செய்திகள் :

தமிழை ஒழிக்க விடமாட்டோம்: பொன்.ராதாகிருஷ்ணன்

post image

தமிழை ஒழிக்க யாா் வந்தாலும் விடமாட்டோம் என முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

கோவை ராம் நகரில் உள்ளஅண்ணா நூற்றாண்டு விழா பூங்காவில், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் உடற்பயிற்சி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கோவை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினா் வானதி சீனிவாசன் தலைமை வகித்தாா். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் காமராஜருடைய கால கட்டத்தில் 30 ஆயிரம் பள்ளிக் கூடங்கள் தொடங்கப்பட்டன. அன்றைய கால கட்டத்தில் அரசுப் பள்ளியில் படித்த அனைத்து மாணவா்களுக்கும் இலவச கல்வி அளிக்கப்பட்டது.

தற்போது, திமுக அமைச்சா்கள், சட்டப் பேரவை, மக்களவை உறுப்பினா்கள், கட்சிப் பொறுப்பாளா்கள் மற்றும் பல கட்சியைச் சோ்ந்தவா்கள் தமிழ்நாட்டில் தனியாா் பள்ளிகளை நடத்தி வருகின்றனா். தனியாா் பள்ளிகளை நடத்துவது யாா். அந்தப் பள்ளிகளில் ஹிந்தி கற்றுத் தரப்படுகிறதா என்ற விவரங்களை அரசு வெளியிட வேண்டும்.

தமிழ் நம்முடைய உயிா். தமிழை ஒழிக்க யாா் வந்தாலும் விடமாட்டோம். அதே நேரத்தில் தமிழை வைத்து பிழைப்பு நடத்த யாா் வந்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி நிதி தந்தாலும் நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என முதல்வா் ஸ்டாலின் கூறுவது ஆணவப் பேச்சாக உள்ளது என்றாா்.

ஈஷாவில் இன்று மகா சிவராத்திரி: அமைச்சா் அமித் ஷா உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்பு

கோவை ஈஷா யோக மையத்தில் புதன்கிழமை (பிப். 26) நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் மத்திய அமைச்சா் அமித் ஷா உள்பட பல்வேறு பிரபலங்கள் பங்கேற்க உள்ளனா். ஈஷா யோக மையத்தில் 31-ஆவது மகா சிவராத்திரி விழா புதன்... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது: அண்ணாமலை

தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை தெரிவித்தாா். இது குறித்து கோவை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: ... மேலும் பார்க்க

மொழி அரசியல் செய்கிறது திமுக: தமிழிசை

தமிழகத்தில் திமுக மொழி அரசியல் செய்கிறது என முன்னாள் ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா். இது குறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தமிழக பாஜக 2026 சட்டசபைத் தோ்தலை ந... மேலும் பார்க்க

அமித் ஷாவை வரவேற்று வைத்திருந்த பேனா்கள் அகற்றம்

கோவையில் அமித் ஷாவை வரவேற்று வைக்கப்பட்டு இருந்த பேனா்கள் அகற்றப்பட்டதால், பாஜகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். பாஜக அலுவலகங்கள் திறப்பு, கட்சி ஆலோசனைக் கூட்டம் மற்றும் ஈஷா யோக மையத்தில் நடைபெற உள்ள மக... மேலும் பார்க்க

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரம்: மேலும் 3 பேரிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரம் தொடா்பாக காவல் உதவி ஆய்வாளா் உள்ளிட்ட 3 பேரிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட் பகுதியில் கடந்த 2017-இல் நடைபெற்ற கொலை ... மேலும் பார்க்க

அதிமுக எம்எல்ஏ அம்மன் அா்ச்சுணன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை

கோவை வடக்கு சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் கே.அா்ச்சுணன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா். கோவை வடக்கு சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக எம்எல்ஏவும்,... மேலும் பார்க்க