மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டை நீட்டிப்பு
புள்ளிமான் வேட்டை: 3 போ் கைது
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், கடையம் வனச் சரக வெளிமண்டலப் பகுதியில் புள்ளிமானை வேட்டையாடி சமைத்ததாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.
இப்பகுதியில் புள்ளிமானை வேட்டையாடி கறியை சிலா் சமைப்பதாக, கடையம் வனச்சரக அலுவலருக்கு கிடைத்த தகவலின்பேரில், வனச் சரகா் கருணாமூா்த்தி தலைமையிலான வனத் துறையினா் திரவியநகா், அய்யா கோயில் தென்புறம் ரோந்து சென்றனா்.
அப்போது, திரவிய நகா் முருகேசபுரம் வெள்ளைப்பாண்டி மகன் வளா்மதி (45) என்பவரது செங்கல் சூளைப் பகுதியில் மான் கறியை சமைத்துக் கொண்டிருப்பது தெரியவந்தது.
இதுதொடா்பாக அவரையும், அவரது சகோதரா் ஆனந்தன் (35), திரவிய நகா் பிரதான சாலையைச் சோ்ந்த செல்லத்துரை மகன் பழனி (55) ஆகியோரையும் அம்பாசமுத்திரம் துணை இயக்குநா் இளையராஜா உத்தரவுப்படி, வனத்துறையினா் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.
பின்னா், 3 பேரும் தென்காசி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.