செய்திகள் :

Kerala: `பெண் ஊழியரை கடத்தி, மிரட்டல்?' - போலீசார் வழக்கு பதிவு.. நடிகர் கிருஷ்ணகுமார் சொல்வதென்ன?

post image

கேரள மாநிலத்தைச் சேர்ந்த சினிமா நடிகர் கிருஷ்ணகுமார் பா.ஜ.க நிர்வாகியாகவும் உள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர்.

இரண்டாவது மகள் தியா கிருஷ்ணா. திருவனந்தபுரம் கவடியாரில் ஆபரணம் மற்றும் துணிக்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

தியா-வின் கடையில் வேலைசெய்த பெண் ஊழியர் 2024-ம் ஆண்டு முதல் கியூ ஆர் கோடு மூலம் 69 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கடை ஊழியர்கள் மீது தியா கிருஷ்ணா புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

நடிகர் கிருஷ்ணகுமார், அவரது மகள் தியா

இதற்கிடையே நடிகர் கிருஷ்ணகுமார் மற்றும் அவரது மகள் தியா ஆகியோருக்கு எதிராக பெண் ஊழியர் ஒருவர் மியூசியம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அந்த புகாரில், பெண் ஊழியரை கடத்திக்கொண்டுப்போய் அடைத்து வைத்து மிரட்டி 8 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் வாங்கியதாக கூறப்பட்டிருந்தது. அதற்கான ஆதாரங்களும் போலிஸிடம் ஒப்படைக்கபட்டதாக கூறப்படுகிறது.

பெண் ஊழியர் அளித்த புகாரின் அடிப்படையில் நடிகர் கிருஷ்ணகுமார், அவரது மகள் தியா ஆகியோர் மீது மியூசியம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறுகையில், "தியாவின் கடையில் உள்ள ஸ்கேனர் வேலை செய்யவில்லை எனக்கூறி, ஊழியர்களின் எண்களை கொடுத்து வாடிக்கையாளர்களிடம் பணம் அனுப்பச் சொன்னதாகவும். பின்னர் அந்த பணத்தை அவர்கள் பெற்றுக்கொண்டதாகவும் ஊழியர்கள் கூறுகின்றனர். வரியில் இருந்து தப்புவதற்காக இப்படி செயல்பட்டதாக சொல்கிறார்கள். அதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம். அதே சமயம் தியா அளித்த புகாரின் அடிப்படையிலும் விசாரணை நடந்துவருகிறது. இந்த விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக தனி விசாரணை குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது" என்றனர்.

செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கிருஷ்ணகுமார்

ஊழியர்களின் புகாரை நடிகர் கிருஷ்ணகுமார் மறுத்துள்ளார். இதுகுறித்து நடிகர் கிருஷ்ணகுமார் கூறுகையில், "எங்கள் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண் ஊழியர்கள், நிறுவன கியூ ஆர் கோடு செயல்படவில்லை என வாடிக்கையாளர்களிடம் கூறியதுடன், வேறு கியூ ஆர் கோட் மூலம் 69 லட்சம் ரூபாய் மோசடி செய்தனர். அந்த குற்றத்தை சம்மதித்த ஊழியர்கள் எங்கள் பிளாட்டுக்கு வந்து 8 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் திரும்ப தந்தனர்.

அதுசமந்தமான கண்காணிப்பு கேமரா காட்சிகள் உள்ளன. அவற்றை போலீஸார் எடுத்துள்ளனர். மீதமுள்ள பணத்தை தராமல் பெண்கள் தரப்பில் மிரட்டல் விடுத்ததை அடுத்தே நாங்கள் புகார் அளித்தோம். ஆனால், நாங்கள் அவர்களை கட்டியிட்டு மிரட்டியதாக இப்போது பொய்யாக புகார் அளித்துள்ளனர். நாங்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக உள்ளோம்" என்றார்.

மாடியில் தூங்கியவர் ரத்த வெள்ளத்தில் மர்ம மரணம் - இறப்பு குறித்து போலீஸார் விசாரணை

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள சங்கம்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன். வயதான கணேசன் மதுவுக்கு அடிமையான நிலையில் அடிக்கடி குடும்ப உறுப்பினர்களுடன் சண்டையிட்டு வந்துள்ளார். இந்த நிலையில், நேற்... மேலும் பார்க்க

கோவை: வட மாநில இளைஞர் கொடூர கொலை - வெளியான அதிர்ச்சித் தகவல்

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுபம் அன்சாரி. இவர் கோவை மாவட்டம், அரசூர் பகுதியில் உள்ள பவுண்டரி தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் அரசூர் அருகே உள்ள டாஸ்மாக் கடையின் பின்புறம் உள்ள ஒரு தோப்... மேலும் பார்க்க

ஆட்டோவை வழி மறித்து பெண் வெட்டிக்கொலை; 2 ஆண்டுக்குப் பிறகு கொலையாளிகள் சிக்கியது எப்படி?

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள ஜமீன் தேவர்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரின் மனைவி வெள்ளைத் துரைச்சி. இவர், கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் 9-ம் தேதி இரவு குமரெட்டியாபுரத்தில் இர... மேலும் பார்க்க

கிணற்றில் விழுந்த மகனைக் காப்பாற்ற முயன்ற தந்தை பலி; தீவிர சிகிச்சையில் மகன்; என்ன நடந்தது?

திருவள்ளூர் அருகே மப்பேடு பகுதியை அடுத்த முதுகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி (61). இவரின் மனைவி புவனேஸ்வரி.இந்தத் தம்பதியினருக்கு சந்தோஷ்குமார் என்ற மகன் உள்ளார். இவர்கள் குடியிருக்கும் பகுதியில் குட... மேலும் பார்க்க

சென்னை: அரசு வேலைக்குப் போலி நியமன ஆர்டர்; 12 பேரிடம் ரூ.1,66,36,000 மோசடி செய்த கும்பல் கைது

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாரதி (27). இவர் அரசு வேலை தேடிக் கொண்டிருந்தார். இந்தச் சமயத்தில் சென்னை தி.நகரைச் சேர்ந்த மோகன்ராஜன், அவரின் கூட்டாளியான விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்... மேலும் பார்க்க

ராமேஸ்வரம்: இலங்கைக்குக் கஞ்சா கடத்த முயற்சி; 70 கிலோ பறிமுதல்; காருடன் 6 பேர் கைது; பின்னணி என்ன?

தமிழக கடலோரப் பகுதிகள் வழியாக இலங்கைக்குப் போதைப் பொருட்கள், கஞ்சா, பீடி இலைகள் மற்றும் சமையல் பொருட்களான மஞ்சள், ஏலக்காய் உள்ளிட்டவைத் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகின்றன.கடந்த சில நாள்களுக்கு முன் இலங்... மேலும் பார்க்க