செய்திகள் :

Lokpal: '7 BMW கார்கள்':`ஊழல் பற்றி கவலைப்படாமல் ஆடம்பரங்களில் திளைக்கும் லோக்பால்'- பிரசாந்த் பூஷண்

post image

பிரதமர், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மத்திய அரசின் உயர்மட்ட அதிகாரிகள் போன்ற நாட்டின் அதிமுக்கியத் தலைவர்கள் மீது ஊழல் புகார் எழுந்தால் அதை சுதந்திரமாக விசாரிக்க உருவாக்கப்பட்ட சட்டம்தான் லோக்பால் சட்டம் (Lokpal and Lokayuktas Act, 2013).

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் மாணிக்ராவ் கான்வில்கர் தலைமையில் இந்த அமைப்பு தற்போது செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த அக்டோபர் 16 தேதி லோக்பால் அமைப்பு, ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒரு கார் என்ற அடிப்படையில், 7 பி.எம்.டபள்யூ கார் வாங்குவதற்கு டெண்டர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

 பிரசாந்த் பூஷண்
பிரசாந்த் பூஷண்

அதில், `ஏழு BMW 3 சீரிஸ் Li கார்களை இந்திய லோக்பாலுக்கு வழங்குவதற்காக புகழ்பெற்ற நிறுவனங்களிடமிருந்து திறந்த டெண்டர்கள் வெளியிடப்படுகிறது' எனக் குறிப்பிட்டிருக்கிறது.

லோக்பால் குறிப்பிட்டிருக்கும் BMW 3 சீரிஸ் Li கார் ஒன்றின் விலை ரூ.70 லட்சம். 7 கார்கள் என்றால் ரூ.3.5 கோடி செலவாகும்.

மேலும், லோக்பால் ஓட்டுநர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இந்தக் காரை இயக்குவது, அதன் மின்னணு அமைப்புகள் தொடர்பாக விளக்கமளிக்க ஏழு நாட்கள் பயிற்சி வழங்க கார் தயாரிப்பாளரான BMW-விடம் கூறப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

நாட்டின் ஊழலை வெளிக்கொண்டு வந்து, நாட்டின் வளர்ச்சிக்கு உதவவேண்டிய லோக்பால் அமைப்பு, ஆடம்பரக் காரை விரும்பிக் கேட்பது விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.

இது தொடர்பாக சமூக ஆர்வலர்-வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தன் எக்ஸ் தள பக்கத்தில், ``ஊழல் பற்றிக் கவலைப்படாத, தங்கள் ஆடம்பரங்களில் மகிழ்ச்சியாக இருக்கும் அடிமைத்தன உறுப்பினர்களை நியமிப்பதன் மூலம், அரசாங்கம் லோக்பாலை செயல்படவிடாமல் செய்திருக்கிறது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

காங்கிரஸின் இளைஞர் பிரிவு, ``ஒரு காலத்தில் பொறுப்புக்கூறலின் அடையாளமாக இருந்த லோக்பால் அமைப்பு இடிந்து விழுகிறது... முக்கிய நியமனங்கள் இல்லாத ஒரு அமைப்புக்கு அரசாங்கம் ஏன் சொகுசு வெளிநாட்டு கார்களை வாங்குகிறது?" எனக் கடுமையாக விமர்சித்துள்ளது.

பட்டாசு குப்பைகளை அகற்றிய எம்.பி. சச்சிதானந்தம்; உடன் சேர்ந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்

தீபாவளி என்றாலே குதூகலம் தான் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொருவரும் பட்டாசுகளை ஆர்வத்தோடு வெடித்து மகிழ்கின்றனர். ஒவ்வொரு வருடமும் பட்டாசுகள் எவ்வளவு அதிகமாக வெடிக்கபடுகிறதோ அதே அளவிற்கு காற்று... மேலும் பார்க்க

``குடிமக்களாகிய நமது முதன்மையான பொறுப்பு" - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

பிரதமர் மோடி குடிமக்களுக்கு சிறப்பு தீபாவளி செய்தியாக கடிதம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் ``தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன... மேலும் பார்க்க

"உங்கள் திருமண ஆர்டருக்கு காத்திருக்கிறோம்" - ராகுல் காந்தியிடம் திருமணம் செய்யச் சொன்ன கடைக்காரர்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் மிகவும் பழமையான சந்தாவாலா மிட்டாய் கடைக்கு மிட்டாய் வாங்க சென்றார்.அவரை கடை உரிமையாளர் சுஷாந்த் ஜெயின் அன்புடன் வரவேற்றார். ராஜீவ் ... மேலும் பார்க்க

"தமிழ்நாட்டில் மழை அதிகமாகும் வாய்ப்பு; போர்கால நடவடிக்கை தேவை" - திமுகவை வலியுறுத்தும் பழனிசாமி

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழை பெய்யலாம் என்று சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியிருக்கிறது. மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று மாலை 4 மணி வர... மேலும் பார்க்க

புதின் போன் காலுக்குப் பின், ஜெலன்ஸ்கியை நெருக்கும் ட்ரம்ப் - என்ன நடந்தது?

ரஷ்யா - உக்ரைன் போர் பொறுத்தவரையில், ஆரம்பதில் இருந்தே அமெரிக்கா உக்ரைனின் பக்கம் நின்று வருகிறது.சுமுக உறவு ஆனால், அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதும், அவர் பெரிதும் ஆதரவு தந்துவருவது அவரின் நண்பர... மேலும் பார்க்க

'ஒப்பந்தம் அல்லது 155% வரி' - மிரட்டும் ட்ரம்ப்; சீனா அடிப்பணியுமா?

சீனா தான் ஏற்றுமதி செய்து வந்த சில அரிய கனிமங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது. 'இந்தக் கட்டுப்பாடுகள் உலக வர்த்தகத்தைப் பாதிக்கும்' என்று அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல்... சீனப... மேலும் பார்க்க