Investment Scam: ஆளுக்கு ரூ.50 லட்சம்; ரூ.1500 கோடி இழந்த பெருநகர பணக்காரர்கள்!
Rain Updates: வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி - புயலாக வலுபெறுமா?
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் பல மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது.
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில், நீலகிரி, ஈரோடு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் கோயம்புத்தூர் மலைப்பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை சுற்றுப் பகுதிகள் மற்றும் கடலோர மாவட்டங்களான செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, புதுச்சேரி ஆகியவற்றுக்குக் கடந்த 2 நாட்கள் “Red Alert” கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் வங்கக்கடலில் உருவான தாழ்வழுத்த மண்டலம் பலவீனமடைந்ததால் இன்று காலை ரத்து செய்யப்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி, ஈரோடு, கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாக இருக்கிறது. தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய வங்கக்கடல் பகுதிகளில் இந்தக் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஆனால் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியின் நகர்வு குறித்த விரிவான தகவல்கள் வானிலை ஆய்வு மையம் தற்போது தெரிவிக்கவில்லை. ஆனால் இது புயலாக வலுப்பெற வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் கூறியிருக்கிறார்.
















