செய்திகள் :

Haryana: 'நஷ்டமான தொழில்... காப்பீட்டுத் தொகையைப் பெறக் கொலை' - சினிமா பாணி சம்பவம்; என்ன நடந்தது?

post image

ஹரியானா மாநிலம் ஹிசாரைச் சேர்ந்தவர் ராம்மெஹர். கொரோனா பேரிடர் காலத்திற்கு முன்பு, தொழிற்சாலை நடத்தி வந்த இவர், லாக் டவுனின் போது இவரது தொழிற்சாலை பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. அதனால், அவரது கடன் அளவு ரூ.1.5 கோடிக்கு எகிறியுள்ளது.

என்ன செய்வதென்று தெரியாத ராம்மெஹருக்கு, தான் போட்டிருந்த ஆயுள் காப்பீடு ஞாபகத்திற்கு வந்துள்ளது. காப்பீடு மூலம் இவருக்குக் கிட்டதட்ட ரூ.1.5 கோடி கிடைக்கும். இதனால் பிளான் ஒன்றைச் செய்துள்ளார்.

பிளான் படி, தன் சாயலைப் போலவே இருக்கும் ராமலுவை 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-ம் தேதி மது குடிக்க வைத்துள்ளார் ராம்மெஹர். போதையிலிருந்து ராமலுவைக் கயிறு வைத்து இறுக்கிக் கொன்று, பின்னர் ராமலுவின் உடலைத் தனது காரில் போட்டு, அந்தக் கார் மீது டீசல் ஊற்றி தீ வைத்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு முன்பு, ராம்மெஹர் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.11 லட்சத்தை எடுத்துள்ளார்.

நஷ்டமடைந்த தொழில்...காப்பீட்டு தொகையை பெற கொலை!

சம்பவம் நடந்த அடுத்த நாளான அக்டோபர் 7-ம் தேதி, ராம்மெஹரின் குடும்பத்தினர் ராம்மெஹர் வீட்டுக்கு ரூ.11 லட்சத்தோடு காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார் என்றும், அப்போது அவரை ஒரு காரும், இரண்டு பைக்குகளும் பின் தொடர்ந்ததாகத் தங்களிடம் ராம்மெஹர் போனில் கூறியதாகவும், பின்னர், அவர் காரில் எரிந்த நிலையில் காணப்பட்டார் என்றும் காவல்நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.

இந்த நேரத்தில் ராம்மெஹரோ பத்திரமாகச் சத்தீஸ்கர் மாநிலத்திற்குத் தனது இரண்டு பெண் தோழிகளுடன் தப்பித்து சென்றுள்ளார். ஆனால், போலீஸார் விசாரணையில் ராம்மெஹர் உயிரோடு இருப்பது தெரிய வந்து அவரையும், அவரது கூட்டாளிகளையும் போலீசார் கைது செய்தனர். நான்கு ஆண்டுகளாக நடந்துக்கொண்டிருந்த இந்த வழக்கில் தற்போது கூடுதல் நீதிமன்றம் ராம்மெஹருக்கு ஆயுள் தண்டனையை வழங்கியுள்ளது. இறந்த ராமலு குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.

வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.

Click here: https://bit.ly/VikatanWAChannel

`549 கிராம் தங்கம்; 1 கிலோ கஞ்சா!’ - திருச்சி விமான நிலையத்தில் தொடர் கதையாகும் கடத்தல் சம்பவம்!

பேங்காக்கிலிருந்து ஏர் ஏசியா விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது, சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த ஒரு பெண் பயணியை... மேலும் பார்க்க

சிறுமலை: வெடிமருந்துடன் ஆண் சடலம் மீட்கப்பட்ட விவகாரம்; துப்பு துலக்கிய போலீஸ்!

திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை 17 ஆவது கொண்டை ஊசி வளைவு பகுதி அருகே புதருக்குள் ஒரு ஆண் சடலம் கிடந்தது. போலீஸார், வனத்துறையினர் விசாரிக்க சென்றபோது அருகே கிடந்த பேட்டரி, ஒயர்கள், வெடி மருந்து கிடந்துள்... மேலும் பார்க்க

அம்பத்தூர்: பேட்மிட்டன் பயிற்சியாளர் கொலை வழக்கில் மூவர் சரண்; விசாரணையில் வெளியான பகீர் பின்னணி

அம்பத்தூர் டீச்சர் காலனியைச் சேர்ந்தவர் தினேஷ்பாபு. பேட்மிட்டன் பயிற்சியாளரான இவர், தந்தையின் கட்டிட ஒப்பந்த வேலைகளையும் கவனித்து வந்தார். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தினேஷ்பாபு தனியாக... மேலும் பார்க்க

Seeman : சீமானிடம் கேட்கப்பட்ட கேள்விகள்; வீடியோ பதிவு - சமரசம் பேசியவர்களை விசாரிக்க முடிவு?

ஆஜரான சீமான்நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் நடிகருமான சீமான் மீது நடிகை பாலியல் புகாரை கடந்த 2011-ம் ஆண்டு கொடுத்தார். அதன்பேரில் சீமான் மீது பாலியல் வன்கொடுமை, மோசடி உள்பட 6 பிரிவுகளின... மேலும் பார்க்க

Tamannaah: கிரிப்டோகரன்சி மோசடி வழக்கு; தமன்னாவிற்குத் தொடர்பா? விசாரிக்க புதுச்சேரி போலீஸ் திட்டம்

நடிகை தமன்னா பாடியா கிரிப்டோகரன்சி மோசடியில் ஈடுபட்டு இருப்பதாகச் செய்தி வெளியாகி இருக்கிறது.ரூ.2.4 கோடி கிரிப்டோகரன்சி மோசடியில் ஈடுபட்டு இருப்பதாகவும், இது தொடர்பாக அவரிடம் பாண்டிச்சேரி போலீஸார் விச... மேலும் பார்க்க

சிறுமலை: புதருக்குள் ஆண் சடலம்; அருகே கிடந்த பொருள் வெடித்ததில் போலீஸார் காயம்; நடந்தது என்ன?

திண்டுக்கல் மாவட்டத்தின் குட்டிக்கொடைக்கானல் என்றழைக்கப்படும் சிறுமலையில் 18 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இதில் 17 ஆவது கொண்டை ஊசி வளைவில் உள்ள வாட்ச்சிங் டவர் அருகே காட்டுப்பகுதியில் துர்நாற்றம் வீசியத... மேலும் பார்க்க