செய்திகள் :

RMKV: 101 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஆரெம்கேவி; 15 புதிய பட்டுப்புடவைகள் அறிமுகம்

post image

1924 ஆம் ஆண்டு, முதல் கடையை திருநெல்வேலியில் துவங்கியதில் ஆரெம்கேவி இருந்து, இன்று வரை நூறாண்டு காலமாக, வாடிக்கையாளர்களின் அன்பாலும், வியாபாரிகளின், நம்பிக்கையாலும், எங்களது நெசவாளர்கள் மற்றும் பணியாளர்களின் அர்ப்பணிப்புள்ள அயராத உழைப்பாலும் எட்ட முடியாத சிகரத்தை எட்டி இருக்கிறது.

வாடிக்கையாளர்களுக்காக நேர்த்தியான பட்டுப் புடவைகளை கடந்த 100 ஆண்டுகளாக அறிமுகம் செய்வது ஆரெம்கேவியின் சிறப்பம்சம். பட்டுப்புடவைகள் ஆரெம்கேவி டிசைன் ஸ்டுடியோவில் உருவாக்கப்பட்டு, புதுமையான உக்திகள் மற்றும் வழிமுறைகள் மூலம் மிகச்சிறந்த நெசவாளர்களால் நெய்யப்பட்டு வருகிறது.

ஷாஷிகோ ரிவர்சிபிள்
ஷாஷிகோ ரிவர்சிபிள்

பட்டு இழையை இலேசாகவும் மற்றும் காற்றோட்டம் உள்ளதாகவும் காப்புரிமை பெற்ற நுட்பங்களால் நெய்வது, இயற்கை பொருட்களை பயன்படுத்தி பல வண்ணங்களை உருவாக்குவதிலிருந்து நெசவுத்தொழிலில் பல புதுமைகள் உள்ளடங்கும். இதில் கடந்த 100 ஆண்டுகளாக 110க்கும் மேற்பட்ட பிரத்யேக பட்டு புடவை ரகங்களை அறிமுகம் செய்த ஆரெம்கேவி, அதன் 101 ஆம் ஆண்டில் இந்த விழாக்காலத்தில் 15 புதிய பட்டுப் புடவைகளை அறிமுகம் செய்கிறது.

2025-ன் விழாக்கால கொண்டாட்டத்திற்காக உருவாக்கப்படும் சிறப்பு படைப்புகள், ஜப்பானிய கலை மற்றும் இந்திய கலாச்சாரங்களை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்படுகின்றன.

ஷாஷிகோ ரிவர்சிபிள் (Sashiko Reversible)

ஆரெம்கேவி டிசைன் ஸ்டுடியோ கலைஞர்களால் உருவாக்கப்பட்ட சாதனை படைப்பான ரிவர்சிபிள் பட்டு புடவை. ஒரு புறம் பச்சை வண்ணமும் மறுபுறம் அந்திவான செந்நிறமும் கொண்டு உருவாக்கப்பட்ட தனித்துவமான பட்டுப் புடவை, வெவ்வேறு வண்ணங்களில் அதற்கான பார்டர் மற்றும் முந்தானைகளில் ஜப்பானின் ஷாஷிகோ (Sashiko) வடிவங்கள் மற்றும் கிக்கியோ (Kikyo) மோட்டிப்களும், உடல் முழுதும் ஜரிகையின் நளினமான வேலைப்பாடுகளும் கொண்ட புடவை. காப்புரிமை பெறப்பட்ட KV நுட்பத்தில் கைத்தறியில் நெய்யப்பட்ட அற்புத புடவை.

ஜப்பான் கோர்வை

ஆரெம்கேவியின் டிசைன் ஸ்டுடியோ கலைஞர்களால் தனித்துவமாக உருவாக்கப்பட்ட எலுமிச்சை மஞ்சள் வண்ண கோர்வை முறையில் நெய்யப்பட்ட கைத்தறி பட்டு புடவை எலுமிச்சை வண்ணத்தோடு, இணையும் பார்டர் மற்றும் முந்தானைகளின் கருஞ்சிவப்பு வண்ணங்கள் மேலும் ஜப்பானிய மோட்டிப்கள் ஹனாபிஷி (Hanabishi) பூக்களின் கொடிகள், வடிவங்கள், அடையாளங்கள் பட்டின் பெருமை பேசும் கைத்தறியின் கலை வடிவம்.

மவுண்ட் ஃபுஜி (Mount Fuji)

அடர் இண்டிகோ வண்ணத்தில் ஜப்பானிய ஷாஷிகோ (Sashiko) வடிவங்களும், முந்தானையில் இளங்காலை பொழுதின் சாயலோடு பூத்துக் குலுங்கும் செர்ரி மரங்களும், சணல் செடிகளும், அமைதியான மவுண்ட் ஃபுஜியும். ஜப்பானிய அலங்கார வளைவும் கைத்தறியில் உருவாக்கப்பட்ட மிக அழகான, இப்புடவை ஆரெம்கேவி டிசைன் ஸ்டுடியோவின் கைதேர்ந்த நெசவுக்கலைஞர்களால் தனித்துவமாக உருவாக்கப்பட்டது.

நேச்சுரல் ஃபீச் கிரேடியன்ட்(Natural Peach Gradient)

இயற்கை வண்ணத்தில் ஆரெம்கேவி டிசைன் ஸ்டுடியோ கலைஞர்களால் நமது பாரம்பரிய கைத்தறி முறையில் ஜப்பானிய கலை நுணுக்கங்களோடு சாய்வக கட்டங்கள் (Gradient Checks) கொண்ட கோடுகளுடனும் ஃபீச் வண்ணங்களில், ஆறு விதமான வண்ணச் சேர்க்கைகளில், வெளிர் வண்ணம் முதல் அடர் வண்ணம் வரை, தனித்துவமாக சப்பான் மரம் (Sappan Wood) மற்றும் மரப்பிசின்களால் (Lac) உருவாக்கப்பட்டது. இயற்கை வண்ணத்தோடு ஜரி வெளிக்கோடுகளுடன் உருவாக்கப்பட்ட பட்டுப்புடவை. அழகிய கட்டங்களில் உட்புறமாக கமலம் புட்டாவும், மரபின் அடையாளங்களும் நிறைந்த கோர்வை முறையில் கான்ட்ராஸ்ட் வடிவமைப்புடன் நெய்யப்பட்ட அழகிய பட்டுப்புடவை.

ஆரெம்கேவி டிசைன் ஸ்டுடியோவின் இந்த வருடத்திற்கான மிகச்சிறந்த இயற்கை வண்ண பட்டுப்புடவை. பாக்கு மற்றும் காசுக் கட்டியை பயன்படுத்தி செம்பழுப்பு வண்ணமேற்றப்பட்டு, இதன் உடலெங்கும் பறக்கும் வகையிலான ஜப்பானிய கொக்கு வடிவங்களும், அதற்கு ஏற்ற வெள்ளி ஜரிகைகளின் அலை வடிவங்களும், புதிய தொழில் நுட்பத்தில் நெய்யப்பட்ட பட்டோவியம்.

வான் கோ லினோ (Van Gogh Lino)

உலகின் மிகச்சிறந்த ஓவியரான வான் கோ "ரீவெரி" பட்டு புடவை. உடலெங்கும் மிளிரும் சாலமன் பிங்க் வண்ணமும் அழகிய பொன்னிற பூக்களும், வான் கோவின் ஃபீல்ட் ஆஃப் ஐரிஸ் (Field of Irises) ஓவியத்தை மெஜந்தா வண்ண முந்தானையுடன் வடிவமைத்து ஆரெம்கேவியின் டிசைன் ஸ்டுடியோ கலைஞர்களால் காப்புரிமை பெறப்பட்ட லினோ நுட்பத்தில் 40% எடை குறைவாக இறகு போல் உருவாக்கப்பட்டது. பாரம்பரியத்திற்கும் எல்லா வித விழாக்களுக்கும் அணியும் வகையில் உருவாக்கப்பட்ட உன்னத பட்டுப்புடவை.

ராசலீலா பட்டுப் புடவை
ராசலீலா பட்டுப் புடவை

ராசலீலா பட்டுப் புடவை

டர்க்காய் வண்ணத்தில் கைத்தறியில் நெய்யப்பட்ட இந்தப் பட்டு புடவை தனித்துவமானது ஆரெம்கேளி டிசைன் ஸ்டுடியோவின் கைதேர்ந்த கலைஞர்களால் வடிவமைக்கப்பட்ட ராசலீலா எனும் ஆனந்தத்தின் அடையாளமான பட்டு புடவை. முந்தானையில் ஏகாந்தமாக நடனமிடும் கோபியர்களும், கிருஷ்ணரும் அடர் கடல் நீல வண்ண பட்டிழை மற்றும் ஜரியால் வடிவமைக்கப்பட்டு, பார்டரில் மயிலிறகு வண்ணமும் வடிவமும் அழகுற நெய்யபட்ட, மீனாகாரி வேலைப்பாடுகளும் கொண்ட இப்புடவை ஆன்ம உணர்வின் அமைதியை உணர வைக்கும் அற்புத படைப்பு.

டபுளா லினோ வர்ணா (Dubla Lino Varna)

ஆரெம்கேவியின் டிசைன் ஸ்டுடியோ கலைஞர்களால் உருவாக்கப்பட்ட ஜாம்தானி மோட்டிப்கள் புதுமைகளோடு தெளிவாக உருவாக்கப்பட்டது. பின்னல் வேலைப்பாடுகளுடனும் மல்லிகை பூவின் வடிவங்களுடனும் உடலெங்கும் மூவிலை வடிவ பூக்களுடனும் ஒளிரும் வகையில் படைக்கப்பட்ட கலையின் அடையாளம் காப்புரிமை பெற்ற லினோ நுட்பத்தால் 40% எடை குறைவாக உருவாக்கப்பட்டது. இப்புடவையின் முந்தானையும் பார்டர்களும் அழகிய மயில் வண்ண எதிர் வண்ணங்களுடனும், தூய பொன்னிற ஜரிகை வேலைப்பாடுகள் கொண்ட உடலும், கலாச்சாரத்தின் அடையாளங்களோடும் உருவாக்கப்பட்ட அற்புதமான பட்டுப் புடவை.

இயற்கை வண்ண செவ்வந்தி பூ

ஆரெம்கேவியின் டிசைன் ஸ்டுடியோ கலைஞர்களால் உருவாக்கப்பட்ட ரஸ்ட்டிக் பிரவுன் தொடர் பார்டருடன் கூடிய கோர்வை பட்டு இயற்கை பொருட்களான கடுக்காய், செவ்வல்லிகொடி, மல்பரி இலைகள் மற்றும் மரப்பிசின்கள் (c) கொண்டு வண்ணம் ஏற்றப்பட்டு கோர்வை முறையில் உருவாக்கப்பட்ட அற்புதமான பட்டுப்புடவை பாரம்பரியத்தின் சாயவோடு புதுமையும் கலந்து உருவாக்கப்பட்டது. உடல் எங்கும் செவ்வந்தி பூவின் வடிவங்களும் அதன் மீது தூய பட்டிழைகள் கொண்டு செய்யப்பட்ட மீனா வேலைப்பாடுகளும் கோர்வை முறையும் உடல் வண்ணத்திற்கு ஏற்ற அதோடு வேலைப்பாடுகளும், கோர்வை முறையும் உடல் வண்ணத்திற்கு ஏற்ற அதோடு இயல்பாய் இணையும் வகையில் பார்டரில் இணை வண்ணங்களும், இப்புடவையின் அழகை மேலும் எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது. எல்லா விழா காலங்களுக்கும் ஏற்ற அற்புதமான பட்டுப் புடவை.

இயற்கை வண்ண முப்பாகம்
இயற்கை வண்ண முப்பாகம்

இயற்கை வண்ண முப்பாகம்

ஆரெம்கேவியின் கைதேர்ந்த டிசைன் ஸ்டுடியோ கலைஞர்களால் இயற்கை வண்ணத்தில் உருவாக்கப்பட்ட முப்பாக கோர்வை பட்டு புடவை தேர்ந்தெடுக்கப்பட்ட மூலிகைகளான கடுக்காய், செவ்வல்லிகொடி, மல்பரி மற்றும் மரப்பிசின்கள் (Lac) கொண்டு உருவாக்கப்பட்ட இண்டிகோ, பச்சை ஃபீச் போன்ற வண்ணக்கலவைகளோடு. பின்னப்பட்ட ஜரி வேலைப்பாடுகளுடனும், அழகிய பாரம்பரிய கிளி வடிவங்களோடும். கட்டங்களுடன் கைத்தறியில் உருவாக்கப்பட்ட பட்டுப் புடவை.

கிரேடியன்ட் வர்ணா (Gradient Varna)

பாரம்பரியத்தையும் நவீன காலத்தையும் இணைக்கும் வகையில் ஆரெம்கேவியின் டிசைன் ஸ்டுடியோ கலைஞர்களால் கைத்தறியில் உருவாக்கப்பட்ட அழகிய பட்டோவியம் உடல் முழுதும் நீல நிறமும், அதன் மீது பச்சை நிற முக்கோண வடிவங்களும், பார்டர் மற்றும் முந்தானைகளில் மரகத பச்சை வண்ணமும் அதற்கேற்றார் போல வெள்ளி, பொன்னிற ஜரிகைகளின் வேலைப்பாடுகளும் புடவைக்கு மெருகூட்டுகிறது அற்புதமாக வடிவமைக்கப்பட்ட இப்புடவை அழகிய கலை படைப்பு.

கொட்டடி கட்டம்

ஆரெம்கேலி டிசைன் ஸ்டுடியோ கலைஞர்களால் உருவாக்கப்பட்ட அழகிய படைப்பு, தூய பட்டிழைகளால் பல வண்ணங்களான கட்டங்களும் அதற்கேற்ற ஜரிகையின் வெளிகோடுகளும் கருஞ்சிவப்பு வண்ண கட்டங்களில் ஒளிரும் நட்சத்திர பூக்களும் பூக்கள் வடிவங்கள் கொண்ட முந்தானையும், பொன்னிற கோடுகள் கொண்ட பார்டரும். அழகிவ வியப்பைத் தரும் கொட்டடி கட்டம் பட்டுப்புடவை

திரிகோண மாம்பழ புட்டா (Corner Mango)

ஆரெம்கேவி டிசைன் ஸ்டுடியோ கலைஞர்களால் உருவாக்கப்பட்ட புதுமையான பட்டுப் புடவை. நீலம் மற்றும் கடற் பச்சையென இரண்டு வண்ண கலவையால் அழகு மிளிரும் வடிவமைப்புடன் முந்தானையில் திரிகோண வடிவத்தில் மாங்காய் புட்டாவும் இணைத்து நெய்யப்பட்டு ஜரிகையால் வடிவமைக்கப்பட்ட அன்னம் மற்றும் யானை வடிவங்களும் உயர்ந்த அழகை வெளிப்படுத்துகிறது. எல்லா விழாக் காலத்திற்கும் ஏற்ற அழகிய கைத்தறி பட்டு புடவை.

குயில் கண் கோர்வை

ஆரெம்கேவி டிசைன் ஸ்டுடியோவின் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட பசும் மஞ்சள் வண்ணத்தில் கோர்வை முறையில் உருவாக்கப்பட்ட கைத்தறி பட்டுப்புடவை தனித்துவமான வண்ணமும், ஈவினிங் மார்னிங் பார்டர்களும் உடல் முழுதும் கமலம் பட்டாக்கள் வண்ண பட்டிழைகள் மற்றும் பார்டரில் பொன்னிற ஜரிகைகளின் வேலைப்பாடும் குயில் கண் வடிவங்களும் கொண்டு உருவாக்கப்பட்ட பட்டோவியம்.

குமோ கோர்வை (Kumo Korvai)

ஆரெம்கேவியின் டிசைன் ஸ்டுடியோ கலைஞர்களால் உருவாக்கப்பட்ட தனித்துவமான பிங்க வண்ண கோர்வை முறையில் நெய்யப்பட்ட கைத்தறி பட்டுப்புடவை உடல் முழுவதும் மென்மையான பிங்க வண்ணத்துடனும் அதில் ஜப்பானிய மேசுக் கூட்ட வடிவங்களும் அதற்கேற்ற வைலட் (Violet நிற வெளிகோடுகளும் பரப்பிள் நிற முந்தானையும் அதில் ஜரியால் நெய்யப்பட்ட யாக சூரி அம்பின் வடிவங்களும் தனித்துவமானவை இதை நல்ல எதிர்காலத்தின் அடையாளங்களாக கருதப்படுகின்றன. மேலும் அதன் பூக்கள் வடிவங்களும் பொன் நிற ஒரி வேலைபாடுகளும் வைர வடிவங்களும் கொண்டு நெய்யப்பட்ட அழகி பட்டுப்புடவை.

கடந்த நூறாண்டு கலரெம்கேவியின் பட்டு பயணத்தில் மிகவும் பேசுபொருளான தனித்துவமான படைப்புகள்ஹம்சமயத்தி பட்டுப்புடவை சின்னஞ்சிறு கிளியே பட்டுப்புடவை. தர்பார நிருஷ்ணாஐஸ்வரிய பூக்கள் மற்றும் குறளோவியம், கிராண்ட் ரிவர#பின் பட்டு படவை. 30,000 வண்ண பட்டு புடவை, வர்ணஜாலம் தொகுப்பு மிக தனித்துவமான இயற்கை வண்ண பட்டுபுடவைகள் எடை குறைவான வினோ தொகுப்பு, மரபு மீட்டுருவாக்க பட்டுபுடவைகள் தொகுப்பு போன்ற படைப்புகளின் கருத்தாக்கங்களும். தொழில்நுட்பங்களும் ஆய்வு வெற்றிகளோடும் உருவாக்கப்பட்ட சாதனை படைப்புகளாக உலா வருகின்றன.

ஆரெம்கேவி திருமண பட்டு புடவைகளில் தனித்துவமான பட்டுக்களை அறிமுகப்படுதியடுல் வாடிக்கையாளர்களின் குடும்ப உறுப்பினராகவே மாறி இருக்கிறது சென்னையில் மூன்று நிளைகளோடும் திருகர் பனகல் பூங்க வடபழனி தெக்சஸ் விஜயா மால் பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி வேளச்சேரி மற்றும் திருநெல்வேலி கோயம்புத்தூர் பெங்களுகு அகிய கிளைகளோடு இயங்கி வருகிறது.

தொடர்ந்து தனித்துவமான படைப்புகளை அறிமுகப்படுத்துவதோடு இல்லாமல் கைத்தறி நெசவாளர்களுக்கு உதவும் வகையில் மாட்ரனைவிடு அமேடில் வேண்Moned Pleumatic Harlooபெண்களுான் எனிதாக நெய்யும் விதமாக புதியுதோடு நதியை வடிவமைத்து தெசலாளர்களுக்கு அரப்பணித்து இருக்கிறது நெசவாளர்களின் குடும்ப பொருளாதார மேய்பாட்டிற்கும் வரைச்சிக்கும் ரெம்கேளி என்றென்றும் துணை நிற்கும் என்பதற்கு இது ஒரு சாட்சியாக அமைகிறது.

சூப்பர் சென்னை 'Icon of the month' விருது - சென்னையின் மதிப்பை உயர்த்திய Dr. எஸ். சந்திரகுமார்

இந்த அங்கீகாரம், மருத்துவத் துறையில் டாக்டர் சந்திரகுமார் செய்த முன்னோடி பங்களிப்பையும், 'இந்தியாவின் மருத்துவத் தலைநகரம்' என சென்னையின் மதிப்பை உயர்த்திய அவரது முக்கிய பங்கையும் வெளிப்படுத்துகிறது. ... மேலும் பார்க்க

Pilots: விமானம் ஏறுவதற்கு முன் விமானிகள் பர்ப்யூம் பயன்படுத்தக்கூடாது; காரணம் என்ன தெரியுமா?

இந்தியாவில் பணிபுரியும் விமானிகள், விமானம் புறப்படுவதற்கு முன் பர்ப்யூம், டியோடரண்ட் அல்லது அல்கஹால் அடிப்படையிலான தயாரிப்புகளைத் தவிர்ப்பது ஒரு நடைமுறையாக மாறியுள்ளது. இதற்குப் பின்னால் மிக முக்கியமா... மேலும் பார்க்க

Social Media: ``சிரித்த பிறகாவது சிந்திப்போம்!'' - இமிடேட், மீம்ஸ் தொடர்பான ஆதங்கம்

சுடச்சுட அருமையான தேநீர்... மணம், சுவை, திடம் இப்படி ஒரு தேநீருக்குத் தேவையான அத்தனை குணங்களும் நிரம்பப்பெற்ற ஒரு தேநீரில், ஆளுக்குக் கொஞ்சம் நீரை ஊற்றினால்... எதற்காகத் தயாரிக்கப்பட்டதோ, அதற்குப் பயன... மேலும் பார்க்க

காலையில் கனவுகள் ஏன் வருகின்றன தெரியுமா? - பின்னால் இருக்கும் அறிவியல் காரணம் இதுதான்!

காலையில் நாம் காணும் கனவுகள், நம் மனதின் ஆழமாக இருக்கும் விஷயங்களை பிரதிபலிப்பவையாக இருக்கும். காலையில் கனவுகள் ஏன் தோன்றுகின்றன, ஏன் சிலர் இவற்றை நினைவில் வைத்திருக்கின்றனர், சிலர் ஏன் மறந்துவிடுகின்... மேலும் பார்க்க

'தெரு நாய்கள் விவகாரம்' - உங்கள் கருத்து என்ன? | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

பல முக்கிய தருணங்களில் எனக்குத் துணையாய் இருந்த நகரம் - சென்னையை ரசிக்கும் காதலி #Chennaidays

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க