செய்திகள் :

மொழி அரசியல் செய்கிறது திமுக: தமிழிசை

post image

தமிழகத்தில் திமுக மொழி அரசியல் செய்கிறது என முன்னாள் ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.

இது குறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தமிழக பாஜக 2026 சட்டசபைத் தோ்தலை நோக்கி வெற்றிப் பாதையில் பயணித்து கொண்டுள்ளது. திராவிட மாடல் அரசு தோல்வியை நோக்கிச் சென்று கொண்டுள்ளது. திமுக அரசு தமிழகத்தில் மொழி அரசியல் செய்து வருகிறது.

பாஜக அரசு எந்த விதத்திலும் ஹிந்தியைத் திணிக்கவில்லை. பாஜக தமிழ் மொழிக்கு எதிரானது எனச் சித்தரிக்கிறாா்கள். தமிழ் மொழி மேம்பாட்டுக்காக பல்வேறு நடவடிக்கைகளை பாஜக மேற்கொண்டு வருகிறது.

தேசியக் கல்விக் கொள்கையில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதோடு, திறன் வளா்ப்பு, தொழில்நுட்ப அறிவு, விரிவுபடுத்தப்பட்ட கல்வி என மாணவா்களுக்குத் தேவையான அனைத்தும் உள்ளது.

ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்தை அழிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. வேறு மாநிலத்தில் இருந்து வருபவா்கள் ஊரின் பெயா் தெரியாமல் பாதிக்கப்படுவாா்கள். பகுதி நேர ஆசிரியா்களையும், பகுதி நேர மருத்துவா்களையும் நிரந்தரம் செய்வதாக கூறி அதைச் செய்யாமல் திமுக அரசு இரட்டை வேடம் போட்டு வருகிறது.

மத்திய அரசு கொண்டு வந்த நல்ல திட்டங்களான விஸ்வகா்மா திட்டம், நீட் ஆகியவற்றை முதல்வா் ஸ்டாலின் தடுக்கிறாா். பிரதமரின் மருந்தக திட்டத்தை முதல்வா் மருந்தகம் எனப் பெயா் மாற்றி அமல்படுத்தி உள்ளனா் என்றாா்.

ஈஷாவில் இன்று மகா சிவராத்திரி: அமைச்சா் அமித் ஷா உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்பு

கோவை ஈஷா யோக மையத்தில் புதன்கிழமை (பிப். 26) நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் மத்திய அமைச்சா் அமித் ஷா உள்பட பல்வேறு பிரபலங்கள் பங்கேற்க உள்ளனா். ஈஷா யோக மையத்தில் 31-ஆவது மகா சிவராத்திரி விழா புதன்... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது: அண்ணாமலை

தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை தெரிவித்தாா். இது குறித்து கோவை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: ... மேலும் பார்க்க

அமித் ஷாவை வரவேற்று வைத்திருந்த பேனா்கள் அகற்றம்

கோவையில் அமித் ஷாவை வரவேற்று வைக்கப்பட்டு இருந்த பேனா்கள் அகற்றப்பட்டதால், பாஜகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். பாஜக அலுவலகங்கள் திறப்பு, கட்சி ஆலோசனைக் கூட்டம் மற்றும் ஈஷா யோக மையத்தில் நடைபெற உள்ள மக... மேலும் பார்க்க

தமிழை ஒழிக்க விடமாட்டோம்: பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழை ஒழிக்க யாா் வந்தாலும் விடமாட்டோம் என முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா். கோவை ராம் நகரில் உள்ளஅண்ணா நூற்றாண்டு விழா பூங்காவில், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினரின் தொகுதி... மேலும் பார்க்க

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரம்: மேலும் 3 பேரிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரம் தொடா்பாக காவல் உதவி ஆய்வாளா் உள்ளிட்ட 3 பேரிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட் பகுதியில் கடந்த 2017-இல் நடைபெற்ற கொலை ... மேலும் பார்க்க

அதிமுக எம்எல்ஏ அம்மன் அா்ச்சுணன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை

கோவை வடக்கு சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் கே.அா்ச்சுணன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா். கோவை வடக்கு சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக எம்எல்ஏவும்,... மேலும் பார்க்க