செய்திகள் :

Pregnant Job Service: "பெண்களைக் கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம்" - பீகாரில் நூதன மோசடி; பின்னணி என்ன?

post image

பீகாரில் சைபர் கிரிமினல்கள் நூதன மோசடியில் ஈடுபட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நாடு முழுவதும் டிஜிட்டல் முறையில் அப்பாவி மக்களிடம் பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், பீகாரில் குழந்தை இல்லாத பெண்களைக் கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று கூறி, ஒரு கும்பல் நூதன மோசடியில் ஈடுபட்டுள்ளது. பீகாரில் உள்ள நவாடா என்ற மாவட்டத்தில் இந்த மோசடி கும்பல் பிடிபட்டுள்ளது. அங்குள்ள கஹுரா என்ற கிராமத்தில் கைது செய்யப்பட்ட மூன்று பேரும் பேஸ்புக்கில் அகில இந்திய பிரக்னண்ட் வேலை வாய்ப்பு என்ற பெயரில் விளம்பரம் செய்துள்ளனர். அந்த விளம்பரத்தைப் பார்த்து போன் செய்பவர்களிடம் இந்த வேலைக்குத் தங்களிடம் பதிவு செய்துகொள்ளுங்கள் என்று கூறி, ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் செல்பி எடுத்து அனுப்பி வைக்கும்படி கூறியிருக்கிறார்கள்.

cyber crime
cyber crime

அதோடு பதிவுக்கட்டணம் என்று கூறி ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்கியிருக்கிறார்கள். தங்களது வலையில் சிக்கும் நபர்களிடம் குழந்தை இல்லாத பெண்களைக் கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்றும், கர்ப்பமாக்கத் தவறினாலும் ரூ.50 ஆயிரத்திலிருந்து 5 லட்சம் வரை வழங்கப்படும் என்றும் ஆசை வார்த்தை கூறியிருக்கின்றனர்.

இது குறித்து துணை ஆணையர் இம்ரான் பர்வேஸ் கூறுகையில், ''All India Pregnant Job Service மற்றும் பிளேபாய் சேவைகளை நடத்தி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கும்பல் தங்களிடம் சிக்குபவர்களிடம் ஹோட்டலில் அறை முன்பதிவு செய்யவேண்டும் என்பது போன்ற பல காரணங்களைச் சொல்லி பணம் வசூலித்து வந்தனர். அதோடு அவர்களை மிரட்டியும் பணம் சம்பாதித்தனர். இம்மோசடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட பிரின்ஸ் ராஜ், போலா குமார், ராகுல் குமார் ஆகியோரிடம் இருந்து மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் வாடிக்கையாளர்களுடன் சாட்டிங் செய்தது, பணப் பரிவர்த்தனை போன்ற விபரங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது'' என்றார்.

Saif Ali Khan: அதிகாலையில் கொள்ளை முயற்சி; தடுக்க முயன்ற நடிகர் சைஃப் அலிகானுக்கு கத்திக் குத்து!

மும்பையில் பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் நடிகை கரீனா கபூரை திருமணம் செய்து கொண்டு பாந்த்ரா பங்களாவில் வசித்து வருகிறார். இன்று அதிகாலை 2.30 மணிக்கு நடிகர் சைஃப் அலிகான் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன... மேலும் பார்க்க

சமாதி ஆனாரா கோபன்சுவாமி? - சந்தேகம் கிளப்பும் ஊர்மக்கள், கல்லறையை திறக்க குடும்பத்தினர் எதிர்ப்பு!

கேரள மாநிலம, திருவனந்தபுரம் மாவட்டம், நெய்யாற்றின்கரை ஆறான்மூடு பகுதியைச் சேர்ந்தவர் கோபன் சுவாமி. மணி என்ற இயற்பெயர் கொண்ட இவருக்கு 3 மகன்கள். மூத்த மகன் இறந்துவிட்ட நிலையில் தற்போது 2 மகன்கள் உள்ளனர... மேலும் பார்க்க

சென்னை: ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை... வடமாநில இளைஞர் கைது

சென்னை ஐ.ஐ.டியில் படிக்கும் ஆராய்ச்சி மாணவி ஒருவர் பொங்கல் பண்டிகை அன்று கோட்டூர்புரத்தில் உள்ள டீக்கடைக்கு நண்பருடன் சென்றிருக்கிறார். அப்போது அந்த டீக்கடையில் வேலை செய்யும் இளைஞர் ஒருவர் திடீரென மாண... மேலும் பார்க்க

கார் பார்க்கிங் தகராறு; செக்யூரிட்டி மீது துப்பாக்கிச் சூடு.. போதை ஆசாமி கைது!

டெல்லி மற்றும் நொய்டாவில் அடிக்கடி வாகனங்களை நிறுத்துவது தொடர்பாக அல்லது லிப்டில் ஏறுவது தொடர்பாக குடியிருப்பு வாசிகள் செக்யூரிட்டி கார்டுகளை தாக்குவது வழக்கமாக நடந்து கொண்டிருக்கிறது. டெல்லி அருகில் ... மேலும் பார்க்க

`காதலனை திருமணம் செய்ய எதிர்ப்பு' - போலீஸார் கண்முன்னே மகளை சுட்டுக் கொன்ற தந்தை

பெற்றோர்கள் பெரும்பாலும் காதலை விரும்புவதில்லை. ஒரு சில பெற்றோர் மட்டுமே தங்களது பிள்ளைகள் விரும்பும் நபர்களையே திருமணம் செய்து வைக்கின்றனர். மத்திய பிரதேச மாநில குவாலியர் என்ற இடத்தில் தங்களது விருப்... மேலும் பார்க்க

புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலை-யில் நண்பருடன் இருந்த மாணவியிடம் அத்துமீறல் – மூடி மறைத்த நிர்வாகம்?

புதுச்சேரியில் அத்துமீறல் சம்பவம்சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகர் என்பவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஒட்டுமொத்த தமி... மேலும் பார்க்க