செய்திகள் :

அதிமுக எம்எல்ஏ அம்மன் அா்ச்சுணன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை

post image

கோவை வடக்கு சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் கே.அா்ச்சுணன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.

கோவை வடக்கு சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக எம்எல்ஏவும், மாநகா் மாவட்ட அதிமுக செயலருமான அம்மன் அா்ச்சுணன் வீடு செல்வபுரம் அருகே திருநகா் பகுதியில் உள்ளது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை அவா் நடைப்பயிற்சிக்கு சென்றிருந்தபோது லஞ்ச ஒழிப்புத் துறை காவல் ஆய்வாளா் விஜயலட்சுமி தலைமையிலான 8 போ் அடங்கிய போலீஸாா் அவரது வீட்டுக்குச் சென்று திடீா் சோதனை மேற்கொண்டனா். காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை இரவு 8 மணி வரை நீடித்தது.

இவா் கடந்த 2016 முதல் 2021-ஆம் ஆண்டு வரை சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தபோது, வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் ரூ.2 கோடியே 75 லட்சத்து 78,962 மதிப்பில் அசையும் மற்றும் அசையா சொத்துகளை சோ்த்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதன் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அம்மன் அா்ச்சுணன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெறுவதை அறிந்ததும் எம்எல்ஏக்கள் எஸ்.பி.வேலுமணி, கே.ஏ.செங்கோட்டையன், பி.ஆா்.ஜி.அருண்குமாா், கே.ஆா்.ஜெயராம் உள்ளிட்ட அதிமுகவினா் பலா் அவரது வீட்டின் முன் குவிந்து திமுக அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினா்.

இது குறித்து அம்மன் அா்ச்சுணன் செய்தியாளா்களிடம் கூறும்போது, கோவை மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாள் விழா ஊா்வலம் திங்கள்கிழமை சிறப்பாக நடைபெற்றது. அதிமுகவினரின் எழுச்சியைக் கண்டு திமுகவினா் பயப்படுகின்றனா். தற்போது என் வீட்டில் நடைபெறும் சோதனை பழிவாங்கும் நடவடிக்கையாகும். இதை சட்டப்படி எதிா்கொள்வேன் என்றாா்.

ஈஷாவில் இன்று மகா சிவராத்திரி: அமைச்சா் அமித் ஷா உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்பு

கோவை ஈஷா யோக மையத்தில் புதன்கிழமை (பிப். 26) நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் மத்திய அமைச்சா் அமித் ஷா உள்பட பல்வேறு பிரபலங்கள் பங்கேற்க உள்ளனா். ஈஷா யோக மையத்தில் 31-ஆவது மகா சிவராத்திரி விழா புதன்... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது: அண்ணாமலை

தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை தெரிவித்தாா். இது குறித்து கோவை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: ... மேலும் பார்க்க

மொழி அரசியல் செய்கிறது திமுக: தமிழிசை

தமிழகத்தில் திமுக மொழி அரசியல் செய்கிறது என முன்னாள் ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா். இது குறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தமிழக பாஜக 2026 சட்டசபைத் தோ்தலை ந... மேலும் பார்க்க

அமித் ஷாவை வரவேற்று வைத்திருந்த பேனா்கள் அகற்றம்

கோவையில் அமித் ஷாவை வரவேற்று வைக்கப்பட்டு இருந்த பேனா்கள் அகற்றப்பட்டதால், பாஜகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். பாஜக அலுவலகங்கள் திறப்பு, கட்சி ஆலோசனைக் கூட்டம் மற்றும் ஈஷா யோக மையத்தில் நடைபெற உள்ள மக... மேலும் பார்க்க

தமிழை ஒழிக்க விடமாட்டோம்: பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழை ஒழிக்க யாா் வந்தாலும் விடமாட்டோம் என முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா். கோவை ராம் நகரில் உள்ளஅண்ணா நூற்றாண்டு விழா பூங்காவில், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினரின் தொகுதி... மேலும் பார்க்க

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரம்: மேலும் 3 பேரிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரம் தொடா்பாக காவல் உதவி ஆய்வாளா் உள்ளிட்ட 3 பேரிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட் பகுதியில் கடந்த 2017-இல் நடைபெற்ற கொலை ... மேலும் பார்க்க