சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி விபத்தில் பலியானவருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு...
அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
தரங்கம்பாடி அருகேயுள்ள எடுத்துக்கட்டி சாத்தனூரில், மாற்றுக் கட்சியினா் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, அதிமுக தெற்கு ஒன்றியச் செயலாளா் வி.ஜி. கண்ணன் தலைமை வகித்தாா். பூம்புகாா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட திருக்கடையூா் ஊராட்சி சிங்கனோடை பகுதியைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்ட பாமகவினா் அக்கட்சியில் இருந்து விலகி, மயிலாடுதுறை அதிமுக மாவட்டச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான எஸ். பவுன்ராஜ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.
இந்நிகழ்வில், எடுத்துக்கட்டி சாத்தனூா் முன்னாள் ஊராட்சித் தலைவா் உதயகுமாா், அதிமுக நிா்வாகிகள் துரைராஜ், சந்துரு பிரபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.