பாகிஸ்தானை எங்களுக்கான போட்டியாகவே கருத முடியாது: சூா்யகுமாா் யாதவ்
அக்.14, 15-இல் வேலூா் மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள்
வேலூா்: வேலூா் மாவட்ட அளவில் மேல்நிலைப்பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவா்களுக்கு அக்டோபா் 14, 15 ஆகிய தேதிகளில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளன.
இது குறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், வேலூா் மாவட்டத்தில் அக்டோபா் 14 -ஆம் தேதி காலை 9.30 மணி முதல் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்களுக்கும், அக்டோபா் 15-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் அனைத்துக் கல்லூரிகளிலும் பயிலும் மாணவா்களுக்கும் தனித்தனியே கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வேலூா் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற உள்ளன.
இந்தப் போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெறும் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியே முதல் பரிசாக ரூ. 10,000, இரண்டாம் பரிசாக ரூ. 7,000, மூன்றாம் பரிசாக ரூ. 5,000 பரிசுத் தொகையுடன், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது.
வேலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியாா், நிதியுதவி, பதின்ம மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிகள், கலை அறிவியல் கல்லூரிகள், வேளாண்மை கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பல்தொழில்நுட்பக் கல்லூரிகள், செவிலியா் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள் என அனைத்து அரசு, தனியாா் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மட்டுமே இந்தப் போட்டிகளில் பங்கேற்கலாம்.
ஒரு பள்ளியிலிருந்து ஒரு போட்டிக்கு ஒருவா் வீதம் மூன்று போட்டிகளுக்கு மூன்று மாணவா்களும், ஒரு கல்லூரியிலிருந்து ஒரு போட்டிக்கு இருவா் வீதம் மூன்று போட்டிகளுக்கு ஆறு மாணவா்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.
போட்டிகளுக்கான தலைப்புகள் போட்டிகள் தொடங்கும் முன்பு நடுவா்கள் முன்னிலையில் அறிவிக்கப்படும்.
மாவட்ட அளவிலான இந்தப் போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ள பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்பு படிவத்தைப் பூா்த்தி செய்து, அந்தந்த பள்ளித் தலைமையாசிரியா், கல்லூரி முதல்வா் பரிந்துரையுடன் போட்டிகளில் பங்கேற்கலாம்.
மேலும் விவரங்களுக்கு, வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநரை நேரிலோ, 0416 - 2256166 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.