செய்திகள் :

US Tariff: ரஷ்யாவுடன் வர்த்தகம் - இந்தியாவை மட்டும் குறிவைப்பது ஏன்? - ட்ரம்ப் பதில்!

post image

அமெரிக்காவின் அதிகபட்ச வரிவிதிப்பை எதிர்கொள்ளும் நாடாக மாறியிருக்கிறது இந்தியா. கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி 25% வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டதுடன், 6ம் தேதி கூடுதலாக 25% வரியை விதித்துள்ளார் டொனால்ட் ட்ரம்ப்.

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக இந்த கூடுதல் வரி விதிக்கப்படுவதாக டொனால்ட் ட்ரம்ப் கூறியிருக்கும் நிலையில் ரஷ்யாவிடம் எரிபொருள் வர்த்தகம் செய்யும் பிற நாடுகளை விட்டுவிட்டு இந்தியாவை மட்டுமே குறிவைப்பது ஏன் எனக் கேட்கப்பட்டது.

சீனா போன்ற ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்யும் பிற நாடுகளுக்கு கூடுதல் வரிகள் விதிக்கப்படாதது ஏன் என நிருபர் ஒருவர் கேட்டபோது, “வெறும் 8 மணிநேரம் தான் ஆகியிருக்கிறது. என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்துப்பாருங்கள். இன்னும் பல இரண்டாம் நிலை தடைகளைப் பார்க்கப்போகிறீர்கள்” எனப் பதிலளித்துள்ளார். 

Trump

சமீப ஆண்டுகளில் இந்தியாவுக்கு அண்டை எதிரியான சீனாவை எதிர்கொள்ள ஆதரவாக இருக்கும் நாடு அமெரிக்கா. ரஷ்யாவை உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தை மேற்கொள்ள அழுத்தம் கொடுக்க வேண்டுமென அமெரிக்க அதிபர் இந்தியா மீது வரிகளை விதித்து வருகிறார். 

இந்தியா அதன் முக்கிய எதிரியாக கருதும் பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நிலை வரலாம் என கேலி செய்தார் ட்ரம்ப். இந்தியா இவற்றுக்கு எதிர்வினையாற்றும் வகையில், அமெரிக்கா ரஷ்யாவிடமிருந்து யுரேனியம் மற்றும் உரங்களை தொடர்ந்து வாங்கி வருவதன் மூலம், ரஷ்யாவுடனான வர்த்தக தடையில் இரட்டை நிலைப்பாட்டைக் கடைபிடிப்பதாக இந்தியா குற்றம்சாட்டியது.

மேலும் இந்தியாவின் 140 கோடி மக்களின் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்ய சந்தை நிலவரத்தைப் பொருத்து சில முடிவுகள் எடுக்கப்படுவதாகவும் விளக்கம் அளித்தது. அமெரிக்காவிடம் இவற்றைத் தெளிவுபடுத்தியும் வரி விதித்திருப்பது, “நியாயமற்றது மற்றும் காரணமில்லாதது” என விமர்சித்தது இந்திய தரப்பு. 

ரஷ்யாவும் சீனாவுமே அமெரிக்காவின் எதிரிகள் எனப் பேசி வந்த ட்ரம்ப், திடீரென இந்தியாவின் மீது ஆக்ரோஷத்தை திருப்பியிருப்பது அமெரிக்க அரசியலிலும் இந்திய அரசியலிலும் பூகம்பமாக திரும்பியுள்ளது. 

"எம்.ஜி.ஆரை அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை!" - தொல்.திருமாவளவன் விளக்கம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,"தம... மேலும் பார்க்க

பாமக பொதுக்குழு முதல் விசிக ஆர்ப்பாட்டம் வரை - 09.08.2025 முக்கியச் செய்திகள்!

Pஆகஸ்ட் 9 முக்கியச் செய்திகள்தேனி பங்களாமேடு பகுதியில் 14 வயது சிறுவன் பராமரிப்பு பணிக்காக சென்ற ரயில் என்ஜின் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சல்மான் கானை தொடர்பு கொண்டதற்கா... மேலும் பார்க்க

"எம்.ஜி.ஆர் குறித்து பேசுவதற்கு திருமாவளவனுக்கு தகுதி இல்லை" - எடப்பாடி பழனிசாமி காட்டம்

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "எம்ஜிஆர் குறித்து பேசுவதற்கு திருமாவளவனுக்கு தகுதி இல்லை. எம்ஜிஆர் தமிழ்நாட்டு மக்களுக்கு தெய்வமானவர். அப்படிப்பட்டவரை விமர்... மேலும் பார்க்க

'பக்கம் எண் 44, வாக்குறுதி எண் 285' - திமுகவின் வாக்குறுதியும் பொய் பேசிய சேகர் பாபுவும்?

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே தூய்மைப் பணியாளர்கள் 9 வது நாளாக போராடி வருகின்றனர். தங்கள் மண்டலங்களை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது என்பது பணி நிரந்தரமுமே அவர்களின் கோரிக்கை. போராட்டக்குழுவுடன் ப... மேலும் பார்க்க

கமல் ஹாசன்: "தேவையற்ற பொதுத் தேர்வுகள், அநீதியான நுழைவுத் தேர்வுகள்" - முதலமைச்சரை பாராட்டிய கமல்!

பள்ளிக் கல்விக்கான தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025-ஐ முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், "இந்தக் கல்விக்கொள்கை, சமத்துவத்தையும் சமூகநீதியையும் சேர்த்தே போதிக்கிற... மேலும் பார்க்க

"3, 5, 8ம் வகுப்பு பிள்ளைகளுக்கு தேர்வு வைப்பதை ஒருபோதும் ஏற்க மாட்டோம்" - சீமான் பேச்சு!

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழ்நாடு அரசு, மாநில கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு பல தரப்பிலிருந்து ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியிருக்கிற... மேலும் பார்க்க