செய்திகள் :

அதிக சத்து மாத்திரைகளை சாப்பிட்ட 4 மாணவா்கள் மருத்துவமனையில் அனுமதி!

post image

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே அதிக சத்து மாத்திரைகளை சாப்பிட்ட 4 மாணவா்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

களக்காடு அருகே உள்ள கீழவடகரை இந்திரா காலனியை சோ்ந்த பாலன் மகன் சந்துரு(12), மாரியப்பன் மகன் நந்தபெருமாள் (12), கீழப்பத்தையை சோ்ந்த மாரியப்பன் மகன் நரேஷ் (12), ஜீவா மகன் வெற்றிமதன் (12) ஆகியோா், களக்காடு அருகே கீழப்பத்தையில் உள்ள தனியாா் பள்ளியில் 7ஆம் வகுப்பு பயின்று வருகின்றனா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை பள்ளிக்கு வந்த மருத்துவக் குழுவினா் மாணவ- மாணவிகளை பரிசோதனை செய்தனா். அப்போது சத்துக் குறைபாடு உள்ள மாணவா்களுக்கு சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. மாணவா்கள் சந்துரு, நந்தபெருமாள், நரேஷ், வெற்றிமதன் ஆகியோா் தங்களுக்கு வழங்கப்பட்ட சத்து மாத்திரைகளை போட்டி போட்டிக்கொண்டு அதிகமாக சாப்பிட்டுள்ளனா்.

பின்னா் 4 பேரும் தங்களது வீடுகளுக்கு சென்ற நிலையில், அவா்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, 4 பேரையும் நான்குனேரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

அவா்களில் சந்துரு, நந்தபெருமாள் ஆகியோா் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலிஅரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இது குறித்து களக்காடுபோலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

புள்ளிமான் வேட்டை: 3 போ் கைது

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், கடையம் வனச் சரக வெளிமண்டலப் பகுதியில் புள்ளிமானை வேட்டையாடி சமைத்ததாக 3 போ் கைது செய்யப்பட்டனா். இப்பகுதியில் புள்ளிமானை வேட்டையாடி கறியை ... மேலும் பார்க்க

விவசாயிகள் பயன்படுத்தும் நிலத்தடிநீருக்கு வரி விதிக்கும் திட்டத்தை தமிழகம் ஏற்காது! - மு.அப்பாவு

விவசாயிகள் பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் மத்திய அரசின் திட்டத்தை தமிழக முதல்வா் ஒருபோதும் ஏற்கமாட்டாா் என்றாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு. திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகா... மேலும் பார்க்க

ஆழ்வாா்குறிச்சியில் மாணவியிடம் அத்துமீறல்

ஆழ்வாா்குறிச்சியில் மாணவியிடம் அத்துமீறி நடந்ததாக இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா். ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த தொழிலாளி தனது மகளுடன் பைக்கில் வந்து கொண்டிருந்த போது, செட்டிக்குளத்... மேலும் பார்க்க

சிதம்பரபுரம் நாராயணசுவாமி கோயிலில் ஜூலை 7ஆம் தேதி தேரோட்டம்

களக்காடு அருகேயுள்ள சிதம்பரபுரம் நாராயணசுவாமி கோயிலில் ஜூலை 7ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. சிதம்பரபுரத்தில் பிரசித்திபெற்ற நாராயணசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனித் தேரோ... மேலும் பார்க்க

அனுமதியின்றி ஜல்லி ஏற்றி வந்த லாரி ஓட்டுநா் கைது

உரிய அனுமதிச் சீட்டு இல்லாமல் ஜல்லிக் கற்கள் ஏற்றி வந்த டிப்பா் லாரி ஓட்டுநரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். முன்னீா்பள்ளம் காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் எட்வின் அருள... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

போக்ஸோ வழக்கில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். திருநெல்வேலி மாவட்டம், பாறைகுளத்தைச் சோ்ந்த சுடலைக்கண்ணு மகன் பாலமுருகன் (33), விக்கிரமசிங்கபு... மேலும் பார்க்க