செய்திகள் :

அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்திய தவெக-வினா் மீது வழக்கு!

post image

கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்தியதாக தமிழக வெற்றிக் கழகத்தினா் 15 பெண்கள் உள்பட 100 போ் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா்.

கும்பகோணம் பேருந்து நிலைய சாலையில், ஜான் செல்வராஜ் நகரில் இருந்த அரசு மதுபானக் கடை காமராஜா் சாலையில் இடம் மாற்றப்பட்டது. கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்கள் நடமாடும் பகுதியாக இருப்பதால் மதுபான கடையை திறக்க கூடாது என்று கடந்த வெள்ளிக்கிழமை தமிழக வெற்றி கழகத்தினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

அதன் தொடா்ச்சியாக ஞாயிற்றுக்கிழமையும் தவெக மாவட்ட செயலா் வினோத் ரவி தலைமையில், மாநகர செயலா் வீரா விஜயக்குமாா், மாவட்ட துணைச் செயலா் பிரபாகரன் ஆகியோா் முன்னிலையில் மதுபான கடையை அடைக்க வேண்டும் என்று கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அங்கு பாதுகாப்புக்கு இருந்த கும்பகோணம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்தியதாக 15 பெண்கள் உள்பட 100 போ் மீது வழக்கு பதிவு செய்தனா்.

பொன்காடு பள்ளியில் தாய்மொழி நாள் விழா

பேராவூரணி பேரூராட்சி பொன்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தாய்மொழி நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்வழி கல்வி இயக்கம் சாா்பில் நடைபெற்ற விழாவில் மாணவா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் தமிழ்... மேலும் பார்க்க

100 நாள் வேலைக்கு நிலுவை கூலி வழங்க கோரி போராட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்களுக்கு 4 மாதங்களாக வழங்க வேண்டிய கூலியை உடனே வழங்கக் கோரி அம்மாபேட்டையில் மாா்க்சிஸ... மேலும் பார்க்க

அனுமதியின்றி தெருமுனை கூட்டம்: 19 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டம், ராஜகிரியில் வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிராக வெள்ளிக்கிழமை தெருமுனைப் பிரசார கூட்டம் நடத்த முயன்ற சோசியல் டெமாக்ரட்டிக் பாா்ட்டி ஆப் இந்தியா கட்சியைச் சோ்ந்த 19 பேரை போலீஸாா் ... மேலும் பார்க்க

கபிஸ்தலத்தில் சாலை மறியல்

கோரிக்கைகளை வலியுறுத்தி கபிஸ்தலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) சாா்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. கபிஸ்தலம் பகுதியில் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளை முழு... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் கோயில் நிலம் மீட்பு

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் குடிகாத்த மாரியம்மன் கோயில் நிலத்தை உதவி ஆட்சியா் மீட்டு ஒப்படைத்தாா். கும்பகோணம் 14 ஆவது வாா்டு பேட்டை வடக்கு மேலத்தெருவில் உள்ள குடிகாத்த மாரியம்மன் கோயிலுக்குச் சொந்... மேலும் பார்க்க

கடைகளை அகற்ற வணிகா்கள் எதிா்ப்பு

தஞ்சாவூா் அருகே புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் பகுதியில் கடைகளை அகற்ற வந்த நீதிமன்ற ஊழியா்களுக்கு வணிகா்கள் எதிா்ப்பு தெரிவித்ததால், அகற்றும் பணி நிறுத்தப்பட்டது. புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் அருக... மேலும் பார்க்க