செய்திகள் :

Reehana: "திருமணம் செய்ததை மறைத்து பண மோசடி" - சீரியல் நடிகை ரிஹானா பேகம் மீது ஓட்டல் அதிபர் புகார்

post image

பிரபல சின்னத்திரை நடிகை ரிஹானா பேகம் தன்னை மோசடி செய்ததாக ராஜ் கண்ணன் என்பவர் பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். 

‘ஆனந்த ராகம்’, ‘மீனாட்சி பொண்ணுங்க’ போன்ற சீரியல்களில் நடித்துப் பிரபலமானவர் ரிஹானா பேகம். ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலிலும் நடித்திருக்கிறார். 

ரிஹானா பேகம்
ரிஹானா பேகம்

இந்நிலையில், சென்னை கொளப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஓட்டல் அதிபர் ராஜ் கண்ணன் (47) என்பவர் நடிகை ரிஹானா பேகம் மீது, திருமணம் செய்ததை மறைத்து பண மோசடி செய்ததாக பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். இந்த சம்பவம் தற்போது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.

அந்தப் புகாரில், தன்னுடன் நட்பாகப் பழகி வந்த ரிஹானா பேகம் ஏற்கனவே திருமணம் ஆகி கணவரிடம் விவாகரத்து ஆனதாகக் கூறியதால், தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும், அதன் பின் ரிஹானாவுக்குப் பண உதவியாக அவ்வப்போது கேட்டதால் 20 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

ரிஹானா பேகம்
ரிஹானா பேகம்

மேலும், அவரது வீட்டிற்குச் சென்ற போது கணவருடன் விவாகரத்து ஆகாமலேயே தன்னைத் திருமணம் செய்து மோசடி செய்ததாகவும் பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் ராஜ் கண்ணன் புகார் அளித்திருக்கிறார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் பூந்தமல்லி காவல் நிலையம் இருவருக்கும் சம்மன் அனுப்பி இருக்கிறது. வரும் 18 ஆம் தேதி காவல் நிலையத்தில் நடிகை ரிஹானா மற்றும் புகார் அளித்த ராஜ் கண்ணன் ஆகியோர் ஆஜராக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

கல்யாணம், பண மோசடி... மாறி மாறிப் புகார் - நடிகை ரெஹானா, பார் உரிமையாளர் விவகாரத்தில் நடந்தது என்ன?

சீரியல் நடிகை ரெஹானா, தன்னை ஏமாற்றி பண மோசடி செய்து விட்டதாக சென்னையைச் சேர்ந்த பார் உரிமையாளர் ராஜ் கண்ணன் என்பவர் போலீஸில் புகார் கொடுத்திருக்கும் நிலையில், ராஜ் கண்ணன் மீது ரெஹானாவும் பதில் புகார் ... மேலும் பார்க்க

Brother - Sister Exclusive : `ரஜினி சார் தான் படத்தோட கதையை சொன்னார்!' - சஞ்சய் பார்கவ் & காயத்ரி

`வள்ளி' திரைப்படத்தின் மூலம் வில்லனாக மக்களிடையே பிரபலமானவர் நடிகர் சஞ்சய் பார்கவ். இவருக்குஷில்பா, காயத்ரி என இரு சகோதரிகள். `மெட்டிஒலி' தொடரின் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் ... மேலும் பார்க்க

TV Update: படத்திற்கு மாலை - அர்த்திகா அப்செட்?; ரெட்கார்டுக்கு கொந்தளிக்கும் Pandian Stores நடிகர்

'ரெட் கார்டுதானே, போட்டுதான் பாரேன்!''சீரியல் ஒன்றில் நடிக்க கமிட் ஆகிவிட்டு புரொமோ ஷூட் முடிந்த நிலையில் நடிக்க மறுத்து விட்டார்' என நடிகை ரவீனாவுக்குச் சில மாதங்களுக்கு முன் ரெட் கார்டு கொடுக்கப்பட்... மேலும் பார்க்க

Rajasekar: "இப்போ இருக்கிற சூழல்ல 10 ரூபாய் கிடைச்சாலும் பெருசு!" - ராஜசேகர் மனைவி தாரா

சின்னத்திரை நடிகர் மற்றும் இயக்குநர் ராஜசேகர் கடந்த 2019-ம் ஆண்டு இயற்கை எய்தினார். ராஜசேகர் இறப்பதற்குச் சில நாட்களுக்கு முன்பு கடன் வாங்கி புதிய வீடு ஒன்றை வாங்கியிருந்தார். அவரின் மறைவுக்குப் பிறகு... மேலும் பார்க்க

Saregamapa: "நாங்க கஷ்டப்படுறனாலதான் அவன் பாடவே ஆரம்பிச்சான்" - திவினேஷின் பெற்றோர் பேட்டி

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் `சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 4' நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்ட பல குழந்தைகள் மக்கள் கவனத்தை ஈர்த்தனர். இதன் இறுதிப்போட்ட... மேலும் பார்க்க