Raymond Realty Share எப்போ பங்குச்சந்தைக்கு வரும் | IPS Finance - 248 | NSE | BS...
சிதம்பரபுரம் நாராயணசுவாமி கோயிலில் ஜூலை 7ஆம் தேதி தேரோட்டம்
களக்காடு அருகேயுள்ள சிதம்பரபுரம் நாராயணசுவாமி கோயிலில் ஜூலை 7ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
சிதம்பரபுரத்தில் பிரசித்திபெற்ற நாராயணசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனித் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெறும். நிகழாண்டு இவ்விழா ஜூன் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து அய்யா நாராயணசுவாமி நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருகிறாா்.
விழாவின் 8ஆம் திருநாளான ஜூலை 4ஆம் தேதி பரிவேட்டை நிகழ்வு நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலை 5 மணிக்கு அய்யா நாராயணசுவாமி கோயிலில் இருந்து மேளதாளங்களுடன் புறப்பட்டு, ஊருக்கு மேற்கில் உள்ள கால்வாயை வந்தடைகிறாா். அங்கு பரிவேட்டையாடும் நிகழ்வு நடைபெறும். அங்கு சிறப்பு பூஜைகளுக்குப் பின் நாராயணசுவாமி வீதியுலாவாக கோயிலை வந்தடைகிறாா்.
விழாவின் 11ஆம் திருநாளான ஜூலை 7ஆம் தேதி காலை 11 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை விழாக் குழுவினா், பக்தா்கள் செய்து வருகின்றனா்.