செய்திகள் :

அகமதாபாத் விமான விபத்துக்கு காரணம் என்ன? முதல்கட்ட அறிக்கை தாக்கல்!

post image

அகமதாபாத் விமான விபத்து குறித்து முதல்கட்ட விசாரணை அறிக்கையை விமான விபத்து புலனாய்வுப் பணியகம் மத்திய அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது.

அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி ஜூன் 12 ஆம் தேதி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், சில நொடிகளில் மேலே பறக்க முடியாமல் தரையில் விழுந்து வெடித்துச் சிதறியது. இதில் பயணித்த ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்த நிலையில், விமானப் பணியாளர்கள் உள்பட 241 பேர் பலியாகினர்.

மேலும், விமானம் மோதிய மருத்துவக் கல்லூரிக் கட்டடம் மற்றும் குடிருப்புப் பகுதிகளில் இருந்த 19 பேர் பலியாகினர்.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த விமான விபத்து புலனாய்வுப் பணியகத்துக்கு மத்திய சிவில் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.

இதனிடையே, விமானத்தின் கருப்புப் பெட்டிகளும் மீட்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், விமான விபத்து நடைபெற்று ஒரு மாதமாகவுள்ள நிலையில், தனது முதல்கட்ட அறிக்கையை விமான விபத்து புலனாய்வுப் பணியகம், மத்திய சிவில் போக்குவரத்து அமைச்சகத்திடம் இன்று சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனடிப்படையில், விபத்து விமானிகளால் நேரிட்டதா? அல்லது விமானத்தில் ஏற்பட்ட கோளாறால் நிகழ்ந்ததா? என்பது குறித்து மத்திய அரசு விரைவில் அறிக்கை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Air Accident Investigation Bureau has submitted the preliminary investigation report into the Ahmedabad plane crash to the Union Ministry.

இதையும் படிக்க : கேட் திறந்து இருந்ததா? முரண்படும் வேன் ஓட்டுநர் பேட்டியும் ரயில்வே அறிக்கையும்!

யேமனிலுள்ள கேரள செவிலியருக்கு ஜூலை 16-இல் மரண தண்டனை நிறைவேற்றம்?

யேமன் நாட்டில் கொலை வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள கேரளத்தைச் சோ்ந்த செவிலியா் நிமிஷா பிரியாவுக்கு உச்சநீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதனைத்தொடர்ந்து அவரது தண்டனையை குறைக்க பல்வேறு... மேலும் பார்க்க

ஒரு ரஃபேல் தோல்வியடைந்தது; ஆனால், பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை!

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலின்போது ஒரு ரஃபேல் விமானம் தோல்வி அடைந்ததாகவும், ஆனால், அதனை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை என்றும் டஸால்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எரிக் டிராப்பியர் தெரிவி... மேலும் பார்க்க

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்தியா முடக்க உத்தரவிட்டது: எக்ஸ்

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை முடக்க இந்திய அரசு உத்தரவிட்டதாக எக்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய அரசாங்க விவகாரக் குழு தெரிவித்துள்ளது.ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் தளக் கணக்கு இந்தியாவில் முடக்... மேலும் பார்க்க

ஜிஎஸ்டியால் வரி செலுத்துவோர் விகிதம் 145% அதிகரிப்பு!

ஜிஎஸ்டியால் குஜராத்தில் வரி செலுத்துவோர் விகிதம் 145 சதவீதம் அதிகரித்துள்ளதாக அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல் தெரிவித்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 12.66 லட்சம் அதி... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை.யின் முன்னாள் மாணவர்கள் பெயரில் வெடிகுண்டு மிரட்டல்! ஹைதராபாத்தில் பரபரப்பு!

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில், ஆளுநர் மாளிகை உள்ளிட்ட 4 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பட்டுள்ளதால், அங்கு காவல் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஹைதராபாத்தின் ஓல்ட் சிட்டி பகுதி... மேலும் பார்க்க

பேரணியில் பாலஸ்தீன கொடி அச்சிட்ட சட்டை..! 4 இளைஞர்கள் கைது!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாலஸ்தீன கொடி அச்சிடப்பட்ட சட்டையை அணிந்து பேரணியில் பங்கேற்ற 4 இளைஞர்கள், அம்மாநில காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தியோரியா மாவட்டத்தில் கடந்த ஜூலை 6 ஆம் தேதி மு... மேலும் பார்க்க