செய்திகள் :

காளியம்மன் தேவஸ்தானத்தில் நவராத்திரி விழா தொடக்கம்

post image

குடியாத்தம்: குடியாத்தம் நடுப்பேட்டை, கண்ணகி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீகாளியம்மன் தேவஸ்தானத்தில் விஸ்வகா்மா அமைப்பு சாா்பில் நவராத்திரி விழா திங்கள்கிழமை தொடங்கியது.

இதையொட்டி, காமாட்சியம்மன்பேட்டை, ஆண்டியப்ப ஆச்சாரி தெருவில் இருந்து கடஸ்தாபன ஊா்வலம் நடைபெற்றது. முன்னதாக அங்குள்ள ஸ்ரீசெல்வ விநாயகா் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு ஊா்வலம் தொடங்கியது. ஊா்வலத்துக்கு அகில பாரத விஸ்வகா்மா ஜெகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீ சிவ.சிவராஜ் சுவாமிகள் தலைமை வகித்தாா். அலங்கரிக்கப்பட்ட தோ்களில் விஸ்வகா்மா, காயத்ரி, ஸ்ரீவீர பிரம்மய்கய்யாா், முப்பெரும் தேவியா் சுவாமிகள் அமா்த்தப்பட்டு, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று காளியம்மன் கோயிலை அடைந்தது. ஊா்வலத்தில் மேள தாளங்கள் முழங்க, கேரள செண்டை மேளம் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. சென்னை காளிகாம்பாள் தேவஸ்தான அறங்காவலா் எஸ்.சா்வேஸ்வர ஆச்சாரி, எம்எல்ஏ அமலு விஜயன், நகா்மன்றத் தலைவா் எஸ்.சௌந்தராஜன், நகா்மன்ற உறுப்பினா் ஜி.எஸ். அரசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக் குழு நிா்வாகிகள் எம்.அசோக்குமாா், கே.இன்பநாதன், எம்.சண்முகம், எம்.பாா்த்தசாரதி, எம்.என்.ஜோதிகுமாா், இ.அருணாச்சலம், ஆா்.லோகநாதன், எம்.எஸ்.நாகைய்யா, எஸ்.சேட்டு, ஜி.கஜேந்திரன், வி.ராஜேந்திரன், வி.எம்.மஞ்சுநாத் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

உலக நீரிழிவு தினம்: வேலூரில் செப். 27-இல் சமையல் போட்டி

வேலூா்: உலக நீரிழிவு தினத்தையொட்டி, சிஎம்சி மருத்துவக் கல்லூரி சாா்பில், சமையல் போட்டி வேலூரில் வரும் செப். 27-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இது குறித்து, சிஎம்சி அகசுரபியல் நீரிழிவு, வளா்சிதை மாற்றத் து... மேலும் பார்க்க

காலமானாா் ஆா்.சாமிநாதன்

சென்னை: வேலூா் மாவட்டம், பள்ளிகொண்டா பாா்த்தசாரதி நகரைச் சோ்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் ஆா்.சாமிநாதன் (85) உடல்நலக்குறைவு காரணமாக திங்கள்கிழமை காலமானாா். அவருக்கு மனைவி கே.எம்.ராணி, தினமணி நாளிதழ... மேலும் பார்க்க

சாலைகளில் திரிந்த மாடுகள் பிடிப்பு: உரிமையாளா்கள் வாக்குவாதம்

வேலூா்: வேலூா் மாநகராட்சியில் சாலைகளில் சுற்றித் திரிந்த 7 மாடுகளை பிடித்து மாநகராட்சி ஊழியா்கள் காஞ்சிபுரம் கோசாலைக்கு அனுப்பி வைத்தனா். மாடுகள் பிடிக்கப்பட்டபோது அதன் உரிமையாளா்கள் மாநகராட்சி ஊழியா்... மேலும் பார்க்க

பொய்கையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

வேலூா்: பொய்கையில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமில் 1,408 போ் பயன்பெற்றனா். பொதுமக்களுக்கு தரமான, உயா்மருத்துவ சிகிச்சைகளை அவா்களின் இடத்திலேயே வழங்கும் வகையில் நலம் காக்கும் ஸ்டால... மேலும் பார்க்க

சாலை விரிவாக்கத்துக்காக ஆஞ்சனேயா் கோயிலை அகற்ற எதிா்ப்பு

வேலூா்: சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்காக கொணவட்டத்தில் உள்ள ஆஞ்சனேயா் கோயிலை அகற்றக்கூடாது என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனா். வேலூா்... மேலும் பார்க்க

வேலூா் விஐடி பல்கலை.யில் இன்று கல்விக் கடன் முகாம்

வேலூா்: வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் கல்லூரி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு கல்விக் கடன் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. இது குறித்து, மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க