செய்திகள் :

Uttar Pradesh: `இரு முறை கடித்தால் முகாம்களில் அடைப்பு' - தெருநாய் பிரச்னைக்கு புதிய நெறிமுறைகள்

post image

தெருநாய்கள் தொடர்பாக சமீபத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் பெரும் சர்ச்சையை கிளப்பின.

டெல்லியில் தெருநாய்களை பிடித்து முகாம்களில் அடைக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், பின்னர் தனது உத்தரவை திருத்திக்கொண்டு தெருநாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்து, அவற்றை மீண்டும் அவற்றின் இடங்களில் விட்டுவிட உத்தரவிட்டது.

தெருநாய்
தெருநாய்

தெருநாய்கள் பாதசாரிகள், வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக இருந்தாலும், அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் மக்கள் கொந்தளித்து விடுகின்றனர். நாய்கள் எப்போதும் பாசமாக இருக்கும். அதேசமயம் சில நேரங்களில் ஆக்ரோஷத்தில் நாய்கள் பொதுமக்களை தாக்குவதுண்டு.

அதுபோன்று, பொதுமக்களை கடிக்கும் தெருநாய்களுக்கு எதிராக உத்தரப் பிரதேச அரசு நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.

உத்தரப் பிரதேச அரசு வெளியிட்ட நெறிமுறைகள் அறிக்கையின் படி,

பொதுமக்கள் யாரையாவது தெருநாய் கடித்தால் அந்த நாயை உள்ளாட்சி நிர்வாகம் பிடித்து சென்று 10 நாட்கள் கண்காணிப்பில் வைத்திருந்து, பின்னர் விடுவிப்பார்கள். அவ்வாறு விடுவிக்கப்படும் தெருநாய் மீண்டும் அதே தவறை செய்யும் பட்சத்தில் அந்த நாய் நிரந்தரமாக முகாம்களில் அடைக்கப்படும் என்று உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

DOG
தெருநாய்

அது போன்று, முகாம்களில் அடைக்கப்படும் தெருநாய்களை பொதுமக்கள் தத்து எடுத்துக்கொள்ள அனுமதி கொடுக்கப்படும்.

ஆனால், அவ்வாறு தத்து எடுப்பவர்கள் அந்த நாயை மீண்டும் தெருவில் விடமாட்டேன் என்று உத்தரவாதம் எழுதிக் கொடுக்க வேண்டும்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

அதோடு, யாரையாவது நாய் கடித்திருந்தால், அவர்கள் வெறுநாய்க்கடிக்கான ஊசி போட்டுக்கொண்டார்களா என்பதை உறுதி செய்யும்படியும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

50,000 தேனீக்களுடன் நட்பு; உடலை மூடிய தேனீக்கள், ஆனாலும் கொட்டவில்லை - உ.பியில் நடந்த விநோத சம்பவம்

தேனீக்கள் என்றாலே, நம்மில் பலருக்கும் ஒருவித அச்சம் ஏற்படும். அதன் கொடுக்குகள் ஏற்படுத்தும் வலியும், வீக்கமும் இதற்குக் காரணம். தேனீயைப் பார்த்தாலே தெறித்து ஓடுபவர்களுக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான தேனீ... மேலும் பார்க்க

Mumbai Monorail: ``சேவையை மேம்படுத்த தற்காலிகமாக மோனோ ரயிலை நிறுத்துகிறோம்'' - மஹாராஷ்டிரா அரசு

இந்தியாவில் மும்பையில் மட்டுமே மோனோ ரயில் சேவை அமலில் உள்ளது. மும்பை செம்பூரில் இருந்து ஜேக்கப் சர்க்கிள் வரை இந்த மோனோ ரயில் இயக்கப்படுகிறது. ஆனால், இதற்கு மக்களிடையே போதிய வரவேற்பு இல்லை. இதனால் மாந... மேலும் பார்க்க

அமிதாப் பச்சன் : ரத்ததானம் பெற்றதில் வைரஸ் தொற்று, 25% கல்லீரலுடன் வாழ்கிறேன்

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் தனது 82 வயதிலும் இன்னும் ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கிறார். திரைப்படங்கள், கோன்பனேகா குரோர்பதி டிவி நிகழ்ச்சி, விளம்பரங்கள், சோசியல் மீடியா என்று தன்னை எப்போதும் உற்சாகமாக... மேலும் பார்க்க

Pakistan: 15 வயதில் மாரடைப்பு; பாகிஸ்தான் மக்களை சோகத்தில் ஆழ்த்திய குழந்தை பிரபலத்தின் மரணம்!

பாகிஸ்தானின் பிரபல தொலைக்காட்சி நட்சத்திரமான உமர் ஷா என்ற சிறுவன், 15 வயதில் திடீர் மாரடைப்பு (cardiac arrest) காரணமாக உயிரிழந்த செய்தி, அந்நாட்டு பொழுதுபோக்கு உலகையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சமூக... மேலும் பார்க்க

குட்டி சிம்பன்சிக்கு ரீல்ஸ் காட்டத் தடை- பூங்காவின் விநோத அறிவிப்பு; பின்னணி என்ன?

மனிதர்களைப் போலவே, விலங்குகளும் மொபைல் ஃபோன்களுக்கு அடிமையாகும் பழக்கம் சீனாவில் அதிகரித்து வருவதாகப் பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.ஷாங்காய் வனவிலங்கு பூங்காவில் உள்ள "டிங் டிங்" என்ற இரண்டு வய... மேலும் பார்க்க

Jwala Gutta: 30 லிட்டர் தாய்ப்பாலைத் தானமாக வழங்கிய விஷ்ணு விஷால் மனைவி; குவியும் பாராட்டு!

தாயை இழந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைக்க, அரசு மருத்துவமனைகளில் தாய்ப்பால் வங்கிகளை சில மாநில அரசுகள் நடத்தி வருகின்றன. அந்த வங்கிக்கு தாய்மார்கள் தங்களது குழந்தைக்குப் போக எஞ்சியிருக்கும் பாலைத் ... மேலும் பார்க்க