Travel Contest: பீகாரின் வறட்சி; புத்தரின் அமைதி; காசியின் நெரிசல்; வட இந்திய பயணம் எப்படி இருந்தது?
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது.
இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள்.
விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்.
நீண்ட கால நண்பரும் இலாப நோக்கம் இல்லாமல் பயண ஏற்பாடு செய்பவருமான நண்பரின் அழைப்பின் பேரில் அலகாபாத் கயா காசி சுற்றுலா செல்ல ரயில் மூலம் பயணம் செய்து கயா சென்றடைந்தோம்.
பீகாரின் வறட்சி கண்களில் நீராகப் பனித்தன.
கயாவில் புத்த ஆலயம் அமைதியைப் பூரணமாக உணர்ந்தேன். சிறிது நேரம் புத்தர் தியானித்த போதி மரத்தின் கீழே அமர்ந்து மனம் ஒன்றுபட்ட நிலை ஏற்பட்டன.

பின்னர் அங்கிருந்து அலகாபாத் தற்போது அதன் பெயர் பிரயாக்ராஜ். திரிவேணி சங்கமத்தில் மூழ்கி வேண்டுதல் செய்தும், சில சடங்குகள் நிறைவேற்றி விட்டு மறுநாள் அயோத்தி ராமர் ஆலய தரிசனம்.
அந்த கோவில் இன்னும் முழுமையாகக் கட்டி முடிக்கவில்லை. சில அடிப்படையான குடிநீர் கழிப்பிட வசதி சரியான முறையில் அமைக்கப்படவில்லை.
அதே போலக் கூட்ட நெரிசலை நமது தென்மாநிலங்கள் போல முறைப்படுத்துதல் இல்லை. அங்குள்ள காவலர்கள் அலட்சியமாக இருக்கிறார்கள்.

நீண்ட தூரம் வயதானவர்களுக்குச் சக்கர நாற்காலி உண்டு. தரிசனம் முடிந்த மறுநாள் காசி விஸ்வநாதர் தரிசனம். காலை மூன்று மணிக்கு வரிசையில் சென்றால், எங்களுக்கு முன்னால் ஆயிரம் பேர் இருந்தனர்.
ஒரு வழியாகத் தரிசனம் முடிந்து அடுத்து எந்த தரிசனம் என்பதில் சரியான வழிகாட்டுதல் ஆலய சார்பில் தெரிந்து கொள்வதில் மொழிப் பிரச்னை. அவர்களுக்கு இந்தி தவிர வேறு மொழி தெரியவில்லை.
வெளியே வந்தால் போக்குவரத்து முடக்கம். நீண்ட கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இதனால் அன்னபூரணி தரிசனம் கிடைக்க வில்லை. கங்கையில் வெள்ள அபாய எச்சரிக்கை, ஆதலால் மாலை ஆர்த்தி தரிசனம் கிடைக்கவில்லை.
மாலை ஐந்து மணியளவில் கால பைரவர் தரிசனம் எங்குப் பார்த்தாலும் மக்கள் கூட்டம், போக்குவரத்து நெரிசல்.
இரவு ரயில் பயணம் துவங்கி சென்னை வந்தடைந்தேன்.
முத்தாய்ப்பாக நமது தென்மாநிலங்களில் ஆலயங்களில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் விதம் வடமாநிலத்தவர் கற்க வேண்டிய பாடம்.
My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா' கட்டுரை

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.
இந்த மாதத்திற்கான தலைப்பு - `சுற்றுலா'. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.
வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
பரிசுத்தொகை விவரம்:
முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)
இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)
நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)
நினைவில் கொள்க:
நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 20, 2025
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.
உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்
விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்
உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது.
கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.