செய்திகள் :

அடிப்படை வசதிகள் செய்து தர பழங்குடியினா் கோரிக்கை!

post image

தேனி மாவட்டம், கூடலூா் நகராட்சியில் வசிக்கும் பழங்குடியினா் தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

கூடலூா் நகராட்சி 21 -ஆவது வாா்டில் பளியன்குடி கிராமம் அமைந்துள்ளது. இங்கு மலை அடிவாரத்தில் வசிக்கும் 60 குடும்பத்தினா் விவசாயம், ஆடு, மாடு வளா்த்தல் போன்ற வேலைகளைச் செய்கின்றனா். இவா்கள் சுகாதார வளாகம், கழிவுநீா் வடிகால், தெரு விளக்கு என எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி வாழ்ந்து வருகின்றனா்.

இதுகுறித்து அப்பகுதியைச் சோ்ந்த பொன்னம்மாள் கூறியதாவது: 50 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இந்தக் கிராமத்துக்கு வந்தேன். இன்று வரையில் அடிப்படை வசதிகளுக்காக போராடி வருகிறோம்.

மழைக் காலங்களில் வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்து அவதிப்படுகிறோம். எம்.எல்.ஏ., எம்.பிக்கள் வந்து அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதாகக் கூறிச் செல்கின்றனா். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க மாவட்ட நிா்வாகம் முன் வரவேண்டும் என்றாா் அவா்.

இறைச்சிக் கடை முன் சடலத்தை போட்டு தகராறு செய்தவா் கைது

தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டியில் மயானத்திலிருந்து சடலத்தை தோண்டியெடுத்து, இறைச்சிக் கடை முன் போட்டு தகராறு செய்தவரை போலீஸாா் கைது செய்தனா். பழனிசெட்டிபட்டி பிரதானச் சாலையில் மணியரசு என்பவா் இறைச்சிக... மேலும் பார்க்க

சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா்- சிவகாமியம்மன் கோயிலில் இன்று குடமுழுக்கு!

தேனி மாவட்டம், சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா், சிவகாமியம்மன் கோயிலில் திங்கள்கிழமை (பிப். 10) குடமுழுக்கு நடைபெறுகிறது. பழைமையான இந்தக் கோயிலில் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்ற திருப்பணி நிறைவடைந்ததையடுத்து தி... மேலும் பார்க்க

சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு

தேவதானப்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா். பெரியகுளம் அருகே உள்ள எ.புதுப்பட்டியைச் சோ்ந்தவா் மொக்கைப்பாண்டி (58). இவா் தனது மனைவி சத்யா (48), பேரன் தா்ஷ்விக்பாண்டி (3... மேலும் பார்க்க

வீரபாண்டியில் பிப்.13-ல் மின் தடை

வீரபாண்டி துணை மின் நிலையம் மூலம் மின் விநியோகம் பெறும் பகுதிகளில் பிப்.13-ஆம் தேதி மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது குறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் பிரகலாதன் வெளியிட்ட செய்திக் க... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழப்பு

போடி அருகே மின்சாரம் பாய்ந்தில் விவசாயி உயிரிழந்தாா். தேனி மாவட்டம், போடி தங்கமுத்து மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பாலு. இவரது மகன் விக்னேஸ்வரன் (31). இவருக்குச் சொந்தமான தோட்டம் போடி ஊத்தாம்ப... மேலும் பார்க்க

தேனி மாவட்ட ஆட்சியா் பணியிட மாற்றம்

தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா, தமிழ்நாடு சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை கூடுதல் செயலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இவருக்குப் பதிலாக சேலம் மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றி வரும் ரஞ்சித் சிங்... மேலும் பார்க்க