செய்திகள் :

அண்டார்டிகாவில் எண்ணெய் வளம்! ரஷியா ஆராய்ச்சியால் சர்வதேச மோதல் நிகழுமா?

post image

உலகளவில் பல்வேறு நாடுகளிக்கிடையே பல்வேறு விதமான பிரச்னைகளால் மோதல் நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், அண்டார்டிகாவில் எண்ணெய் வளம் இருப்பதாக ரஷியாவின் ஆராய்ச்சியால், சர்வதேச அளவில் மோதல் உண்டாகுமா என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

அண்டார்டிகாவின் வெட்டெல் கடலில் எண்ணெய் வளம் இருப்பதை ரஷிய ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எண்ணெய் இருப்பதாக ஆய்வு செய்யப்பட்ட பிரிட்டிஷ் பகுதியில் சுமார் 500 பில்லியனுக்கும் மேற்பட்ட பீப்பாய்கள் அளவில் எண்ணெய் வளம் இருக்கலாம் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றனர். சௌதி அரேபியாவில் கண்டறியப்பட்ட எண்ணெய் இருப்புகளைவிட இரண்டு மடங்கு அதிகம்.

1959, அண்டார்டிகா ஒப்பந்தத்தின்படி, அண்டார்டிகா அறிவியல் ஆராய்ச்சிக்கான இடமேதவிர, அங்கு ராணுவ நடவடிக்கைகளோ வளங்களைச் சுரண்டுதலோ கூடாது என்று மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து முதலிய நாடுகளும் கையெழுத்திட்ட நிலையில், அறிவியல் ஆராய்ச்சி என்ற பெயரில் ஒப்பந்தத்தை ரஷியா மீறுவதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டை மறுத்ததுடன், அண்டார்டிகா ஒப்பந்தத்துடன் ஒத்துப்போவதாகக் கூறிய ரஷியா, மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சியானது அறிவியல்பூர்வமானது என்றும், எண்ணெய் வளங்களைச் சுரண்டுவதற்கானது அல்ல என்றும் கூறியது.

எரிசக்தி வளங்களுக்காகவும் போர்கள் இதுவரையில் நடைபெற்றுள்ள நிலையில், இனியும் அதுபோன்று ஒரு போர் நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளதாக சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

511 billion barrels of oil discovered in Antarctica can trigger World War

கனடா பொருள்கள் மீது 35% கூடுதல் வரி

ஆகஸ்ட் 1 முதல் கனடாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 35 சதவீத வரி விதிக்கப்படும் என்றும், பிற வா்த்தகக் கூட்டணி நாடுகளுக்கு 15 அல்லது 20 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபா் டொனால்ட... மேலும் பார்க்க

9 பயணிகளை சுட்டுக் கொன்ற பலூச் பயங்கரவாதிகள்

பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த பலூசிஸ்தான் மாகாணத்தில், பஞ்சாப் மாகாணத்தைச் சோ்ந்த 9 பயணிகளை பலூச் பயங்கரவாதிகள் பேருந்துகளில் இருந்து இறக்கி சுட்டுக் கொன்றனா். இது குறித்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூ... மேலும் பார்க்க

டெக்ஸஸ் வெள்ளம்: உயிரிழப்பு 121-ஆக உயா்வு

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 121-ஆக உயா்ந்துள்ளது. அந்த மாகாணத்தின் மத்தியப் பகுதி முழுவதும் தொடா்ந்து பெய்த கனமழை காரணமாக, குவாடலூப் நதியில... மேலும் பார்க்க

காஸா: மே 27 முதல் உணவுக்காகக் காத்திருந்த 800 பேர் கொலை! ஐ.நா. அறிவிப்பு!

காஸாவில், கடந்த மே மாதத்தின் இறுதியில் இருந்து உணவு உள்ளிட்ட நிவாரண உதவிகளைப் பெற முயன்று சுமார் 800 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகளின் சபை இன்று (ஜூலை 11) தெரிவித்துள்ளது.காஸாவில் கடந்த மே மாதத்தின... மேலும் பார்க்க

மியான்மரில் புத்த மடத்தின் மீது ராணுவம் வான்வழித் தாக்குதல்? 23 பேர் கொலை!

மியான்மர் நாட்டின் மத்திய மாகாணத்தில், அமைந்திருந்த புத்த மடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அங்கு தஞ்சமடைந்திருந்த மக்களில் 23 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. சகாயிங் மாகாணத்த... மேலும் பார்க்க

கடலில் மூழ்கும் ஜப்பானின் கன்சாய் விமான நிலையம்!

ஜப்பானின், ஒசாகா கடலில் அமைக்கப்பட்டிருந்த கன்சாய் சர்வதேச விமான நிலையம், இதுவரை பொறியியல் துறையின் அதிசயமாகப் பார்க்கப்பட்டு வந்த நிலையில், அது மூழ்கிக் கொண்டிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.கடல் பரப்... மேலும் பார்க்க