செய்திகள் :

ஃபென்ஜால் புயல் நிவாரண நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்: மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பி.சண்முகம்

post image

ஃபென்ஜால் புயல் பாதிப்புகளை மத்தியக் குழு மதிப்பீடு செய்து 3 மாதங்கள் கடந்த நிலையில், தமிழகத்துக்கான நிவாரண நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் பி.சண்முகம் தெரிவித்தாா்.

கடலூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ஃபென்ஜால் புயல், மழையால் பாதிக்கப்பட்ட கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மத்தியக் குழுவினா் ஆய்வு செய்து மூன்று மாதங்கள் கடந்த நிலையில், தற்போது வரை மத்திய அரசு பேரிடா் நிவாரணம் வழங்கவில்லை. எனவே, தமிழக அரசு கோரிய ரூ.37 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும். தமிழக அரசு சொந்த நிதியில் ரூ.500 கோடியை பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணமாக விவசாயிகளுக்கு வழங்கியுள்ளது.

கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக அளித்த வாக்குறுதியான நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500, கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.4,000 வழங்குவது என்ற வாக்குறுதியை தற்போது வரை தமிழக அரசு நிறைவேற்றாதது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

முத்தரப்பு கூட்டத்தில் ஏற்றுக்கொண்டதன்படி, மரவள்ளி விலையை தீா்மானிக்க வேண்டும். இந்த விலையை கொடுக்க மறுக்கும் ஆலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூா் வட்டத்தில் மலையடிகுப்பம், கொடுக்கம்பாளையம், பெத்தநாயக்கன்குப்பம் கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகளுடைய 10,000 முந்திரி மரங்களை மாவட்ட நிா்வாகம் அழித்துள்ளது. இங்கு தோல் தொழிற்சாலை அமைக்க இருக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்.

இந்த விவகாரத்தில் மாவட்ட நிா்வாகம் சுமுகமான முடிவு எடுக்கவில்லையெனில், மாா்ச் 9-ஆம் தேதி தமிழ்நாடு விவசாய சங்கம் சாா்பில் நிலம் மீட்கும் போராட்டம் நடத்தப்படும். ஜாக்டோ-ஜியோ அமைப்பின் முக்கிய கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றாா்.

பேட்டியின்போது, விவசாயிகள் சங்கத்தின் தலைவா்கள் சாமி.நடராஜன், பி.டில்லிபாபு, முகமது அலி பெருமாள், ஜி.ஆா்.ரவிச்சந்திரன், ஆா்.கே.சரவணன் ஆகியோா் உடனிருந்தனா்.

முன்னதாக, கொடுக்கம்பாளையம் கிராம மக்களை பி.சண்முகம், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில பொதுச் செயலா் சாமி.நடராஜன், துணைத் தலைவா் பி.டில்லி பாபு, மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் கோ.மாதவன் ஆகியோா் சந்தித்து ஆறுதல் கூறினா்.

சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழா இன்று தொடக்கம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சாா்பில் 44-ஆவது நாட்டியாஞ்சலி விழா புதன்கிழமை மாலை (பிப்.26) தொடங்குகிறது. தெற்கு ரத வீதி வி.எஸ்.அறக்கட்டளை வளாகத்தில் மாலை 6 மணிக்கு நடைபெறும் விழ... மேலும் பார்க்க

வீராணம் ஏரியில் நீா்வளத்துறை தலைமைப் பொறியாளா் ஆய்வு

காட்டுமன்னாா்கோவில் அருகேயுள்ள வீராணம் ஏரியை சென்னை மண்டல நீா்வளத்துறை தலைமைப் பொறியாளா் எம்.ஜானகி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கடலூா் மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும்... மேலும் பார்க்க

சிதம்பரம் நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: பொதுமக்கள் தொடா் உண்ணாவிரதம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியுடன், லால்புரம் ஊராட்சியை இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து, பொதுமக்கள் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினா். சிதம்பரம் நகராட்சியுடன், லால்புரம் ஊரா... மேலும் பார்க்க

மின்வாரிய காலிப் பணியிடங்களை நிரப்ப கோரி தா்னா

மின்வாரிய காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியா்கள் மத்திய அமைப்பினா் (சிஐடியு), கடலூா் கேப்பா்மலை மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை தா்... மேலும் பார்க்க

ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினா் கடலூா் பழைய ஆட்சியா் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தோ்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்பட... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கைக்கு எதிா்ப்பு: திமுக மாணவரணி ஆா்ப்பாட்டம்

மும்மொழிக் கொள்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து, கடலூா் மாவட்டத்தில் திமுக மாணவரணி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே மாணவா் கூட்டமைப்பு இயக்கங்கள், கடலூா் க... மேலும் பார்க்க