செய்திகள் :

Tiger Death: மாட்டிறைச்சியில் பூச்சி மருந்து.. துடிதுடித்து மடிந்த 5 புலிகள்; வனத்தில் என்ன நடந்தது?

post image

கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டதில் உள்ள மலே மாதேஸ்வரா வனப்பகுதியில் நேற்று முன்தினம் 5 புலிகள் ஒரே இடத்தில் இறந்துக் கிடப்பதைக் கண்ட வனத்துறையினர் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள்.

தாய்புலி மற்றும் அதன் நான்கு குட்டிகளும் மர்மமான முறையில் கொல்லப்பட்டிருப்பதை உறுதி செய்த வனத்துறையினர், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மர்மமாக இறந்து கிடந்த புலி
மர்மமாக இறந்து கிடந்த புலி

5 புலிகளின் உடல்களையும் கூறாய்வு செய்து மாதிரிகளைச்‌ சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். கர்நாடக மாநில வனத்துறை அமைச்சர் முதல் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வரை இந்த விவகாரத்தில் களமிறங்கி தீவிர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அடுத்தடுத்த அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துவருகின்றனர்.

இறைச்சியில் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், புலியால் கொல்லப்பட்ட பசுமாட்டின் சடலத்தில் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதைத் தற்போது உறுதி செய்துள்ளனர். இது தொடர்பாக மூன்று பேரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மர்மமாக இறந்து கிடந்த புலி

கொடூர பின்னணி குறித்து தெரிவித்துள்ள அம்மாநில வனத்துறை அதிகாரிகள், "இந்த வனப்பகுதியில் தாய் புலி ஒன்று தன்னுடைய நான்கு குட்டிகளையும் பராமரித்து வந்தது. வனப்பகுதிக்குள் நடமாடிய பசு மாட்டை தாய் புலி வேட்டையாடியிருக்கிறது.

அதன் இறைச்சியைக் குடும்பமாகத் தின்றுவிட்டு மிச்சம் வைத்துச் சென்றுள்ளன. இதைக் கண்டு ஆத்திரமடைந்த பசு மாட்டின் உரிமையாளர்கள், எஞ்சிய பசு மாட்டின் சடலத்தில் பூச்சிக்கொல்லி மருந்தைக் கலந்து விட்டு யாருக்கும் தெரியாமல் சென்றிருக்கிறார்கள்.

5 புலிகளும் குடும்பமாக வந்து மீண்டும் அந்த இறைச்சியைத் தின்றுள்ளன. உடல் முழுக்க விஷமேறி துடிதுடித்து பரிதாபமாக இறந்துள்ளன. விஷம் கலக்கப்பட்ட இறைச்சி, புலிகளின் வயிற்றில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

புலிகள் இறந்துக் கிடந்த இடத்தில் இருந்து சில மீட்டர்கள் தொலைவில் பசு மாட்டின் சடலமும் கண்டறியப்பட்டுள்ளது ‌. பசு மாட்டிற்கு ஈடாகப் புலிகளைக் கொல்ல வேண்டும் என்கிற கொடூரமான‌ பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட கொப்பா கிராமத்தைச் சேர்ந்த மடராஜா, நாகராஜ், கொனப்பா ஆகிய 3 நபர்களைத் தற்போது கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். தொடர் விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளிவரும்" எனத் தெரிவித்துள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

விவாகரத்தில் ரூ.5 கோடி பெற்ற பெண்ணிடம், திருமண ஆசைகாட்டி ரூ.3.60 கோடி மோசடி செய்த இளைஞர்

புனேயை சேர்ந்த பெண் ஒருவரை லக்னோவை சேர்ந்த நபர் திருமண ஆசை காட்டி ரூ. 3.60 கோடியை மோசடி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த 35 வயது பெண் தனது முதல் கணவரை விவாகரத்து செய... மேலும் பார்க்க

தெலங்கானா: வண்டியில் GPS; காதலன், தாய் செய்த உதவி; கணவனைக் கொன்ற மனைவி கைது; விசாரணையில் பகீர் தகவல்

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகில் உள்ள கட்வால் என்ற இடத்தைச் சேர்ந்த தேஜஸ்வருக்குக் கடந்த மே 18ம் தேதிதான் ஐஸ்வர்யா என்பவருடன் திருமணம் நடந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தேஜஸ்வர் திடீரென காணாமல் ... மேலும் பார்க்க

மும்பை: சட்டவிரோதமாக குடியேறும் வங்கதேசத்தினர்; ஒப்பந்தாரர்களுக்கு அரசு எச்சரிக்கை; பின்னணி என்ன?

மகாராஷ்டிராவில் குறிப்பாக மும்பை, புனே போன்ற நகரங்களில் ஏராளமான பங்களாதேஷ் பிரஜைகள் சட்டவிரோதமாகக் குடியேறி கட்டுமானத்தொழில், தொழிற்சாலைகள், உணவகங்கள் போன்றவற்றில் வேலை செய்து வருகின்றனர். அவர்கள் தங்... மேலும் பார்க்க

தேனி: திமுக கவுன்சிலர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு; பின்னணி என்ன?

தேனி மாவட்டம், அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர் ராமசாமி. திமுக-வைச் சேர்ந்த தேனி வடக்கு நகர பொறுப்பாளரும், தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்றத் தலைவர் ரேணுபிரியாவ... மேலும் பார்க்க

Ooty: பரிகாரம் எனச் சொல்லி பக்தர் நெற்றியில் கத்திக்குத்து; சாமியார் சிறையில் அடைப்பு; என்ன நடந்தது?

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள தூதூர்மட்டம் மகாலிங்க நகர் பகுதியைச் சேர்ந்தவர் 54 வயதான சிவகுமார். தன்னைச் சாமியார் என அறிவித்துக் கொண்ட சிவக்குமார், வீட்டிற்குள் சாமி சிலை ஒன்றை வைத்து மக்களு... மேலும் பார்க்க

கொல்கத்தா: "காலில் விழுந்து கெஞ்சியும் விடவில்லை" - பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கல்லூரி மாணவி

கொல்கத்தாவில் கடந்த புதன் கிழமை இரவு தெற்கு கொல்கத்தா சட்டக்கல்லூரியில் படிக்கும் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இச்சம்பவம் கொல்கத்தாவில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது... மேலும் பார்க்க