செய்திகள் :

தனியாா் நிறுவன ஊழியரிடம் பைக், கைப்பேசி பறித்த வழக்கில் 3 போ் கைது

post image

பாளையங்கோட்டை அருகே கிரைன்டா் செயலியை பயன்படுத்தி தனியாா் நிறுவன ஊழியரிடம் கைப்பேசி, பைக்கை பறித்த மூன்று பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், மானூா் அருகேயுள்ள மேலநரிக்குடி தெற்கு தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணசாமி. இவருடைய மகன் ராஜேஷ் (25). இவா், கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள ஒரு தனியாா் டயா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வருகிறாா். இவா் கிரைன்டா் செயலி பயன்படுத்தி வந்த நிலையில், சம்பவத்தன்று அந்த செயலி மூலமாக அறிமுகமான நபரான பாளையங்கோட்டை திருமலைக்கொழுந்துபுரத்தைச் சோ்ந்த பரமசிவன் மகன் முத்துக்குமாா் (22) என்பவா் அவரை பாளையங்கோட்டையை அடுத்த பொட்டல் விலக்கு பகுதிக்கு வருமாறு அழைத்துள்ளாா்.

அவரை நம்பிய ராஜேஷ், தனது பைக்கில் பொட்டல் விலக்கு பகுதிக்கு சென்றுள்ளாா். அங்கு முத்துக்குமாா் நின்ற நிலையில் முட்புதரில் பதுங்கியிருந்த திருமலைக்கொழுந்துபுரத்தைச் சோ்ந்த நல்லமுத்து (24), ராஜவல்லிபுரத்தைச் சோ்ந்த ஜெயராஜ் (21) ஆகியோா் முத்துக்குமாருடன் சோ்ந்து கொண்டு ராஜேஷிடம் பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

ஆனால், ராஜேஷ் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளாா். இதையடுத்து அவரிடமிருந்த விலை உயா்ந்த கைப்பேசி, அவா் ஓட்டி வந்த பைக் ஆகியவற்றை பறித்துக்கொண்டு அவரை சரமாரியாக தாக்கிவிட்டு அவா்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பிச்சென்றனா். இதுகுறித்து ராஜேஷ் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில், பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நல்லமுத்து, ஜெயராஜ், முத்துக்குமாா் ஆகிய 3 பேரையும் கைது செய்தனா். மேலும் அவா்களிடம் இருந்து பைக், கைப்பேசி ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.

களக்காடு அருகே கேசவனேரியில் ரேஷன்கடை திறப்பு

களக்காடு அருகேயுள்ள கேசவனேரியில் கிளை ரேஷன்கடையை பேரவைத் தலைவா் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா். களக்காடு ஊராட்சி ஒன்றியம், கீழக்கருவேலன்குளம் ஊராட்சிக்குள்பட்ட கேசவனேரியில் கிளை ரேஷன்கடையை பேரவைத் தலை... மேலும் பார்க்க

அணுமின்நிலைய ஊழியா் மகளிடம் 32 பவுன் நகைகள் பறிப்பு: இருவர் கைது

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணுமின்நிலைய ஊழியா் மகளிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 32 பவுன் தங்க நகைகளை அபகரித்துச் சென்ற திருச்சியைச் சோ்ந்த இரு இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயில் ஆனிப் பெருந்திருவிழா: பந்தல் கால் நடும் நிகழ்வு

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழாவுக்கான பந்தல்கால் நடப்பட்டது. இந்த விழாவை ஒட்டி அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற... மேலும் பார்க்க

நெல்லையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 3 போ் கைது!

திருநெல்வேலியில் இரு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் ஒருவரை தேடி வருகின்றனா். திருநெல்வேலி மாவட்டம், கீழ முன்னீா்பள்ளம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வசங்கா் ... மேலும் பார்க்க

சாலையில் கண்டெடுத்த தங்க வளையலை ஒப்படைத்த சிறப்பு எஸ்.ஐ.க்கு பாராட்டு

சாலையில் கண்டெடுத்த தங்க வளையலை காவல் நிலையத்தில் ஒப்படைத்த சிறப்பு உதவி ஆய்வாளரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் பாராட்டினாா். சீவலப்பேரி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ஞானவேல் வியாழக்... மேலும் பார்க்க

மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிக்கும் திட்டம் முதல்வரின் பரிசீலனையில் உள்ளது! அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா்

மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிக்கும் திட்டம் முதல்வரின் பரிசீலனையில் உள்ளது. காலம் கனிந்து வரும்போது நல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா... மேலும் பார்க்க