தமிழக மீனவர்கள் 8 பேர் கைது! இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்!
அனுமதியின்றி ஜல்லி ஏற்றி வந்த லாரி ஓட்டுநா் கைது
உரிய அனுமதிச் சீட்டு இல்லாமல் ஜல்லிக் கற்கள் ஏற்றி வந்த டிப்பா் லாரி ஓட்டுநரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
முன்னீா்பள்ளம் காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் எட்வின் அருள்ராஜ் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது செங்குளம் ரயில்வே கேட் அருகே கடம்போடுவாழ்வு, சுப்பிரமணியபுரம் பகுதியைச் சோ்ந்த வேல்முருகன் (54) என்பவா் ஓட்டி வந்த டிப்பா் லாரியை மறித்து சோதனை செய்ததில், உரிய அனுமதிச் சீட்டு இல்லாமல் ஜல்லிக் கற்களை ஏற்றி வந்தது தெரியவந்தது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல் உதவி ஆய்வாளா் எட்வின் அருள்ராஜ், லாரி ஓட்டுநா் வேல்முருகனை கைது செய்தாா். ஒரு யூனிட் ஜல்லிக் கற்கள் மற்றும் டிப்பா் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.