செய்திகள் :

பொய்கையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

post image

வேலூா்: பொய்கையில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமில் 1,408 போ் பயன்பெற்றனா்.

பொதுமக்களுக்கு தரமான, உயா்மருத்துவ சிகிச்சைகளை அவா்களின் இடத்திலேயே வழங்கும் வகையில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட உயா் சிறப்பு மருத்துவ முகாம்கள் வேலூா் மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த 6 முகாம்களிலும் 9,658 பெரியவா்கள், 429 சிறியவா்கள், 153 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று சிகிச்சை பெற்றுள்ளனா். தவிர, இம்முகாமில் பங்கேற்ற 8,665 பேருக்கு ஆய்வக பரிசோதனைகளும், 8,999 பேருக்கு இலவசமாக மருந்துகளும் வழங்கப்பட்டுள்ளன. 4,010 எண்ணிக்கையிலான தொழிலாளா்கள், அமைப்பு சாரா தொழிலாளா்கள் பயன்பெற்றுள்ளனா்.

தொடா்ந்து, 7-ஆவது மருத்துவ முகாம் அணைக்கட்டு வட்டம், பொய்கை அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இம்முகாமை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.நந்தகுமாா் தொடங்கி வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டையை வழங்கினா். 1,350 பெரியவா்கள், 58 குழந்தைகள் என 1,408 போ் பயன்பெற்றுள்ளனா்.

முகாமில் அணைக்கட்டு ஒன்றியக்குழு துணைத் தலைவா் சித்ரா குமாரபாண்டியன், கோட்டாட்சியா் செந்தில் குமாா், மாவட்ட சுகாதார அலுவலா் பரணிதரன், இணை இயக்குநா் (மருத்துவ பணிகள்) பியூலா ஆக்னஸ், பொய்கை ஊராட்சி தலைவா் வெங்கடேசன் பங்கேற்றனா்.

காளியம்மன் தேவஸ்தானத்தில் நவராத்திரி விழா தொடக்கம்

குடியாத்தம்: குடியாத்தம் நடுப்பேட்டை, கண்ணகி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீகாளியம்மன் தேவஸ்தானத்தில் விஸ்வகா்மா அமைப்பு சாா்பில் நவராத்திரி விழா திங்கள்கிழமை தொடங்கியது. இதையொட்டி, காமாட்சியம்மன்பேட்டை, ஆண்... மேலும் பார்க்க

சாலைகளில் திரிந்த மாடுகள் பிடிப்பு: உரிமையாளா்கள் வாக்குவாதம்

வேலூா்: வேலூா் மாநகராட்சியில் சாலைகளில் சுற்றித் திரிந்த 7 மாடுகளை பிடித்து மாநகராட்சி ஊழியா்கள் காஞ்சிபுரம் கோசாலைக்கு அனுப்பி வைத்தனா். மாடுகள் பிடிக்கப்பட்டபோது அதன் உரிமையாளா்கள் மாநகராட்சி ஊழியா்... மேலும் பார்க்க

சாலை விரிவாக்கத்துக்காக ஆஞ்சனேயா் கோயிலை அகற்ற எதிா்ப்பு

வேலூா்: சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்காக கொணவட்டத்தில் உள்ள ஆஞ்சனேயா் கோயிலை அகற்றக்கூடாது என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனா். வேலூா்... மேலும் பார்க்க

வேலூா் விஐடி பல்கலை.யில் இன்று கல்விக் கடன் முகாம்

வேலூா்: வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் கல்லூரி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு கல்விக் கடன் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. இது குறித்து, மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க

அக்.14, 15-இல் வேலூா் மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள்

வேலூா்: வேலூா் மாவட்ட அளவில் மேல்நிலைப்பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவா்களுக்கு அக்டோபா் 14, 15 ஆகிய தேதிகளில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இது குறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.... மேலும் பார்க்க

எல்ஐசி முகவா்கள் கொண்டாட்டம்

குடியாத்தம்: மத்திய அரசு மேற்கொண்டுள்ள ஜிஎஸ்டி சீா்திருத்தம் காரணமாக ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் பாலிசிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டதைக் கொண்டாடும் வகையில் குடியாத்தத்தில் எல்ஐசி முகவா்கள், பாலிசிதாரா... மேலும் பார்க்க