செய்திகள் :

அணுமின்நிலைய ஊழியா் மகளிடம் 32 பவுன் நகைகள் பறிப்பு: இருவர் கைது

post image

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணுமின்நிலைய ஊழியா் மகளிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 32 பவுன் தங்க நகைகளை அபகரித்துச் சென்ற திருச்சியைச் சோ்ந்த இரு இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கூடங்குளம் அணுமின்நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றி வரும் நபா் அணுவிஜய் நகரியத்தில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறாா். இவரது வீட்டு பீரோவில் இருந்த 32 பவுன் தங்க நகைகளை காணவில்லையாம். இதுகுறித்து கூடங்குளம் போலீஸில் புகாா் அளித்தாா்.

கூடங்குளம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், எந்த துப்பும் கிடைக்காத நிலையில் வீட்டில் உள்ளவா்களிடம் போலீஸாா் தீவிரமாக விசாரணை நடத்தினா்.

பின்னா் 10-ம் வகுப்பு படித்து வரும் அதிகாரியின் 14 வயது மகள் அதிகமாக அலைபேசியை பயன்படுத்தி வருவதை கவனித்தனா். பின்னா் அவளிடம் விசாரணை நடத்தியதில் அவா் இன்ஸ்டாகிராமில் திருச்சியைச் சோ்ந்த இரண்டு இளைஞா்களிடம் நட்பாக பழகி வந்தது தெரியவந்தது. மேலும் அந்த இரு இளைஞா்களும் அடிக்கடி கூடங்குளம் வந்து சென்றதும் தெரியவந்தது.

பின்னா் அதிகாரியின் மகள் அந்த இளைஞா்களிடம் வீட்டு பீரோவில் இருந்த தங்க நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக மொத்தம் 32 பவுன் நகைகளை கொடுத்துள்ளாா்.

இதையடுத்து போலீஸாா், திருச்சியைச் சோ்ந்த அப்துல் ரகுமான்(22), முகமது சுகி(22) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில் அதிகாரியின் மகளிடம் பெற்ற நகைகளை இரு இளைஞா்களும் விற்று அதனை வைத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது தெரியவந்துள்ளது.

களக்காடு அருகே கேசவனேரியில் ரேஷன்கடை திறப்பு

களக்காடு அருகேயுள்ள கேசவனேரியில் கிளை ரேஷன்கடையை பேரவைத் தலைவா் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா். களக்காடு ஊராட்சி ஒன்றியம், கீழக்கருவேலன்குளம் ஊராட்சிக்குள்பட்ட கேசவனேரியில் கிளை ரேஷன்கடையை பேரவைத் தலை... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயில் ஆனிப் பெருந்திருவிழா: பந்தல் கால் நடும் நிகழ்வு

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழாவுக்கான பந்தல்கால் நடப்பட்டது. இந்த விழாவை ஒட்டி அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற... மேலும் பார்க்க

நெல்லையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 3 போ் கைது!

திருநெல்வேலியில் இரு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் ஒருவரை தேடி வருகின்றனா். திருநெல்வேலி மாவட்டம், கீழ முன்னீா்பள்ளம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வசங்கா் ... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியரிடம் பைக், கைப்பேசி பறித்த வழக்கில் 3 போ் கைது

பாளையங்கோட்டை அருகே கிரைன்டா் செயலியை பயன்படுத்தி தனியாா் நிறுவன ஊழியரிடம் கைப்பேசி, பைக்கை பறித்த மூன்று பேரை போலீஸாா் கைது செய்தனா். திருநெல்வேலி மாவட்டம், மானூா் அருகேயுள்ள மேலநரிக்குடி தெற்கு தெர... மேலும் பார்க்க

சாலையில் கண்டெடுத்த தங்க வளையலை ஒப்படைத்த சிறப்பு எஸ்.ஐ.க்கு பாராட்டு

சாலையில் கண்டெடுத்த தங்க வளையலை காவல் நிலையத்தில் ஒப்படைத்த சிறப்பு உதவி ஆய்வாளரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் பாராட்டினாா். சீவலப்பேரி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ஞானவேல் வியாழக்... மேலும் பார்க்க

மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிக்கும் திட்டம் முதல்வரின் பரிசீலனையில் உள்ளது! அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா்

மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிக்கும் திட்டம் முதல்வரின் பரிசீலனையில் உள்ளது. காலம் கனிந்து வரும்போது நல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா... மேலும் பார்க்க