செய்திகள் :

Rain Updates: வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி - புயலாக வலுபெறுமா?

post image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் பல மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது.

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில், நீலகிரி, ஈரோடு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் கோயம்புத்தூர் மலைப்பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை சுற்றுப் பகுதிகள் மற்றும் கடலோர மாவட்டங்களான செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, புதுச்சேரி ஆகியவற்றுக்குக் கடந்த 2 நாட்கள் “Red Alert” கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் வங்கக்கடலில் உருவான தாழ்வழுத்த மண்டலம் பலவீனமடைந்ததால் இன்று காலை ரத்து செய்யப்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.

மழை
மழை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி, ஈரோடு, கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாக இருக்கிறது. தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய வங்கக்கடல் பகுதிகளில் இந்தக் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஆனால் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியின் நகர்வு குறித்த விரிவான தகவல்கள் வானிலை ஆய்வு மையம் தற்போது தெரிவிக்கவில்லை. ஆனால் இது புயலாக வலுப்பெற வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் கூறியிருக்கிறார்.

Rain Updates: வங்கக்கடலில் உருவாகிறது 'Montha' புயல் - சென்னையில் மழை எப்படி இருக்கும்?

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் பல மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது.இந்நிலையில் வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வரும் 26 ஆம் தேதி ஆழ்ந்தக் காற்... மேலும் பார்க்க

மேட்டூர் அணையில் நீர் திறப்பு; காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணை நிரம்பியுள்ளதால் அணைக்கு வரும் நீர் முழுவதுமாக உபரிநீராக வ... மேலும் பார்க்க

Rain Updates: 'இந்த வாரம் முழுதும் மழை' - வடகிழக்கு பருவமழை தீவிரம்; எந்தெந்த மாவட்டங்களுக்கு Alert?

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக மாறவுள்ளது என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.இதனால்தான், தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மழை பெய்து வருகிறதாம... மேலும் பார்க்க

சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதனால், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வ... மேலும் பார்க்க

Rain Alert: கனமழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை? | முழு விவரம்

தமிழ்நாட்டில் கடந்த வாரம் (அக்டோபர் 16) வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் ஒரு வரமாக மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.குறிப்பாக அக்டோபர் 21, 22 ஆகிய தேதிகளில் க... மேலும் பார்க்க