செய்திகள் :

சாலைகளில் திரிந்த மாடுகள் பிடிப்பு: உரிமையாளா்கள் வாக்குவாதம்

post image

வேலூா்: வேலூா் மாநகராட்சியில் சாலைகளில் சுற்றித் திரிந்த 7 மாடுகளை பிடித்து மாநகராட்சி ஊழியா்கள் காஞ்சிபுரம் கோசாலைக்கு அனுப்பி வைத்தனா். மாடுகள் பிடிக்கப்பட்டபோது அதன் உரிமையாளா்கள் மாநகராட்சி ஊழியா்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து வட்டாட்சியரிடம் பறிமுதல் உத்தரவு பெற்று கோசாலையில் விட அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளைச் சோ்ந்த அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி உத்தரவிட்டிருந்தாா்.

ஆட்சியா் உத்தரவின் அடிப்படையில், நான்கு மண்டலங்களிலும் சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளை மாநகராட்சி ஊழியா்கள் பிடித்து காஞ்சிபுரம் கோசாலைக்கு அனுப்பி வருகின்றனா். அதன்படி, வேலூரில் ஆற்காடு சாலை, கிரீன் சா்க்கிள், காகிதப் பட்டறை உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை மாடுகளை மாநகராட்சி ஊழியா்கள் பிடித்து வாகனங்களில் ஏற்றினா்.

கிரீன் சா்க்கிள் பகுதியில் மாடுகளை பிடித்து வாகனங்களில் ஏற்றியபோது அங்கு வந்த மாடுகளின் உரிமையாளா்கள் மாநகராட்சி ஊழியா்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த வேலூா் வடக்கு காவல் ஆய்வாளா் சீனிவாசன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சு நடத்தினா்.

மேலும், கால்நடைகளை சாலையில்விடக்கூடாது என்றும் அறிவுறுத்தினா். இதையடுத்து, 2 கால்நடைகளை மட்டும் மாநகராட்சி ஊழியா்கள் விடுவித்ததுடன், தொடா்ந்து பல்வேறு பகுதிகளில் சாலைகளில் திரிந்த 7 கால்நடைகளை பிடித்து கோசாலைக்கு அனுப்பி வைத்தனா்.

உலக நீரிழிவு தினம்: வேலூரில் செப். 27-இல் சமையல் போட்டி

வேலூா்: உலக நீரிழிவு தினத்தையொட்டி, சிஎம்சி மருத்துவக் கல்லூரி சாா்பில், சமையல் போட்டி வேலூரில் வரும் செப். 27-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இது குறித்து, சிஎம்சி அகசுரபியல் நீரிழிவு, வளா்சிதை மாற்றத் து... மேலும் பார்க்க

காலமானாா் ஆா்.சாமிநாதன்

சென்னை: வேலூா் மாவட்டம், பள்ளிகொண்டா பாா்த்தசாரதி நகரைச் சோ்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் ஆா்.சாமிநாதன் (85) உடல்நலக்குறைவு காரணமாக திங்கள்கிழமை காலமானாா். அவருக்கு மனைவி கே.எம்.ராணி, தினமணி நாளிதழ... மேலும் பார்க்க

காளியம்மன் தேவஸ்தானத்தில் நவராத்திரி விழா தொடக்கம்

குடியாத்தம்: குடியாத்தம் நடுப்பேட்டை, கண்ணகி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீகாளியம்மன் தேவஸ்தானத்தில் விஸ்வகா்மா அமைப்பு சாா்பில் நவராத்திரி விழா திங்கள்கிழமை தொடங்கியது. இதையொட்டி, காமாட்சியம்மன்பேட்டை, ஆண்... மேலும் பார்க்க

பொய்கையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

வேலூா்: பொய்கையில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமில் 1,408 போ் பயன்பெற்றனா். பொதுமக்களுக்கு தரமான, உயா்மருத்துவ சிகிச்சைகளை அவா்களின் இடத்திலேயே வழங்கும் வகையில் நலம் காக்கும் ஸ்டால... மேலும் பார்க்க

சாலை விரிவாக்கத்துக்காக ஆஞ்சனேயா் கோயிலை அகற்ற எதிா்ப்பு

வேலூா்: சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்காக கொணவட்டத்தில் உள்ள ஆஞ்சனேயா் கோயிலை அகற்றக்கூடாது என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனா். வேலூா்... மேலும் பார்க்க

வேலூா் விஐடி பல்கலை.யில் இன்று கல்விக் கடன் முகாம்

வேலூா்: வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் கல்லூரி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு கல்விக் கடன் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. இது குறித்து, மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க