செய்திகள் :

Indian Gaur: நரக வேதனையில் துடித்த காட்டுமாடு, மறுவாழ்வு கொடுத்த வனத்துறை! நெகிழ்ச்சிப் பின்னணி

post image

நீலகிரி மலையில் வாழிடங்களையும் வழித்தடங்களையும் இழந்து தவிக்கும் வனவிலங்குகள் தங்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, தண்ணீர், இனப்பெருக்கம் போன்றவற்றிற்கு ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயர முடியாமல் தவித்து வருகின்றன. காடுகளை இழந்து தவிக்கும் வனவிலங்குகள் தேயிலைத் தோட்டங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் தஞ்சமடைந்து வருகின்றன. வனவிலங்குகளால் மனிதர்களும்‌ மனித தவறுகளால் வனவிலங்குகளும்‌ கடுமையான இன்னலுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டு வருகிறது.

காயத்துடன் தவிக்கும் காட்டு மாடு

நீலகிரி வனக்கோட்டத்தைப் பொறுத்தவரை காட்டுமாடுகள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றன. மின் வேலிகள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டிகள், சுருக்கு வலை கம்பிகள், மதுபாட்டில்கள், தூக்கி எறியப்படும் குழாய்கள் போன்றவை அவற்றின் உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன. இன்னல்களில் தவிக்கும் காட்டுமாடுகளை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கோத்தகிரி அருகில் உள்ள பெட்டடி பகுதியில் காட்டுமாடு காலில் பிளாஸ்டிக் குழாய் சிக்கி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பிளாஸ்டிக் குழாய் ஏற்படுத்திய காரணமாக நடக்க முடியாமல் தவிக்கும் போட்டோ வீடியோக்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மூலம் இணையத்தில் பகிரப்பட்ட நிலையில், வனத்துறையின் கவனத்திற்குச் சென்றுள்ளது.

வனத்துறை சிகிச்சை

கால்நடை மருத்துவர்களுடன் சென்ற வனத்துறையினர், காயத்துடன் தவித்த காட்டு மாட்டிற்கு மயக்க ஊசி செலுத்தி காலில் சிக்கியிருந்த பிளாஸ்டிக் குழாயை அகற்றியுள்ளனர். காயத்திற்கு சிகிச்சை அளித்து விடுவித்துள்ளனர். இது குறித்து தெரிவித்த வனத்துறையினர், " கட்டபெட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் சுமார் 5 வயது மதிக்கத்தக்க பெண் காட்டுமாட்டின் வலது பின்னங்காலில் பி.வி.சி பைப் ஒன்று சிக்கியிருக்கிறது. ரணத்தால் ஒவ்வொரு நாளும் நகர வேதனையில் துடித்து வந்த காட்டுமாட்டின்‌ காலில் இருந்த பைப் முழுவதுமாக அகற்றப்பட்டுள்ளது. இது அந்த காட்டுமாட்டிற்கு மறுவாழ்வு தான் " என்றனர்.

பாம்புகள் ஏன் தங்களைத் தாங்களே உண்ணுகின்றன? - பின்னால் இருக்கும் ஆச்சர்ய காரணங்கள் இவைதான்!

பாம்புகளின் உடல் அமைப்பு விசித்திரமான பண்புகளை கொண்டுள்ளது. பாம்புகள் ஏன் தோலை உரிக்கின்றன, பாம்புகள் ஏன் தன்னைத்தானே சாப்பிடுகின்றன என்பது குறித்த விளக்கங்கள் உள்ளன. உடலின் உட்புறத்தில் வெப்பத்தை உற்... மேலும் பார்க்க

நிறம் மாறிக்கொண்டிருக்கும் பூக்கள்; குழப்பத்தில் பூச்சிகளும் வண்டுகளும்..! காரணம் சொல்லும் நிபுணர்!

இங்கே பூக்கள் இல்லாத பாதைகளே கிடையாது. சென்னை போன்ற மெட்ரோ பாலிட்டன் சிட்டியின் பேருந்து நிறுத்தங்களில்கூட, மண் மூடிய ஏதோவொரு சிறு செடியும் அதில் பெயர் தெரியாத ஒரு சிறு பூவும் இருக்கும். அந்தப் பூ மஞ்... மேலும் பார்க்க

நெல்லை: பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகிறது மாஞ்சோலை; ஆய்வு செய்த மத்தியக் குழுவினர்!

நெல்லை மாவட்டம், களக்காடு- முண்டந்துறை புலிகள் காப்பகம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும். இங்கு 969 ச.கி.மீ பரப்பளவுள்ள வனப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டு வனத்துறையின் கட்டுப்பாட்டி... மேலும் பார்க்க

Dravido gecko:‌ குன்னூரில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய பல்லி இனம்! - வன உயிரின ஆய்வாளர்கள் சொல்வதென்ன?

இயற்கை அளித்திருக்கும் பெருங்கொடைகளில் ஒன்றாக கருதப்படும் மேற்கு தொடர்ச்சி மலை அரியவகை பறவைகள், விலங்குகள், பூச்சியினங்கள், நீர் வாழ்வுகள், இரு வாழ்வுகள் , ஓரிட வாழ்வுகள், ஊர்வன போன்றவற்றின் தாய் மடிய... மேலும் பார்க்க

வனத்தில் தென்பட்ட அரிய பொக்கிஷம், உற்சாகத்தில் ஆய்வாளர்கள்! பின்னணி இதுதான்

அரியவகை உயிரினங்களின் கடைசிப் புகலிடமாக விளங்கி வரும் முதுமலை, பந்திப்பூர், மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தை உள்ளடக்கிய வனத்தில் `Striped hyena' எனப்படும் வரிக்கழுதைப்புலிகளின் எண்ணிக்கை இரட்ட... மேலும் பார்க்க