செய்திகள் :

Sneha Debnath: ``ஒரு CCTV கேமரா கூட வேலை செய்யவில்லையா?'' - உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினர் கவலை

post image

6 நாட்களுக்கு முன் காணாமல் போன டெல்லி பல்கலைக்கழக மாணவி சினேகா டெப்நாத் (Sneha Debnath), சடலமாக யமுனை ஆற்றிலிருந்து மீட்கப்பட்டிருக்கிறார்.

மாணவி சினேகா திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆத்ம ராம் சனாதான தர்ம கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இளங்கலைப் பட்டம் படித்து வந்திருக்கிறார்.

Delhi University Student - Sneha
Delhi University Student - Sneha

கடந்த ஜூன் 7-ம் தேதி தனது தோழியை டெல்லியிலுள்ள சராய் ரோஹிலா ரயில் நிலையத்திலிருந்து ஊருக்கு அனுப்பி வைக்கச் செல்வதாக தனது பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றிருக்கிறார் சினேகா.

காலை 5.15 மணிக்கு கேப் பிடித்து வீட்டிலிருந்து கிளம்பியிருக்கிறார். பிறகு, காலை 8.45 மணிக்கு சினேகாவின் தொலைபேசி ஆஃப் செய்யப்பட்டிருக்கிறது.

அதன் பிறகு, சினேகாவை அழைத்துச் சென்ற கேப் டிரைவரை அவரது குடும்பத்தினர் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள். அவர் சினேகாவை வசிராபாதிலுள்ள சிக்னேச்சர் பாலத்தில் இறக்கிவிட்டதாகக் கூறியிருக்கிறார்.

அந்தப் பகுதியில், சி.சி.டி.வி கேமராக்களும் பழுதான நிலையில் இருந்ததால் சினேகா எங்கு சென்றார் எனக் காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

பிறகு, அப்பகுதியில் அருகிலிருந்தவர்கள் கடைசியாக அவரை சிக்னேச்சர் பாலத்தில் பார்த்ததாகக் கூறியிருக்கிறார்கள். தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் காவல்துறைப் பிரிவுகளின் உதவியுடன் அப்பகுதியில் தேடுதல் பணியைத் தொடங்கியது. 6 நாள்களுக்குப் பிறகு அவரின் சடலத்தை மீட்டிருக்கிறார்கள்.

Signature Bridge
Signature Bridge

சினேகா கடந்த சில நாள்களாக மன உளைச்சலில் இருந்ததாக அவரது நண்பர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்திருக்கிறார்கள்.

சினேகாவின் குடும்பத்தினரும் சில நண்பர்களும் சிக்னேச்சர் பாலப் பகுதியில் உள்ள கண்காணிப்பு குறித்து கவலை தெரிவித்திருக்கிறார்கள்.

சினேகா காணாமல் போன நேரத்தில் சிக்னேச்சர் பாலத்திலோ அல்லது அதன் அருகிலோ உள்ள எந்தவொரு சிசிடிவி கேமராக்களும் செயல்படவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மும்பை: குடிபோதையில் கடலுக்கு காரை ஓட்டிய நண்பர்கள்; சுற்றுலா வந்த இடத்தில் சோதனை..

மத்திய பிரதேசத்தை சேர்ந்த பிரிஜேஷ் சோனி (33), ஆந்திராவைச் சேர்ந்த நஜீப் (42) ஆகியோர் மும்பையை சுற்றிப்பார்க்க வந்தனர். அவர்கள் மும்பையில் உள்ள தங்களது நண்பர் யாதவ் என்பவருடன் சேர்ந்து மும்பை முழுக்க க... மேலும் பார்க்க

தலைமறைவாக இருந்த பி.ஏ.சி.எல் இயக்குநர் கைது - 5 கோடி மக்களிடம் ரூ.49,000 கோடி மோசடி செய்தது எப்படி?!

இந்தியாவில் அதிக வட்டி தருவதாக கூறி முதலீடுகளை பெற்று மோசடி செய்யும் சம்பவங்கள் எத்தனையோ நடந்துள்ளது. அதில் மிகவும் முக்கியமானது பி.ஏ.சி.எல் அக்ரோ டெக் கார்ப்ரேசன் செய்த மோசடியாகும். இந்தியாவிலேயே மிக... மேலும் பார்க்க

Sneha Debnath: 6 நாள்களுக்குப் பின் யமுனை ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட மாணவி.. என்ன நடந்தது?

டெல்லியில் உள்ள ஆத்மராம் சனாதன் தர்மா கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வந்த திரிபுராவைச் சேர்ந்த மாணவி ஸ்நேகா தேவ்நாத் (Sneha Debnath) (19) கடந்த ஆறு நாள்களாக காணவில்லை. அவரது குடும்பத்தின... மேலும் பார்க்க

கோவை டாக்டரை டிஜிட்டல் முறையில் கைது செய்து ரூ.2.9 கோடி பறிப்பு; தனியறையில் இருந்தவரை மீட்ட போலீஸார்

நாடு முழுவதும் இணையத்தள குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நன்றாகப் படித்து உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் கூட சைபர் குற்றவாளிகளின் வலையில் சிக்கி விடுகின்றனர். கோவையைச் சேர்ந்த பிரப... மேலும் பார்க்க

மகளை கொலை செய்த தந்தை: "மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்" - தி கிரேட் காளி சொல்வதென்ன?

தி கிரேட் காளி என அறியப்படும் தலீப் சிங் ராணா முன்னாள் குத்துச் சண்டை நட்சத்திரமும் பாஜக பிரமுகருமாவார். சமீபத்தில் டென்னிஸ் வீராங்கனையான ராதிகா யாதவ் என்ற பெண் அவரது சொந்த தந்தையால் சுட்டுக்கொல்லப்பட... மேலும் பார்க்க

பீகார் பாஜக தலைவர் கொலை; "ஒன்றுக்கும் உதவாத பாஜக துணை முதல்வர்கள் என்ன செய்கிறார்கள்?" - தேஜஸ்வி

பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த வாரம் தொழிலதிபர் கோபால் கெம்கா என்பவர் தனது காரில் இருந்து இறங்கியபோது சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.தற்போது பா.ஜ.க பிரமுகர் சுரேந்திர கேவத் பாட்னாவின் ஷேக்புரா பகுதியில்... மேலும் பார்க்க