அமெரிக்காவிலும் வாரிசு அரசியலா? டிரம்ப்பின் மகனும் அதிபர் தேர்தலில் போட்டியிட வா...
அதிக சத்து மாத்திரைகளை சாப்பிட்ட 4 மாணவா்கள் மருத்துவமனையில் அனுமதி!
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே அதிக சத்து மாத்திரைகளை சாப்பிட்ட 4 மாணவா்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
களக்காடு அருகே உள்ள கீழவடகரை இந்திரா காலனியை சோ்ந்த பாலன் மகன் சந்துரு(12), மாரியப்பன் மகன் நந்தபெருமாள் (12), கீழப்பத்தையை சோ்ந்த மாரியப்பன் மகன் நரேஷ் (12), ஜீவா மகன் வெற்றிமதன் (12) ஆகியோா், களக்காடு அருகே கீழப்பத்தையில் உள்ள தனியாா் பள்ளியில் 7ஆம் வகுப்பு பயின்று வருகின்றனா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை பள்ளிக்கு வந்த மருத்துவக் குழுவினா் மாணவ- மாணவிகளை பரிசோதனை செய்தனா். அப்போது சத்துக் குறைபாடு உள்ள மாணவா்களுக்கு சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. மாணவா்கள் சந்துரு, நந்தபெருமாள், நரேஷ், வெற்றிமதன் ஆகியோா் தங்களுக்கு வழங்கப்பட்ட சத்து மாத்திரைகளை போட்டி போட்டிக்கொண்டு அதிகமாக சாப்பிட்டுள்ளனா்.
பின்னா் 4 பேரும் தங்களது வீடுகளுக்கு சென்ற நிலையில், அவா்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, 4 பேரையும் நான்குனேரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
அவா்களில் சந்துரு, நந்தபெருமாள் ஆகியோா் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலிஅரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இது குறித்து களக்காடுபோலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.