ஹரியாணா: கால்வாயில் வாகனம் கவிழ்ந்ததில் 9 பேர் பலி, 3 பேர் மாயம்
Union Budget 2025: நிர்மலா சீதாராமன் அணிந்துவந்த 'மதுபானி' சேலை; பரிசளித்த பத்மஶ்ரீ யார் தெரியுமா?
கடந்த 7 ஆண்டுகளாக ஒவ்வொரு முறையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கட்டிவரும் சேலை பேசுபொருளாகி வருகிறது.
தொடர்ந்து 8வது முறை பட்ஜெட் தாக்கல் செய்து சாதனை படைத்த நிர்மலா சீதாராமன், வெள்ளை நிற கைத்தறி பட்டுப் புடவை அணிந்து வந்திருந்தார். தங்க பார்டருடன், மதுபானி கலை வடிவத்தில் மீன் எம்ப்ராய்டரி செய்யப்பட்டிருந்தது.
இந்த சேலை நிர்மலா சீதாராமனுக்கு பத்மஶ்ரீ விருது பெற்ற துலாரி தேவி பரிசாக வழங்கியுள்ளார்.
மதுபானி என்பது பீகாரின் மிதிலா பகுதியில் செய்யப்படும் பாரம்பரிய நாட்டுப்புற ஓவிய பாணி. இதன் நிறம் மற்றும் குறியீட்டுச் சின்னங்களுக்காகப் புகழ்பெற்றிருக்கிறது. இந்த ஓவியக் கலையை வரைந்து சேலையில் பொறித்துள்ளார் துலாரி தேவி.
துலாரி தேவி அவரது முதலாளி கபூரி தேவியிடமிருந்து இந்த கலையைக் கற்றுள்ளார். அவரது வாழ்க்கையில் பல கடினமான சூழல்களைக் கடந்து வந்துள்ளார்.
அவரது கலையின் மூலம் குழந்தை திருமணம், எய்ட்ஸ் ஆகியவற்றுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இதுவரை 10,000-க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்துள்ள துலாரி தேவியின் ஓவியங்கள் 50க்கும் மேற்பட்ட கண்காட்சிகளில் வைக்கப்பட்டுள்ளன.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs