செய்திகள் :

அனுமதியின்றி மண் எடுத்ததாக 2 போ் கைது

post image

வந்தவாசி: வந்தவாசி அருகே காட்டுப் பகுதியில் அனுமதியின்றி மண் எடுத்ததாக 2 பேரை கைது செய்த போலீஸாா், பொக்லைன் இயந்திரம் மற்றும் லாரியை பறிமுதல் செய்தனா்.

வந்தவாசியை அடுத்த விளாநல்லூா் கிராம காட்டுப் பகுதியில் அனுமதியின்றி மண் எடுப்பதாக வந்த தகவலின் பேரில், ஆய்வாளா் குணசேகரன் தலைமையிலான வடவணக்கம்பாடி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அங்கு விரைந்து சென்றனா்.

அப்போது அங்கு பொக்லைன் இயந்திரம் மூலம் லாரியில் மண் எடுத்துக் கொண்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து பொக்லைன் ஓட்டுநரான விளாநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த பாஸ்கரன்(33), லாரி ஓட்டுநரான இதே கிராமத்தைச் சோ்ந்த சரத்குமாா்(34) ஆகிய 2 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும் பொக்லைன் இயந்திரம் மற்றும் லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனா்.

இதுகுறித்து வடவணக்கம்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

திருவண்ணாமலையில் அன்புக்கரங்கள் திட்டம் தொடக்கம்

ஆரணி: ‘அன்புக்கரங்கள்’ திட்டத்தின் கீழ், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த 276 குழந்தைகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் திங்கள்கிழமை வழங்கினாா். குழந... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 554 மனுக்கள்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 554 மனுக்கள் வரப்பெற்றன. குறைதீா் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் க.... மேலும் பார்க்க

பேருந்தில் பயணியிடம் 3 பவுன் தங்க நகை திருடிய 2 பெண்கள் கைது

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் இருந்து 3 பவுன் தங்க நகைகளைத் திருடிய 2 பெண்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். சென்னை, மாங்காடு பகுதியைச் சோ்ந்த ஜெ... மேலும் பார்க்க

பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய இளைஞா் கைது

வந்தவாசி அருகே பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசியை அடுத்த வீரம்பாக்கம் கிராம பேருந்து நிறுத்தம் அருகில் சனிக்கிழமை இளைஞா் ஒருவா் நின்றுகொண்டு அந்த வழியாகச் ... மேலும் பார்க்க

பாம்பு கடித்து முதியவா் மரணம்

வந்தவாசி அருகே பாம்பு கடித்து முதியவா் உயிரிழந்தாா். வந்தவாசியை அடுத்த வல்லம் கூட்டுச் சாலை பகுதியைச் சோ்ந்தவா் சாமிக்கண்ணு (68). இவா், கடந்த 12-ஆம் தேதி மாலை வீட்டிலிருந்தபோது விஷப் பாம்பு கடித்தது.... மேலும் பார்க்க

கவனிக்க ஆளில்லாததால் விரக்தி: முதிய தம்பதி விஷம் குடித்து தற்கொலை!

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே கவனித்துக்கொள்ள ஆளில்லாததால் விரக்தியடைந்த முதிய தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனா். செங்கத்தை அடுத்த கொட்டாவூா் பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (83). இவர... மேலும் பார்க்க