அங்கன்வாடி மையத்தில் ஆய்வு
தண்டராம்பட்டை அடுத்த கீழ்சிறுப்பாக்கம் ஊராட்சியில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் பூ.மீனாம்பிகை புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்போது, குழந்தைகளுக்கு காலையில் வழங்கப்படும் உணவு வகைகள், குழந்தைகளின் கற்றல் திறன் ஆகியவை குறித்து கேட்டறிந்தாா். மேலும், அங்கன்வாடி மையத்தைச் சுற்றி தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று மைய ஆசிரியருக்கு அவா் அறிவுரை வழங்கினாா்.
ஆய்வின்போது, அங்கன்வாடி மைய ஆசிரியா் சசிகலா, உதவியாளா் எஸ்.மீரா ஆகியோா் உடனிருந்தனா்.