செய்திகள் :

Snakes: விலா எலும்புகளைத் தட்டையாக்கி பறந்து வேட்டையாடும் பாம்புகள் பற்றி தெரியுமா?!

post image

பாம்புகள் படையெடுக்கும் என்று கேள்விப்பட்டிருப்போம். சில பாம்பு இனங்கள் தண்ணீரில் நீந்துவது, காற்றில் பறப்பது என தனித்துவமான திறன்கள் பெற்றிருப்பதை பற்றிப் பலரும் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள்.

கடல் பாம்புகள் முதல் மரங்களுக்கு இடையே பறக்கும் பாம்புகள் வரை, சில பாம்பு இனங்கள் மட்டும் இவ்வாறு இயற்கையாகவே பண்புகளை கொண்டுள்ளன.

இவற்றின் தனித்துவமான பண்புகள் வேட்டையாடுவதற்கும், வேட்டையாடுபவர்களிடமிருந்து தப்பிப்பதற்கும் உதவுகின்றன. அப்படி பறக்கும், நீந்தும் பாம்புகள் குறித்து இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.

கடல் கிரைட் (Laticauda spp)

அதிக விஷத்தன்மை கொண்ட இந்த வகை பாம்புகள் கடல் சூழலில் வாழ்கின்றன. துடுப்பு போன்ற வால்களைப் பயன்படுத்தி தண்ணீரில் எளிதாக நீந்துகின்றன. இவை பெரும்பாலும் பவளப்பாறைகளில் வாழ்கின்றன, முட்டையிடுவதற்கும் ஓய்வெடுப்பதற்கும் மட்டுமே கரையை அடைவதாக தகவல்கள் கூறுகின்றன.

கடல் பவளப்பாம்பு (Aquatic Coral Snake)

கடல் பவளப்பாம்புகள் சிறந்த நீச்சல் திறன்களை கொண்டுள்ளன. இவை பொதுவாக பவளப்பாறைகள் மற்றும் பாறைப் பகுதிகளில் காணப்படுகின்றன. சில கடல் பவளப்பாம்பு இனங்கள் அழியும் அபாயத்தில் உள்ளன.

காட்டன் மவுத் (Water Moccasin)

இந்த விஷமுள்ள பாம்பு, அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதிகளில் உள்ள சதுப்பு நிலங்கள், ஏரிகள், ஆறுகளில் காணப்படுகின்றன. இவை மேற்பரப்பில் மிதப்பதோடு மட்டுமில்லாமல், நீருக்கடியில் மூழ்கியும் வேட்டையாடுவதாக கூறப்படுகிறது.

Chrysopelea paradisi)

பறக்கும் பாம்புகள் (Chrysopelea species)

தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் இந்தப் பாம்புகள், தங்கள் விலா எலும்புகளைத் தட்டையாக்கி, காற்றில் அலைவு அசைவுகளை உருவாக்கி, மரங்களுக்கு இடையே பறக்கின்றன. இவை 100 மீட்டர் தூரம் வரை பறக்குமாம். இந்த பறக்கும் திறன் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் வேட்டையாடுவதற்கும், வேட்டையாடுபவர்களிடமிருந்து தப்பிப்பதற்கும் உதவுகிறது.

பாரடைஸ் மரப்பாம்பு (Chrysopelea paradisi)

பச்சை மற்றும் கருப்பு நிற வண்ணக் கோடுகள் உள்ள இந்தப் பாம்புகள் வெப்பமண்டல காடுகளில் மரங்களுக்கு இடையே பறக்கிறது. இவை காற்றில் பறக்கும்போது காற்றியல் இயக்கங்களைப் பயன்படுத்தி, பூச்சிகள் மற்றும் சிறிய பல்லிகளை வேட்டையாடுகின்றன.

இந்த பாம்புகள் தங்கள் சூழலுக்கு ஏற்ப தகவமைத்து, பல்வேறு தன்மைகளை வெளிப்படுத்தும் திறன்களை பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

டென்மார்க்: செல்லப்பிராணியை விலங்குகளுக்கு உணவளிக்க கேட்கும் பூங்கா - பின்னணி என்ன?

டென்மார்க்கைச் சேர்ந்த 44 வயது பெண்மணி ஒருவர் மகள் வளர்த்த குதிரையை ஆல்போர்க் உயிரியல் பூங்காவிற்கு நன்கொடையாக அளித்துள்ளார். கடுமையான தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள குதிரையை சிங்கங்களுக்கு உணவாக அளிக்... மேலும் பார்க்க

World Elephant Day: மதுக்கரை விபத்து டு மருதமலை சிகிச்சை; 17 ஆண்டுக்கால யானை நிகழ்வுகள் |Photo Album

2008 - ரயில் மோதி இறந்த யானைகள் இடம் - மதுக்கரை 2009 - வழித்தவறி வந்த யானைகள் இடம் - கணுவாய் 2009 - வழித்தவறி வந்த யானைகள் இடம் - கணுவாய் 2010 - மின்சாரம் தாக்கி இறந்த யானை இடம் - செம்மேடு 2011- குடும... மேலும் பார்க்க

நண்பர்களை என்றும் மறக்காத பெண் கொரில்லாக்கள்; 20 ஆண்டுக்கால ஆய்வின் வியப்பூட்டும் கண்டுபிடிப்பு!

கிழக்கு ஆப்பிரிக்காவின் ருவாண்டாவில் உள்ள வோல்கானோஸ் தேசிய பூங்காவில் இரண்டு தசாப்தங்களாக நடத்தப்பட்ட ஆய்வில் பெண் கொரில்லாக்கள் பழகிய பெண் கொரில்லாக்களுடன் மீண்டும் தொடர்பு கொள்ள முயற்சிப்பதாக கண்டறி... மேலும் பார்க்க

துர்நாற்றம் வீசும் 'கார்ப்ஸ் பூ' பூப்பதை காண திரண்ட மக்கள் - என்ன காரணம் தெரியுமா?

போலந்து நாட்டில் உள்ள வார்சா பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான, வார்சா தாவரவியல் பூங்காவில் துர்நாற்றம் வீசும் கார்ப்ஸ் பூ ( Corpse flower) பூப்பதை காண ஏராளமான மக்கள் கூடியுள்ளனர். இந்த அரிய வகை தாவரம் அதன... மேலும் பார்க்க

பசிபிக் பெருங்கடலில் எதிரொலித்த ’பெண் குரல்’ போன்ற மர்ம ஒலி; விஞ்ஞானிகளை திகைப்பில் ஆழ்த்தியது ஏன்?

பசிபிக் பெருங்கடலின் ஆழத்தில் எதிரொலித்த ஒரு விசித்திரமான ஒலி விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆக்கியுள்ளது. 1999 ஆண்டு ஒலித்த இந்த மர்மமான ஒலி விஞ்ஞானிகளுக்கு இன்று வரை புரியாத புதிராக இருக்கிறது. அமெரிக்கா... மேலும் பார்க்க

ஸ்வீடன்: கோழிகளை கூண்டுகளில் அடைக்காமல் முட்டை உற்பத்தி செய்துவரும் நாடு - பின்னணி என்ன?

உலகளவில் 'விலங்குகள் நலன்’ முக்கிய கவனம் பெற்றுள்ள நிலையில், ஸ்வீடன் முட்டை உற்பத்தியில் கூண்டுகளை முழுமையாக நீக்கி, அனைத்து கோழிகளையும் கூண்டு இல்லாமல் வளர்க்கும் முதல் நாடாக மாறியுள்ளது. எந்தவொரு அர... மேலும் பார்க்க