செய்திகள் :

அடர்பச்சை நிறத்தில் தென்பெண்ணை ஆற்று நீர்; `பெயிண்ட்’போல படியும் ரசாயனம் - விவசாயிகள் பேரதிர்ச்சி!

post image

கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி அணையில் சேமிக்கப்படும் தென்பெண்ணை ஆற்று நீரால் சுமார் 9,012 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றது. ஆண்டுதோறும் இருபோக சாகுபடிக்காக அணையில் இருந்து, பாசன கால்வாய்களின் வழியாக நீர் திறந்துவிடப்படுகிறது. மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், இந்த நீர்தேக்கம் உயிர்ப்பூட்டிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக நீர்த்தேக்கத்துக்கு பாய்ந்து வரும் நீர்... அடர்பச்சை நிறத்தில் மிகவும் மாசடைந்திருப்பது, விவசாயிகளையும் பொதுமக்களையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. கர்நாடக மாநில தொழிற்சாலைகளின் ரசாயன கழிவுகளும், பெங்களூர் நகரத்தின் கழிவுகளும் சுத்திகரிப்புச் செய்யப்படாமல் தென்பெண்ணை ஆற்றில் நேரடியாக, அப்படியே திறந்துவிடப்படுவதாக வெகுகாலமாகவே தமிழக விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

பாசன கால்வாயில், அடர்பச்சை நிறத்தில் தென்பெண்ணை ஆற்று நீர்

இதனால், எப்போதுமே நீர் மாசுபட்ட நிலையில் நுரைப் பொங்க வருவதையும் பார்க்க முடிகிறது. மழைக்காலங்களில், இந்த நிலை மேலும் மோசமாகிறது. அணையில் இருந்து கால்வாய்களில் பாசனத்துக்காகத் திறந்துவிடப்படும் மாசற்ற நீரால் பயிர்கள் பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகள் கவலைக் கொள்கின்றனர். ரசாயனக் கழிவு `பெயிண்ட்’போல நிலத்தில் படிவதால், மண்ணின் வளமே மலட்டுத் தன்மையாகும் சூழல் உருவாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே, தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மத்திய நதி ஆணையக் குழுவும், தென்மண்டல பசுமை தீர்ப்பாயமும் நீர் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்து, `கழிவுகளை திறந்துவிடும் அட்டூழியத்துக்கு முடிவு கட்ட வேண்டும்’ என கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

Crow: ஒரே இணை; தினமும் குளியல்; செவிலித்தாய்... - காக்கைகளின் கதை!

பக்கத்தில் இருந்தால் அதன் அருமை தெரியாது என்பார்கள். அது காக்கைக்கும் பொருந்தும். சுற்றுச்சுழலில் காக்கையின் பங்கு முக்கியமானது என்கிறார் இயற்கை ஆய்வாளர், ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் கோவை சதாசிவம். ’’க... மேலும் பார்க்க

Mumbai Rain: தொடரும் கனமழை; வெள்ளம் சூழ்ந்த நகரம், முடங்கிய இயல்பு வாழ்க்கை - மும்பை வெள்ள நிலவரம்

மும்பை கனமழைமும்பையில் கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து தொடர்ந்து விடாது மழை பெய்துகொண்டே இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை வரை மிதமாக பெய்த இம்மழை திங்கள் கிழமை காலையில் இருந்து கடுமையாக பெய்ய ஆரம்பித்தது. ... மேலும் பார்க்க

அழையா விருந்தாளியாக பள்ளிக்குள் நுழைந்த யானைக் குட்டி; மகிழ்ச்சியில் குதூகலித்த குழந்தைகள்!

வனங்கள் நிறைந்த மாவட்டங்களில் ஒன்றாக இருக்கிறது கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டம். ஆனால், வளர்ச்சி என்கிற பெயரில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளின் காரணமாக வனவிலங்குகளின் வாழிடங்களும் வழித... மேலும் பார்க்க

Snakes: விலா எலும்புகளைத் தட்டையாக்கி பறந்து வேட்டையாடும் பாம்புகள் பற்றி தெரியுமா?!

பாம்புகள் படையெடுக்கும் என்று கேள்விப்பட்டிருப்போம். சில பாம்பு இனங்கள் தண்ணீரில் நீந்துவது, காற்றில் பறப்பது என தனித்துவமான திறன்கள் பெற்றிருப்பதை பற்றிப் பலரும் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள்.கடல் ப... மேலும் பார்க்க