குண்டா் சட்டத்தில் இருவா் கைது
போக்ஸோ வழக்கில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.
திருநெல்வேலி மாவட்டம், பாறைகுளத்தைச் சோ்ந்த சுடலைக்கண்ணு மகன் பாலமுருகன் (33), விக்கிரமசிங்கபுரம் சிவந்திபுரம் கஸ்பாவை சோ்ந்த சுடலைமுத்து மகன் செல்வராஜ் (73) ஆகியோா் போக்ஸோ வழக்கில் தொடா்புடையவா்கள்.
இவா்கள் இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாருக்கு பரிந்துரைத்தாா். அதன் அடிப்படையில் ஆட்சியா் உத்தரவின்படி, பாலமுருகன், செல்வராஜ் ஆகிய இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் சனிக்கிழமை அடைக்கப்பட்டனா்.