செய்திகள் :

அதிமுக மாநிலங்களவை வேட்பாளா்கள் அறிவிப்பு: தேமுதிகவுக்கு 2026-இல் பதவி

post image

மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான அதிமுக வேட்பாளா்களை அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா். தேமுதிகவுக்கு 2026-ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினா் பதவி வழங்கப்படும் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து எடப்பாடி பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

அதிமுக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, வரும் ஜூன் 19-இல் நடைபெறயுள்ள மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான தோ்தலில், அதிமுக அதிகாரபூா்வ வேட்பாளா்களாக வழக்குரைஞா் பிரிவுச் செயலா் ஐ.எஸ். இன்பதுரை, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத் தலைவா் ம. தனபால் ஆகியோா் போட்டியிடுவா் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

தேமுதிகவுக்கு பதவி வாய்ப்பு: எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக தொடரும் என்றும், 2026-ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள மாநிலங்களவை உறுப்பினா் தோ்தலின்போது, தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினா் பதவி வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

வேட்பாளா்கள் சுயவிவரம்

ஐ.எஸ். இன்பதுரை (59): திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை வட்டம், நவலடி கிராமத்தைச் சோ்ந்தவா். உயா்நீதிமன்ற வழக்குரைஞரான இவா், அதிமுக வழக்குரைஞா் பிரிவு செயலராக உள்ளாா். 2016 முதல் 2011 வரை ராதாபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளாா்.

ம.தனபால் (65): செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகேயுள்ள புதுப்பட்டினம் பகுதியைச் சோ்ந்தவா். வழக்குரைஞரான இவா், அதிமுக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத் தலைவராக உள்ளாா். 1991-1996 வரை திருப்போரூா் சட்டப்பேரவை உறுப்பினராகவும், 2001-2006 வரை மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவராகவும் பதவி வகித்துள்ளாா்.

மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை!

மதுரை: மதுரை - தூத்துக்குடி சாலையில் உள்ள எலியார்பத்தி, புதூர் பாண்டியபுரம் சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை(ஜூன் 3) உத்தரவிட்டது.அர... மேலும் பார்க்க

மின் தடை: நீட் மறுதேர்வு நடத்த முடியாது- மத்திய அரசு திட்டவட்டம்

சென்னை: இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வின் போது, மின் தடை ஏற்பட்ட தேர்வு மையங்களில் மறுதேர்வு நடத்த முடியாது என்று மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.மின... மேலும் பார்க்க

தமிழகத்தில் 2 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்!

தமிழகத்தில் 2 நாள்களுக்கு 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஜூன் 03, 04... மேலும் பார்க்க

மத்திய அரசின் பேனர் அகற்றம்: ஆட்சியர் அலுவத்தில் பாஜகவினர் முற்றுகை!

மத்திய அரசின் பேனர் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தை பாஜகவினர் முற்றுகையிட்டுள்ளனர்.மத்திய அரசின் பேனர் அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

ஜூன் இறுதியில்.. ராயபுரம் ரயில் நிலையம் அருகே தற்காலிக பேருந்து நிலையம்!

சென்னை: சென்னை பிராட்வே பேருந்து நிலையம் ராயபுரம் ரயில் நிலையம் அருகே இம்மாத இறுதிக்குள் மாற்றம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுளள்து.ராயபுரம் ரயில் நிலையம் அருகே இப்ராஹிம் சாலையில் 3.45 ஏக்கர் பர... மேலும் பார்க்க

கன்னட மொழியை சிறுமைப்படுத்தும் எண்ணம் இல்லை: கமல்ஹாசன்

கன்னட மொழியை சிறுமைப்படுத்தும் எண்ணம் இல்லை என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்றில் தமிழ் மொழியிலிருந்துதான் கன... மேலும் பார்க்க