இந்தியர்களுக்கு விலங்கு: மதியம் 2 மணிக்கு விளக்கமளிக்கிறார் ஜெய்சங்கர்
Rahul Gandhi: `சீனா 10 ஆண்டுகள் முன்னால் செல்கிறது...' - மோடியைச் சாடிய ராகுல்!
பிரதமர் நரேந்திர மோடி தனது நாடாளுமன்ற உரையில் மேக் இன் இந்தியா திட்டம் குறித்து குறிப்பிடாததைச் சுட்டிக்காட்டி, தனது எக்ஸ் தள பக்கத்தில் பாஜக அரசை சாடியுள்ளார் ராகுல் காந்தி.
ராகுல் தனது எக்ஸ் தள பதிவில், "பிரதமரே, உங்கள் நாடாளுமன்ற உரையில் மேக் இன் இந்தியா திட்டத்தைக் குறிப்பிடவே இல்லை. மேக் இன் இந்தியா நல்ல முயற்சியாக இருந்தாலும், தோல்வியடைந்துள்ளது என்பதை பிரதமர் ஒப்புக்கொள்ள வேண்டும்.
நாட்டின் ஜி.டி.பியில் உற்பத்தியின் பங்கு 2014ம் ஆண்டு 15.3 விழுக்காடாக இருந்ததிலிருந்து, 12.6 விழுக்காடாக குறைந்துள்ளது. 60 வருடங்களில் இதுவே மிகக் குறைந்த வீதம்." என எழுதியுள்ளார் ராகுல்.
மேலும் வேலைவாய்ப்பின்மையைச் சுட்டிக்காட்டும் விதமாக, "இந்திய இளைஞர்களுக்கு 'வேலை' மிக முக்கிய தேவை. சமீப காலங்களில் எந்த அரசாங்கமும் அது UPA-வாக இருந்தாலும் சரி, NDA-வாக இருந்தாலும் சரி... இந்த தேசிய பிரச்னையை எதிர்கொள்ள முடியவில்லை. நமது உற்பத்தித் துறையை பின்னுக்குத் தள்ளிவைப்பது எது என்பதைக் கண்டறியவும், எதிர்கால உலகப் பொருளாதாரத்தில் போட்டியிடவும் நமக்கு 'தொலைநோக்கு பார்வை' தேவை" எனக் கூறியுள்ளார்.
வேலைகளை உருவாக்குவதில் தொழில்நுட்பங்களின் பங்கை எடுத்துரைக்கும் விதமாக, "இந்தியாவின் உற்பத்தியை அதிகரிக்கும் தொலைநோக்குப் பார்வை, மின்சார மோட்டார்கள், பேட்டரிகள், ஆப்டிக்ஸ் மற்றும் AI போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் குறிப்பிட்ட கவனம் செலுத்த வேண்டும்.
இதுவே நம் உற்பத்தித்துறையை உயிர்பிக்க ஒரே வழி, அதிநவீன உற்பத்தி திறனை வளர்த்து, நமக்குத் தேவையான வேலைகளை உருவாக்குவோம்." என்றும் எழுதியிருக்கிறார்.
இந்தியா சீனா உடன் போட்டிப்போட நம் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்கிறார் ராகுல். "சீனா நம்மை 10 ஆண்டுகள் முந்திச் செல்லும்விதமாக வலுவான தொழில்துறை அமைப்பைக் கொண்டுள்ளது. இதுதான் நமக்கு சவால்விடும் தைரியத்தை அவர்களுக்கு வழங்குகிறது. அவர்களுடன் போட்டிப்போட நமக்கிருக்கும் ஒரே வழி நமக்கான உற்பத்தி அமைப்புகளை உருவாக்குவதுதான். அதற்கு தொலைநோக்குப் பார்வையும் உத்தியும் வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார் அவர்.