செய்திகள் :

அதிமுக பற்றி பேச விஜய்க்கு உரிமையில்லை: முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு

post image

அதிமுக பற்றி பேச விஜய்க்கு உரிமையில்லை என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், அதிமுக-பாஜக கூட்டணி பற்றி பேச விஜய்க்கு எந்த உரிமையும் இல்லை. அவர் அரசியலுக்கு புதுசு. இன்னும் விஜய் களத்துக்கே வரவில்லை. எங்கள் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தொகுதிவாரியாக செல்கிறார்.

அவரின் எழுச்சிப் பயணம் வெற்றிகரமாக உள்ளது. ஒவ்வொரு வாரமும் ஒரு கூட்டத்துக்கு மட்டுமே விஜய் செல்கிறார். 50 ஆண்டு பொன்விழா கண்ட அதிமுகவின் வரலாறு விஜய்க்கு தெரியாது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார். முன்னதாக நாமக்கல்லில் இன்று பேசிய விஜய், அதிமுக-பாஜக பொருந்தாக் கூட்டணி என்று விமர்சித்தார்.

மேலும் விஜய் தெரிவித்திருப்பதாவது, மூச்சுக்கு 300 முறை அம்மா அம்மா என்று சொல்லிக்கொண்டு, ஜெயலலிதா சொன்னதை முற்றிலும் மறந்துவிட்டு, தமிழ்நாட்டின் நலனுக்காக என்று ஒரு பொருந்தாக் கூட்டணியை அமைத்தவர்கள் போன்றும் இருக்க மாட்டோம்.

செவ்வாய் கிரகத்தில் ஐடி கம்பெனி, அமெரிக்காவுக்கு ஒற்றையடிப் பாதை... விஜய் கலகலப்பு!

இந்த பாஜக அரசு, தமிழ்நாட்டுக்கு என்ன செய்து விட்டார்கள்? நீட் தேர்வை ஒழித்தார்களா? கல்வி நிதியை முழுவதுமாக கொடுத்தார்களா? தமிழ்நாட்டுக்குத் தேவையான அனைத்தையும் சரியாகச் செய்தார்களா? பிறகு ஏன் இந்த சந்தர்ப்பவாத கூட்டணி என்று புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் உண்மையான தொண்டர்கள் கேட்கின்றனர்.

அதிமுக - பாஜக நேரடி உறவுக்காரர்களின் மீது மக்களிடையே எந்தவொரு நம்பிக்கையும் இல்லை என்பது தெரியும். இந்த திமுக குடும்பமும், பாஜகவுடன் மறைமுக உறவுக்காரர்களாக இருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள். இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தற்போது பதிலளித்துள்ளார்.

Former Minister Kadambur Raju has said that Vijay has no right to talk about AIADMK.

விஜய் பிரசாரத்தில் உயிரிழப்பு 12-ஆக உயர்வு? குழந்தைகள், பெண்கள் பலி?

கரூர்: கரூரில் விஜய் பிரசாரத்தில் கலந்துகொண்ட திரளான மக்கள் கூட்டத்தில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் 10-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்து பலியானதாகக் களத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மே... மேலும் பார்க்க

கரூர் விஜய் கூட்டத்தில் பங்கேற்ற 4 பேர் பலி? மேலும் பலர் இறந்திருக்கலாம் என அச்சம்

கரூர் விஜய் கூட்டத்தில் பங்கேற்ற 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டத்தில் மயக்கமடைந்த 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து அரசு ம... மேலும் பார்க்க

கரூரில் விஜய்யே எதிர்பார்க்காத ‘திக்.. திக்... நிமிடங்கள்’ -பிரசாரத்தில் பெருந்துயரம்!

கரூர்: கரூரில் விஜய் பிரசாரத்தில் 4 பேர் மயக்கமடைந்து பலியானதாகக் களத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அங்கு சென்ற... மேலும் பார்க்க

மணல் கொள்ளைதான் கரூரின் தீராத தலைவலி: தவெக தலைவர் விஜய்

மணல் கொள்ளைதான் கரூரின் தீராத தலைவலி என்று தவெக தலைவர் விஜய் குற்றஞ்சாட்டியுள்ளார்.கரூரில் இன்று அவர் பேசுகையில், காவல் துறை இல்லையென்றால் நான் இங்கு வந்திருக்க முடியாது. எனவே, அவர்களுக்கு என் மனமார்ந... மேலும் பார்க்க

நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

தமிழக அரசின் நிதிநிலை, வங்கிக் கடன் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், படு பாதாளத்தில் சென... மேலும் பார்க்க

புதுச்சேரியில் திமுக உறுப்பினர் சேர்க்கை

புதுச்சேரியின் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 30% வாக்காளர்களைக் திமுக உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும் என திமுக தலைமைக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலர் துரைமு... மேலும் பார்க்க