங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கிறது. மும்பை, ஐதராபாத் போன்ற நகரங்களில் இது போன்ற குற்றங்கள் அதிக அ... மேலும் பார்க்க

பெங்களூரு: ட்ராலியில் பெண்ணின் உடல் மீட்பு; போலீசாருக்கு போன் செய்த கணவர் கைது!

பெங்களூருவில் 32 வயதுடைய பெண் கௌரி அனில் சம்ப்ரேக்கர் உடலை ட்ராலியில் கண்டெடுத்துள்ளனர் பெங்களூரு போலீசார். தென்கிழக்கு பெங்களூருவை சேர்ந்தவர் ராகேஷ் ராஜேந்திர கெடேகர். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ப... மேலும் பார்க்க

`ஒரே சிரஞ்சில் போதை ஊசி போட்ட 10 பேருக்கு HIV பாதிப்பு' - கேரளாவில் அதிர்ச்சி!

கேரள எய்ட்ஸ் கண்ட்ரோல் சொசைட்டி கடந்த இரண்டு மாதங்களாக சர்வே ஒன்றை நடத்தியது. அதன் முடிவு வெளியிடப்பட்ட நிலையில் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.மலப்புறத்தில் ஒரே சிரஞ்சில் போதை ஊசி போட்டுக்கொண்ட 10 பேருக்... மேலும் பார்க்க

கொடைக்கானல் காட்டேஜ் ஓனர் எரித்துக் கொலை; மதுரை இளைஞர் கைது - நடந்தது என்ன?

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சரடி மெத்து பெருமாள்பள்ளத்தைத் சேர்ந்தவர் சிவராஜன் (58). இவர் அதேபகுதியில் காட்டேஜ் நடத்தி வந்தார். இவர் போதை பழக்கத்துக்கு அடிமையானதால் குடும்பத்தினர் மதுரை அழகர்கோயி... மேலும் பார்க்க

மதுரை: டாஸ்மாக் மதுக்கடையில் தகராறு; போலீஸ்காரரை தாக்கி கொலை செய்த கும்பல்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே போலீஸ்காரர் முத்துக்குமார் டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உசிலம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டரின் டிரைவராக கள்ளப்பட... மேலும் பார்க்க