செய்திகள் :

Plane Crash: சம்பவ இடத்தில் 800 கிராம் தங்கம், 80,000 ரூபாய் பணம், பகவத் கீதை, பாஸ்போர்ட் மீட்பு

post image

கடந்த ஜூன் 12-ம் தேதி அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்துச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 240 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்து நிகழ்ந்த 5 நிமிடங்களுக்குள் விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்ற 56 வயதான ராஜு பட்டேல் என்பவர் முன்சென்றுள்ளார்.

Ahmedabad Plane Crash
Ahmedabad Plane Crash

இந்தச் சம்பவம் குறித்து அவர், "விபத்து நிகழ்ந்த முதல் 20 நிமிடங்களுக்கு அருகிலேயே செல்ல முடியவில்லை; அங்கு தீ பயங்கரமாகப் பற்றி எரிந்துகொண்டிருந்தது.

மீட்புக் குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததும், நாங்கள் அவர்களுக்கு உதவத் தொடங்கினோம். எங்களால் முடிந்த உதவியைச் செய்தோம்," எனக் குறிப்பிட்டுள்ளார்.

மீட்பு உதவிகளைச் செய்துகொண்டிருக்கும் வேளையில், எரிந்த நிலையிலிருந்த சூட்கேஸ் பெட்டிகளை எடுத்துள்ளனர். அதிலிருந்து 800 கிராம் தங்கமும், 80,000 ரூபாய் பணமும் கிடைத்துள்ளன.

மேலும், எரிந்த நிலையிலிருந்த பாஸ்போர்ட்கள் மற்றும் பகவத் கீதை புத்தகமும் கிடைத்துள்ளன. மீட்கப்பட்ட பொருள்களையெல்லாம் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மீட்கப்பட்ட பொருள்களெல்லாம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் மீண்டும் ஒப்படைக்கப்படும் என குஜராத் மாநிலத்தின் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி கூறியுள்ளார்.

Ahmedabad Plane Crash
Ahmedabad Plane Crash

இந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களில் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அவர்களின் குடும்பத்தினரிடம் உடல்களை ஒப்படைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இதுவரை 162 உடல்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றில் 120 உடல்கள் அவர்களின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Yercaud Express: ரயிலைக் கவிழ்க்கச் சதி? தனிப்படைகள் அமைத்து ரயில்வே காவல்துறை விசாரணை;பின்னணி என்ன?

ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து சேலம் வழியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இரவு 9 மணிக்குத் தினசரி ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் இயங்கி வருகிறது.இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் ஈரோடு ரயில் நிலைய... மேலும் பார்க்க

Plane crash: பலியான ஏர் இந்தியா ஊழியர்களுக்கு இறுதிச்சடங்கு; மும்பையில் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி

அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான விமான கேப்டன் சுமீத் சபர்வால் உடல் இன்று அதிகாலை மும்பைக்கு சிறப்பு விமானத்தில் கொண்டு வரப்பட்டது. அவரது உடல் இன்று மும்பை பவாயில் உள்ள அவரது இல்... மேலும் பார்க்க

திருப்பூர்: இருசக்கர வாகனத்தின் மீது கவிழ்ந்த கன்டெய்னர் லாரி; தாய், மகளுக்கு நேர்ந்த சோகம்

திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகர்ப் பகுதியில் நால்ரோடு சந்திப்பில் கன்டெய்னர் லாரி ஒன்று கோவையிலிருந்து பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்தது.பல்லடம் நகராட்சி அலுவலகம் அருகே எதிர்பாராத விதமாகக் கட்டுப்பா... மேலும் பார்க்க

MV Won Hai 503: 8 நாள்களாக எரியும் தீ; ஆழ்கடலில் விடப்பட்ட கப்பல்; கேரள கடலோர மக்களுக்கு எச்சரிக்கை

கொழும்பு துறைமுகத்திலிருந்து மும்பை துறைமுகம் நோக்கிச் சென்ற சிங்கப்பூரைச் சேர்ந்த எம்.வி வான் ஹாய் 503 என்ற சரக்கு கப்பல் கடந்த 9-ம் தேதி தீப்பிடித்து எரிந்தது.கேரள மாநிலம் கண்ணூர் அழிக்கால் மீன்பிடி... மேலும் பார்க்க

Kantara Chapter 1: "மழை, காற்று, பயம்..." - நீந்திப் பிழைத்த படக்குழு; அனுமதியில்லாமல் படப்பிடிப்பா?

கன்னட படமான காந்தாரா: சேப்டர்1 படப்பிடிப்பின்போது தொடர்ந்து புதுப்புது சவால்கள் வந்து கொண்டே இருக்கின்றன. ஏற்கனவே இப்படப்பிடிப்பின் போது கடந்த ஒரு மாதத்தில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த 3 ஊழியர்கள் பல... மேலும் பார்க்க

Ahmedabad plane crash: ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் - சாவின் விளிம்புவரை சென்று உயிர் தப்பிய 7 பேர்

அகமதாபாத் விமான விபத்தில் 274 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இக்கொடூரமான விபத்தில் 7 பேர் கடைசி நேரத்தில் தங்களது பயணத்தை ரத்து செய்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி இருக்கின்றனர். தாய் வைத்த அன்பு கோரிக்கை... மேலும் பார்க்க